25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 30, 2024

“லித்தியம்” வெள்ளை தங்கம்

மின்சார வாகனத்துக்கான பேட்டரி தயாரிப்பதற்கு லித்தியம் பயன்படுகிறது. இது'வெள்ளை தங்கம்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பெரிய அளவிலான லித்தியம் இருப்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 'சால்டன் கடல்' ஏரியின்கீழ்பகுதியில் காணப்படுகிறது எனவிஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியின் நீர்பிடிப்பு பரப்பளவு 21,700 சதுர கி.மீ. ஏரியின் கீழ் பகுதியில்1.8 கோடி டன் அளவு லித்தியம் உள்ளது.இது35.70 கோடி மின்சார வாகன பேட்டரி தயாரிப்பதற்கு சமம். இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் கோடி இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் .

Aug 29, 2024

சாதித்த ஜப்பான்

ஜப்பான் தன் நிலவுப்பயணத்தை2007ல் துவக்கியது. எச்2ஏ ராக்கெட்டில்'சைலன்ஸ்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த மூன்று ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வு செய்தது. அடுத்து 2022 டிச. 11ல் நிலவுக்கு 'ஹகூடாஆர்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த லேண்டர் தொழில்நுட்ப கோளாறால் நிலவின் தரையில் மோதி நொறுங்கியது. பின்2023 செப்.6ல் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்திலுள்ள லேண்டர்2024 ஜன.19ல் நிலவில் தரையிறங்கியது. இச்சாதனையை நிகழ்த்திய 5வது நாடானது.

Aug 28, 2024

Zomato CEO., சொத்துமதிப்பு

பில்லியனர் பட்டியலில் Zomato நிறுவனர் மற்றும் CEO தீபிந்தர் கோயல் இணைந்துள்ளார்.உணவு விநியோக நிறுவனமான Zomato-வின் பங்குகள் திடீரென உயர்ந்ததைத் தொடர்ந்து, தீபிந்தர் கோயலின் சொத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.இந்நிறுவனத்தின் பங்குகளில் ஏற்றம் காணப்பட்டது, அதன் பிறகு நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்கு ரூ.232 ஐ எட்டியது. நிறுவனத்தின் பங்குகள்BSEயில் புதிய52 வாரஉச்சத்தை எட்டியுள்ளன.Moneycontrol அறிக்கையின்படி, ஜூலை2023 முதல் நிறுவனத்தின் பங்குகள்300 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.1.8 டிரில்லியனைத் தாண்டியது மற்றும் கோயல்41 வயதில் பில்லியனரானார்.தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு ரூ.8,300 கோடிக்கும் அதிகமாகும். தற்போது,அவர் நிறுவனத்தில்4.24 சதவீத பங்குகளை வைத்துள்ளார், இது36.95 கோடி பங்குகளுக்கு சமம்.இந்நிறுவனம்2023 முதல் பங்குச் சந்தையில்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திங்களன்றுநிறுவனத்தின் சந்தை மூலதனம்ரூ.2 டிரில்லியனைத் தாண்டியது.

Aug 27, 2024

அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற, வேண்டியவை…

போனை இடது காதில் வைத்து பேசுங்கள்.மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது.மாலை 3 மணிக்கு மேல், புல் கட்டு கட்டக்கூடாது(வயிறு முட்ட). தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்! (குடி தண்ணீர்).தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை.மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே படுக்கக்கூடாது. (குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்).

Aug 27, 2024

வண்ண தீப்பொறி எப்படி ஏற்படும்

மரக்கட்டையால் உருவாக்கப்படும் தீ. சிவப்பு நிறத்தில் எரிந்தாலும், ஆங்காங்கே ஆரஞ்சு நிற தீச் சுடரும் தெரியும். மரத்திலுள்ள சோடியம் எரியும்போது, எழும் நிறமே இது. ஒவ்வொரு வேதிப்பொருளும் வெப்பநிலைக்கு ஏற்ப பல நிறங்களில் ஒளியை உமிழும். அதிக வெப்பநிலையில் சோடியம் ஆரஞ்சு நிற ஒளியை உமிழும். தீபாவளிப் பட்டாசில் வண்ணத் தீப்பொறி வருவதும் இதே போலதான். ஆனால் சமையல் காஸ் அடுப்பு1500 டிகிரி வெப்பநிலையில் எரியும் போது நீல, ஊதா நிற தீப்பிழம்பு ஏற்படும். இதற்கு இதில் உள்ள ஹைட்ரோகார்பன் மூலக்கூறு காரணம்.

Aug 27, 2024

3 ஆண்டுகள் வரை தூங்கும் நத்தை

நத்தை 3 ஆண்டுகள் வரை தூங்கும் 'சுபாவம் கொண்டவை. எதற்காக அவை அவ்வளவு காலம் தூக்கத்திற்கு எடுத்துக்கொள்கின்றன தெரியுமா?நத்தைகள் உயிர் வாழ ஈரப்பதம் தேவை. அதற்கேற்ப வானிலை ஒத்துழைக்கவில்லை என்றால் நீண்ட கால தூக்கத்திற்கு தயாராகி விடுகின்றன.

Aug 26, 2024

தமிழர்களுக்குமட்டும் வருமான வரிரிட்டர்ன் ரீபண்ட் வரவில்லைபுகார்கள் வைக்கப்படுகின்றன

வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் முடிந்துவிட்டது. ஜூலை கடைசியோடு இதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. ஏற்கனவே இதற்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கு பணம் வந்துவிட்டது.இப்படிப்பட்ட நிலையில் தமிழர்களுக்கு மட்டும் வருமான வரி ரிட்டன் ரீபண்ட் வரவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் புகார் வைத்துள்ளார். அதில்,IncomeTaxreturn வடக்கில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் யாரை கேட்டாலும் வந்துவிட்டது என்கிறார்கள்.தமிழ்நாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெருன்பான்மையாக இன்னும் வந்து சேரவில்லை. யாருக்காவது வந்திருக்கா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.பல தமிழர்கள் தங்களுக்கு ரீபண்ட் வரவில்லை என்று கூறியுள்ளது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.இதற்கான பதிலில் தமிழர்கள் பலரும் தங்களுக்கு இன்னும் வரவில்லை.ஒரு மாதத்திற்கும் மேலாக பணம் வரவில்லை என்று கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளனர்.வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் பலருக்கும் கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டது.குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. சிலருக்கு வருமான வரி ரிட்டர்ன்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான இன்டிமேஷன் அளிக்கப்பட்டுவிட்டது.முதலாவதாக, வருமான வரி ரிட்டர்ன்(ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவல் கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்..வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் சோதனையை செய்யுங்கள்.https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறை பக்கத்திற்கு செல்லவும். அதில் இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் (ITR) ஸ்டேட்டஸ் பக்கத்தில் சென்று உங்கள் லாகின் விவரங்களை கொடுத்து லாகின் செய்யவும். இதில் 'இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்(ITR) ஸ்டேட்டஸ்'பகுதியை கிளிக் செய்தால் அதில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். அதன்பின் இ வெரிஃபிகேஷன் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். கடைசியாக processing மட்டும் கிரீன் ஆகாமல் இருக்கும். அப்படி இருந்தால் அதன் அர்த்தம் விரைவில் உங்கள் ரிட்டர்ன் சோதனை செய்யப்பட்டு பணம் கொடுக்கப்படும்.ஒருவேளை அது கிரீன் கலரில் இருந்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் மெயிலை சோதனை செய்யவும். அதில், இன்கம் டேக்ஸ் நோட்டிஸ், விளக்கம் கேட்டு மெயில் எதுவும் வந்துள்ளதா என்று பார்க்கவும். ஏப்ரல் 1 முதல் ஜூலை21 வரை வருமான வரித் துறை அதிக அளவு தொகையை கொடுத்துள்ளது.கடைசியாக தாக்கல் செய்த பலருக்கு இந்த வாரம் கொடுக்கப்படும்.

Aug 24, 2024

இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியல்

Barclays-Hurun India-வின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2024 பட்டியலின்படி, அம்பானி குடும்பத்தின் மதிப்பு ரூ. 25.75 டிரில்லியன் (ரூ.25,750,000,000,000) ஆகும்.இதுஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 10 சதவீதம் ஆகும்.பார்க்லேஸ்ஹுருன் இந்தியா அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையின் கீழ் அம்பானி குடும்ப வணிக சாம்ராஜ்யம் ஆற்றல், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் செயல்படுகிறது. பார்க்லேஸ்ஹுருன் இந்தியாவின் இந்த தரவரிசை மார்ச்20,2024 வரையிலான நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.இந்த மதிப்பீட்டில் தனியார் முதலீடு மற்றும் திரவ சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.அம்பானியின் செல்வத்தின் மதிப்பில் ரிலையன்ஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்கள், ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் பிற குழும நிறுவனங்களின் பங்குகளும் அடங்கும். அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது. மதிப்புமிக்க குடும்ப வணிகத்தின் பட்டியலில் ரூ.7.13 டிரில்லியன் மதிப்புடன் பஜாஜ் குடும்பம் இரண்டாவது இடத்தில் உள்ளது.புனேவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் வணிகத்தின் தலைமைப் பொறுப்பை குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை தலைவரான நீரஜ் பஜாஜ் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரூ.5.39 டிரில்லியன் மதிப்பீட்டில் பிர்லா குடும்பம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த குமார் மங்கலம் பிர்லா செய்கிறார்.இந்த நிறுவனம் உலோகம், சுரங்கம், சிமெண்ட் மற்றும் நிதி சேவைகளில் கவனம் செலுத்துகிறது.அறிக்கையின்படி, அம்பானி, பஜாஜ் மற்றும் பிர்லா ஆகிய மூன்று குடும்பங்களின் வணிகங்களின் கூட்டு மதிப்பீடு460 பில்லியன் டொலர்கள், இதுசிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கிட்டத்தட்ட சமம். 

Aug 24, 2024

டி-மார்ட் இந்திய சில்லறை விற்பனை நிறுவனம் 3 மாதங்களில் ரூ.773 கோடி லாபம் ஈட்டியது

டிமார்ட்(DMart) என்ற பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தி வரும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் இந்த நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டின் நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட லாபம் ரூ.773.68 கோடியாக இருந்தது.விற்பனை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஆண்டு இதேகாலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.658.71 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 17.45 சதவீத வளர்ச்சியைக் காட்டியது.மறுஆய்வுக் காலத்தில், நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு18.57 சதவீதம் அதிகரித்து ரூ.11,865.44 கோடியிலிருந்து ரூ.14,069.14 கோடியாக அதிகரித்துள்ளது.இயக்க செலவுகள்18.62 சதவீதம் அதிகரித்து ரூ.13,056.61 கோடியாக உள்ளது.இதன்போது,அவென்யூசூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, எம்.டி.நெவில் நோரோன்ஹா, கடந்த காலாண்டில் ஆறு புதிய கடைகள்திறக்கப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 371-ஐஎட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

Aug 23, 2024

நீல சபையர் விழா ,தெரியுமா?

25 ஆண்டுகள் - வெள்ளி விழா   30 ஆண்டுகள் - முத்து விழா40 ஆண்டுகள்-மாணிக்க விழா 45 ஆண்டுகள் - ரத்தின விழா50 ஆண்டுகள் - பொன் விழா55 ஆண்டுகள் - மரகத விழா60 ஆண்டுகள் - வைர விழா65 ஆண்டுகள் - நீல சபையர் விழா70 ஆண்டுகள் - பிளாட்டினம் விழா75 ஆண்டுகள் - பவள விழா80 ஆண்டுகள் - அமுத விழா100 ஆண்டுகள் - நூற்றாண்டு விழா

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 46 47

AD's



More News