அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோ கெமிக்கல் பசுமை எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட துறை களில், 1.70 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது - எங்களது முக்கிய வணிக நடவடிக்கையான, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில், தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். அதே சமயம், பெட்ரோ கெமிக்கல்ஸ், காஸ், பசுமை எரிசக்தி உள்ளிட்டவற்றிலும் சரிசமமாக கவனம் செலுத்தி வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரி சக்தி வாயிலாக, 2025ம்ஆண்டுக்குள் 2 ஜிகா வாட் மின் உற்பத்தி திறனும், 2035க்குள், 10 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனும் கொண்ட கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.அடுத்தஐந்துஆண்டுகளில், எங்களது 6,000சில்லரைஎரிபொருள்விற்பனைநிலையங்களில், நான்குசக்கரவாகனங்களுக்குகான, விரைவான சார்ஜிங் வசதியை வழங்கும் சார்ஜிங் நிலையங்களையும் அமைக்க உள்ளோம் என்று கூறினார்.
நம்மில் பலர் உணவை வேக வேகமாக சாப்பிடும் வழக்கம் உடையவர்களாக உள்ளார்கள். சிலர் உணவை ரசித்து, ருசித்து வெகுநேரம் சாப்பிடுபவர்களாக உள்ளார்கள். சிலர் பசித்தாலும் பசிக்காவிட்டாலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். சிலர் உணவின் மீது ஆர்வம் இல்லாமல் கடனே என்று சாப்பிடுவார்கள். சிலர் புத்தகத்தைப் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். மற்றும் சிலர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்தவண்ணம் என்ன உணவை சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றிய சிந்தனையின்றி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விளக்குவதுதான் இந்த பதிவு.‘மென்றுதின்பவன் நூறாண்டு வாழ்வான்’ என்பது முதுமொழி. உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்றொரு முறை இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சாப்பிடும்போது வேறு எந்த சிந்தனையும் இருக்கவே கூடாது. சாப்பாட்டில் மட்டுமே நம் கவனம் முழுக்க இருக்க வேண்டும். உணவினை ரசித்து, ருசித்து முடிந்த அளவிற்கு மென்று சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு நன்கு அரைபட வேண்டும். மேலும், அதோடு உமிழ்நீரும் போதிய அளவு கலந்து உள்ளே செல்ல வேண்டும். அப்போதுதான் உணவும் எளிதில் ஜீரணமாகும். நாம் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமானால் வியாதிகள் அவ்வளவு சுலபத்தில் நம்மை அணுகாது.
மழையின் காரணமாக, ஜன்னலை திறக்க முடியவில்லை என்றால், கோல மாவுடன், உப்பு தூள் கலந்து, ஜன்னல் விளிம்பில் தூவினால் எளிதாக திறக்கலாம். மழை காலத்தில் தரை குளிர்ச்சியாய் இருந்தால், தரையில், நியூஸ் பேப்பரை விரித்து. அதன் மேல் பாயை விரித்து படுத்தால். குளிரோ அல்லது தரையின் குளிர்ச்சியோ தெரியாது. ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை மறைந்து போகும்.பால்,காய்கறிகள், உலர்ந்த பழங்கள், தானியங்கள், பிஸ்கட்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்.செல்போன் சார்ஜ், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.காற்று, மழையின்போது மரம் அடர்ந்த சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.வெளியே செல்லும்போது குடை. மழை கோட், நீர் புகா பைகளை எடுத்துச் செல்லவும்.ஏடிஎம்களில் அடிப்படை தேவைக்கான பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
எத்தனை பேருக்கு தெரியும் நம் இந்தியாவின் தேசியக்கொடியை வடிவமைத்தவர் ஒரு இஸ்லாமிய பெண் என்று, ஆமாம் இஸ்லாமிய பெண் ஷுரையா தியாப்ஜி (SURAIA THIYAPJI)என்பவர்தான் ,நம் தேசியக்கொடியை வடிவமைத்தவர். அவருக்கு துனணயாக இருந்தவர் அவரது கணவர் ஃபக்ரூதீன் தியாப்ஜி.
மழை காலத்தில் குழந்தைகளிடம் சொல்லுங்கள்.தெருவில் மற்றும் சாலைகளில் செல்லும்போதுமின் கம்பம் அருகில் செல்வக் கூடாது .மின் கம்பத்தினை தொடக்கூடாது.அறுத்து விழுந்த மின் கம்பிகளை மிதிக்க கூடாது. தெரு மற்றும் சாலையில் உள்ள பள்ளங்களில்தேங்கி கிடக்கும் மழை நீரில் நடக்கக்கூடாது.
கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம்.காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம்.அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரழிவு வரலாமெனவும் அர்த்தம். பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம். கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம் கைவிரல் நகங்களின் மேல் மெல்லய கருப்பு கோடு அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .
இடி, மின்னல் தாக்கும் போது திறந்த வெளியில் நிற்கக்கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான கட்டிடம், உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.மின்வாரியத்தின் மின்மாற்றிகள், துணை மின்நிலையத்துக்கு போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிப்பதையும், அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.மின்கம்பங்கள், அவற்றைத் தாங்கும் கம்பிகளை தொடுவதையும், மின் கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதையும் தவிர்க்கவும்.மின்சார வயர்கள் பதிக்கப்பட்டுள்ள சுவர்களில் ஆணிஅடிக்க வேண்டாம். மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அந்தத் தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வடு -மாம்பிஞ்சு மூசு - பலாப்பிஞ்சு கவ்வை -" எள்பிஞ்சுகுறும்பை -தென்னை, பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு நுழாய் - இளம்பாக்கு கருக்கல் -இளநெல் கச்சல் - வாழைபிஞ்சு
ரூ21,000 கோடி தன்னலமற்ற நன்கொடை வேதாந்தா குழுமத்தின் உரிமையாளரான திரு. அனில் அகர்வால், தனது வாழ்நாள் சம்பாத்தியத்தில் 75 சதவீதத்தை கல்வி நோக்கங்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.அவர்கள் இந்தியாவில் ஆக்ஸ்போர்டை விட பெரிய பல்கலைக்கழகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்.21000 கோடி என்பது இன்றுவரை இந்தியர் ஒருவர் வழங்கிய மிகப் பெரிய தொகையாகும். அனில் ஜிக்கு பாராட்டுக்கள் .
ஒருவர் அதிகமாக SORRY என்ற சொல்லை பயன்படுத்துவது அவரது மன பலவீனத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.நாம் மனதார விரும்பாவிட்டாலும் SORRY சொல்ல பழகிவிட்டோம். உளவியல் ரீதியாக, ஒருவர் தவறு செய்யாமல் SORRY சொல்லும் போது மற்றவர்களின் நம்பிக்கையை அவர் எளிதில் பெறுகிறார். அதிகமாக SORRY என்ற சொல்லை பயன்படுத்துவது அவரது மன பலவீனத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அதிகமாக SORRY சொல்வதற்கு காரணம் மற்றவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என்பதாகவும் இருக்கலாம். ஒரு இடத்தில் மன்னிப்பு தெரிவிப்பதற்கு மாற்றாக நாம் SORRY என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். SORRY என்ற சொல்லை பலரும் மன்னிப்பு என்ற சொல்லின் மாற்றாகவே கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன ?வருந்துவது, வருத்தம் தெரிவிப்பது அல்லது நமது தவறுக்காக வருத்தப்படுவதுதான் SORRY என்பதன் உண்மையான பொருள். மன்னிக்கவும் என்று சொன்ன பிறகு, அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். ‘SORRY’ என்ற வார்த்தை ஆங்கில வார்த்தையான ‘sarig’ அல்லது ‘sorrow’ என்பதிலிருந்து உருவானதாகும். அதன் பொருள் ‘கோபம் அல்லது அதிருப்தி’ என்பதாகும்.தவறு செய்த பிறகு வருத்தம், சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த SORRY என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.5பெரும்பாலான மக்கள் இந்த விஷயங்களுக்காக தற்போது SORRY என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. மன்னிப்பு கேட்பதற்காகவே அந்த சொல்லை பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. இதே போன்ற சொற்கள் பழைய ஜெர்மானிய சிராக் மற்றும் நவீன ஜெர்மானிய சிராகஸ், இந்தோ ஐரோப்பிய சைவ் போன்ற பல மொழிகளில் காணப்படுகின்றன.சொல்லப்போனால், SORRY என்பதன் முழுமையான வடிவத்தை சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் நாம் பார்த்திருக்கலாம். அதன் படி பார்த்தால் SORRY (Someone Is Really Remembering You) என்றால் யாரோ உங்களை நிஜமாகவே நினைக்கிறார்கள் என்பதே ஆகும். ஆனால் எந்த மொழியியலாளர்களும் இதனை உறுதி செய்யவில்லை.சதர்ன் ஓரிகான் பல்கலைக்கழகத்தின் மொழியியலாளரான எட்வின் பாட்டிஸ்டெல்லா இதுகுறித்து கூறுகையில், “SORRY என்ற வார்த்தையை மக்கள் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் உண்மையில் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.