25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 06, 2024

நார்வேயில் நீளமான சுரங்கச்சாலை

நார்வேயில் வெஸ்ட்லேன்ட் பகுதியில்'லியர்டல் சுரங்கச்சாலை தான் உலகில் நீளமானது. இது லியர்டல்- ஆர்லேன்ட் பகுதியை இணைக்கிறது. மலையை உடைத்து அமைத்துள்ள இச்சாலையின் நீளம் 24.51 கி.மீ. அகலம் 30 அடி. அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 80 கி.மீ. கட்டுமானப்பணி1995ல் தொடங்கி2000ல் திறக்கப்பட்டது. இப்பட்டியலில்2வது இடத்தில் ஜப்பானின் யாமேட் சுரங்கச்சாலை உள்ளது. நீளம்18.20 கி.மீ.2007ல் திறக்கப்பட்டது. மூன்றாவது இடத்தில் சீனாவின் ஜாங்னன்ஷன் சுரங்கச்சாலை (18.04 கி.மீ.) உள்ளது.

Sep 05, 2024

ஓசூரில் டாடா 'ஐ-போன்' உற்பத்திஆலை  நவம்பர் மாதம் முதல் உற்பத்தியை துவக்க வாய்ப்பு

.தமிழ்நாட்டின் ஒசூரில் கிட்டத்தட்ட 250 ஏக்கரில் டாடா எலக்ட்ரானிக்ஸ்  நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்திக்கான ஆலையை  அமைத்துள்ளது. இந்த ஆலையில், வரும் நவம்பர் மாதம் முதல் உற்பத்தி துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தொழிற்சாலையின்வாயிலாக 50,000 பேருக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பாக பெண்கள் பெரும்பான்மையோர் இதில் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் கூறப்படுகிறது.இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புக்கான 4வது உற்பத்தி ஆலையாகவும், டாடாவின்இரண்டாவதுஆலையாகவும் இது உள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கையை பொறுத் தவரையில், தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ஆப்பிள்  ஐபோன் உற்பத்தி அலைக்கு அடுத்தபடியாக இந்த ஆலை இரண்டாவது  இடத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.அடுத்த இரண்டு ,மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 5 கோடி ஐ- போன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனமும், அதன் துணை தயாரிப்பு நிறுவனங்களும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

Sep 04, 2024

மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத  உணவுகள்

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு என்பது அடிப்படையான தேவைகளில் ஒன்று. ஆரோக்கியமான உணவுகளை தேடிப்பிடித்துதான் உண்ண வேண்டிய நிலைமையில் தற்போது நாம் இருக்கிறோம். நமது முன்னோர்கள் சாப்பிட்ட உணவில் இருந்த சத்துக்களில் இப்போது பாதிதான் இருக்கிறது., பதப்படுத்தப்பட்ட உணவுகளும், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளும், மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் உணவுகளும் நமக்கு நஞ்சாக மாறி விடுகின்றன. நம் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் அதில் பிரியாணிதான் முதலிடத்தில் இருக்கும். ஆதலால் நாம் அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு பிரியாணியை சூடு படுத்தி சாப்பிடுவது. இப்படிச் சாப்பிடும்போது நமது உணவு மண்டலம் வெகுவாக பாதிப்படைந்து உடல் நலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியது என்றால் அதில் கீரை வகைகள்தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இருப்பினும், எந்த வகை கீரையாக இருந்தாலும் அதை சூடு படுத்தி சாப்பிடும்போது ஃபுட் பாய்சனாக மாறி விடுகிறது.முட்டை உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான புரதம் அதிக அளவில் இருக்கிறது. ஆனால், முட்டையை வைத்து செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்டால் அது வாயு கோளாறுகளை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடுகிறது.உருளைக்கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது கலோரிகள் குறைவாக இருந்தாலும், இவற்றை வேகவைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. உருளைக்கிழங்கு பயன்படுத்தி சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் அவை உடலுக்குத் தீங்காக மாறி விடுகிறது.கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இதை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். அதைவிட மிகவும் முக்கியம் கோழியால் செய்த உணவுகளை திரும்பத் திரும்ப சூடு படுத்தும்பொழுது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது.காளானில் உள்ள செலினியம் எலும்புகளின் உறுதித் தன்மையை ஊக்குவிக்கிறது. இரும்பு சத்து அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் காளான் உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற வயிற்று பிரச்னைகளை உண்டாக்கி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது.இரும்புச்சத்து, வைட்டமின் பி12 சத்துகளை கொண்டிருக்கும் பீட்ரூட் கிழங்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட்டை பயன்படுத்தி சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது அவை விஷமாக மாறிவிடும்.உணவுகளை அப்போதைக்கு அப்போது சமைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. 

Sep 03, 2024

செர்விடே என்ற விலங்கின குடும்பத்தை சேர்ந்த நீர் மான்

உலகில்,56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள். அழிவின் விளிம்பில் உள்ளன. இதை ஐ.நா., பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் உறுதி செய்துள்ளது. அவற்றில் ஒன்று, நீர் மான், செர்விடே என்ற விலங்கின குடும்பத்தை சேர்ந்தது. மிகச் சிறிய ஆசிய மான்.உருவத்தில் கஸ்துாரி மான் போல்இருக்கும். கொம்பு கிடையாது. கிளை மான் என்ற விலங்கினம் ஒன்று உள்ளது. இதில், ஆணுக்கு கொம்பு உண்டு, நீர் மான் இனத்தில், ஆணுக்கு, வாய் பக்கவாட்டில், கூரிய கோரைப் பற்கள் தந்தம் போல் அமைந்து இருக்கும். அது, இரண்டு அங்குலம் நீளத்தில் வளரும்.உருவ அமைப்பு தான், நீர் மான்இனத்தை பிரத்யேகமாக காட்டுகிறது. இது கிழக்காசிய நாடான தென்கொரியாவில் வளமான ஆற்றுப்பகுதியில் வாழ்கிறது. அண்டை நாடான சீனாவில் யாங்சே நதிப் பள்ளத்தாக்கிலும் காணப்படுகிறது. நீரின் அடிப்பகுதியில் வளரும்.பசுமையான தாவரங்களை விரும்பி உண்ணும். குறிப்பாக, நார்ச்சத்து உள்ள.முரடானபுற்களைஅதிகம்விரும்பும்.ஒரேநேரத்தில்பலகுட்டிகளை ஈனும். இந்த அழகிய மான் இனம் தற்போது. அழிவின் விளிம்பில் உள்ளது. இந்தியாவில்,4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள், அழிவின் விளிம்பில் உள்ளன. காடுகளை அழித்து சுற்றுலா தலங்கள் அமைப்பது, இறைச்சிக்காக, மருத்துவத்திற்காக விலங்குகளை அழித்தல், காட்டுத் தீ, சட்ட விரோதமாக வேட்டை என, காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை குறைகிறது.

Sep 02, 2024

இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவன் பரேக் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த 62 வயதாகும் கெவன் பரேக், 2013ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்தில், நிதி திட்டமிடல் மற்றும் ஆய்வுக்குழுவின் துணை தலைவராக பணிக்குச் சேர்ந்தார். அதற்கு முன்னதாக, 'தாம்சன் ராய்ட்டர், ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை திறம் பட கையாண்டுள்ளார்.மிச்சிகன் பல்கலையில் மின்சார பொறியியல் படிப்பை முடித்த அவர், சிக்காகோ பல்கலையில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவன் பரேக் நியமிக்கப்பட்டு உள்ளார்."கெவனின் அறிவாற்றல், கணிப்பு, நிதித் துறை சார்ந்த நிபுணத்துவம் ஆகியவை, அவரை ஆப்பிளின் அடுத்த சிறந்த சி.எப்.ஓ., தேர்வாக மாற்றி உள்ளது" என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

Sep 02, 2024

 முதுகெலும்பில்லாத  உயிரினம் கடற்சாமந்தி

 கடலின் அடியில் பூ போன்ற உடல் உடைய உயிரினம்கடற்சாமந்தி. இதற்கு முதுகெலும்பு கிடையாது. இவைபவளப் பாறைகளில் அமர்ந்து கொள்ளும். மணிக்கு9.91மி.மீ..தான் நகரும். உலகம் முழுதும் கடல்அடியில் காணப்பட்டாலும் குறைந்த ஆழம், வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் தான்வாழும். இதன் ஆயுட்காலம்50 முதல்100 ஆண்டுகள்என ஆய்வு தெரிவிக்கிறது. இவை பார்ப்பதற்கு சாமந்திபூவை போல இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.இதன் நீளம்1.5 செ.மீ.,10 செ.மீ., விட்டம்1 செ.மீ.,-5 செ.மீ., இதில் சில இனங்கள் 3 அடி வரை வளரும்.

Aug 31, 2024

டாடா Nano! வின் புதிய அவதாரம்

டாடாNano  கார், டாடா குழுமத்தின் கெளரவத் தலைவர் ரத்தன் டாடாவின் மனதில், சுமார்14 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண இந்தியக் குடிமகனுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது.இது இப்போது Tata Nano.ev வடிவில் வருகிறது.TataNano.EV காரின் வெளியீட்டு தேதி, விலை விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது அனைவரும் Tata Nano.ev காரின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போதைய அதிக விலை சந்தையில் மற்ற கார்களுக்கு போட்டியாக இந்த காரை குறைந்த விலையில் கொண்டு வருவதுதான் டாடா மோட்டார்ஸ் முன் உள்ள பெரிய சவால்.ஆரம்பத்தில் ரூ.1 லட்சத்தில் கிடைத்த டாடா நானோ கார், இப்போது 3 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்றும், உயர் ரக மாடலின் விலை ஏழு முதல் எட்டு லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தTataNano.ev(TataNano.ev) கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார்200,300 கிமீ வரை பயணிக்கும் திறன்கொண்டதாகதெரிகிறது.உள்நாட்டு எலெக்ட்ரிக் கார்கள் துறையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், டாடா இவிகார்களை போலவே லித்தியம் அயான் பேட்டரி பேக்கை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சந்தை. நிலையான ஏசி சார்ஜிங் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சொகுசு கார்களை ஒப்பிடும் போது,காரின் செயல்பாட்டிற்கு அடிப்படை அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்ற கார்களுக்கு போட்டியாக Tata Nano.ev இன் விலையை நிர்ணயிப்பதே உண்மையான சவால்.  

Aug 31, 2024

அமைதியின்மை, பய உணர்வுக்கு 

இந்தியாவில் வயதானவர்கள் பொருளாதாரம் இன்மையாலும் நோயினாலும் மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலை ஏற்படும் போது  பயம் தானாகவே ஏற்படுகின்றது. இதன் தாக்கத்தில் மனம் அமைதியின்மை. மனச்சோர்வு, எதற்கெடுத்தாலும் பய உணர்வு (மனச்சோர்வு, மன அழுத்தம், படபடப்பு, சீசோ பிரினியா,மேனியா) என ஏற்பட்டு மனநோய்க்கு வழிவகுக்கிறது.நல்ல ஆழ்ந்த உறக்கம் மன அமைதியை தரும் (தூக்கம் வராதவர்கள் இரவில் 6 மணி நேரமும் பகலில் 2 நேரமும் உறங்கலாம்).நல்ல சாத்வீக உணவு உட்கொள்ள வேண்டும் (உப்பு, காரம் மசாலா எண்ணெய் குறைத்து)சிறு உடற்பயிற்சி ஹார்மோன் சுரப்பை  சரி செய்து மனப்பதற்றம், பயத்தைச் சரிசெய்கிறது.தியானம் மன அமைதியை மேம்படுத்தும்.வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் உடலையும், மனதையும் உற்சாகம் பெற செய்யும்.இயற்கையுடன் உறவாட மனம் அமைதி பெறும். கடற்கரையில் உலாவுதல். பௌர்ணமி இரவில் நிலவினைப் பார்த்தல், காற்றோட் டமான இடத்தில் ஒருமணி நேர ஓய்வு எடுத்தல். செடி, கொடிகளுக்குத் தண்ணீர் விட்டுப் பராமரித்தல், நண்பர்களுடன் உரையாடுதல்  ஆகியன செய்ய மனம் அமைதி பெறும்.

Aug 31, 2024

பழையசோறு

 அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு.உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்  பட்டியலில் பழையசோறு முதலிடம் வகிக்கிறது. சோற்றில் நீர் ஊற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். • அப்படி என்ன இருக்கிறது பழையசோற்றில்...வடித்த சோற்றில் 3, 4 மி.கி. இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சோறாகும்போது, ​​இரும்புச்சத்தின் அளவு 73,91 மி.கிராமாக இருக்கும்.பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும்  கிடைக்காத வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில்அதிகமாக இருக்கும் உஷ்ணத்தைப் போக்கும்.  

Aug 31, 2024

நாகர்கோவில், To சென்னை எழும்பர், மதுரை To பெங்களுர் வந்தே பாரத் ரயில் இன்று முதல் 

நாகர்கோவில், To சென்னை எழும்பர், மதுரை To பெங்களுர் வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.வந்தேபாரத் ரயில் செப்டம்பர் 2-ம் தேதி முதல் தொடங்குகிறது. வண்டி எண் 20671 மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.00 மணிக்கு பெங்களுரு கண்டோன்மென்ட் சென்றடைகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் 20672 பெங்களுரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 46 47

AD's



More News