25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.ஆனைமுகனும் அருகம்புல் வழிபாடும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.ஆனைமுகனும் அருகம்புல் வழிபாடும்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மலர் அல்லது இலை விசேஷமாகக் கருதப்பட்டு படைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அனுமனுக்கு வெற்றிலை, அம்மனுக்கு வேப்பிலை என வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதுபோல விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக அருகம்புல் கருதப்படுகிறது.

முன்னொரு காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவன் தனது உடலில் இருந்து நெருப்பைக் கக்கி, தேவர்கள், முனிவர்கள் மற்றும் மக்களைத் துன்புறுத்தி வந்தான். இதனால் கவலை அடைந்த தேவர்கள், விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர்.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர், அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் ஏவிய அனைத்து ஆயுதங்களையும் அனலாசுரன் நெருப்பைப் பயன்படுத்தி சாம்பலாக்கினான். இதையடுத்து விநாயகர், அனலாசுரனை சிறிய உருவமாக மாற்றி விழுங்கிவிட்டார்.

ஆனால் அனலாசுரனின் கடுமையான வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிச்சலடைந்தது. இதனால் அவர் வேதனை அடைந்தார்.

விநாயகரை குளிர்விக்க தேவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். வருண பகவான் மழையைப் பொழிந்தார். இந்திரன் சந்தனத்தைப் பூசினார். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பிவிட்டார். சிவபெருமான் குளிர்ச்சியான பாம்பை விநாயகரின் இடுப்பைச் சுற்றிக் கட்டினார். ஆனால் இவை அனைத்தும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து தேவர்கள், காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். காஷ்யப முனிவர் 21 அருகம்புல் கற்றைகளை விநாயகரின் தலையில் வைத்தார். உடனே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ந்த விநாயகப் பெருமான், அருகம்புல்லைத் தனது வழிபாட்டில் சிறப்பிடம் பெறச் செய்ததாக ஐதீகம். அன்றுமுதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News