25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 18, 2025

ஓர்க்கா திமிங்கிலம் மனிதர்களிடமிருந்து நாகரிகத்தையும், புது விஷயங்க ளையும் கற்பதற்காகவே, உணவை பகிரும் 

 ஓர்க்கா திமிங்கிலம் உலகின்  மிகப்பெரிய திமிங்கலங்களுள்   ஒன்று. நார்வே. அன்டார்டிகா. அலாஸ்கா ஆகிய குளிர்ப் பிரதேசங்களைஒட்டியகடல்களில்அதிகமாகஇருக்கும்.இவைஉலகம்முழுவதும்வாழ்கின்றன.இவை மிகவும்புத்திசாலிகள்.கூட்டமாக வேட்டையாடித் தங்களுக்குள் உணவைப்பகிர்ந்துஉண்ணும்.இவைமனிதர்களுடன்உணவைப்பகிர்ந்து கொள்வது வீடியோக்களில் பதிவாகி உள்ளது.மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களில் ஓர்க்காவும் ஒன்று,  இவை தாங்கள் வேட்டையாடிய  உணவை ஆய்வுக்குச் செல்லும் மனிதர்களிடம்பழகுவதற்காக அவர்களுக்குத் தருகின்றன. மனிதர்கள் அதை ஏற்கிறார்களா, மறுக்கிறார்களா என்று கவனிக்கின்றன. மனிதர்களின் எதிர்வினையை இவை மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றன.படகுகளில் செல்பவர்கள், கரையில் இருப்பவர்களிடம் கூட, சில நேரங்களில் இவை உணவைப் பகிர முற்படுகின்றன. உலகில் வாழும் உயிரினங்களில் இவை இரண்டாவது பெரிய மூளையை உடையவை.  ஆய்வாளர்கள் மனிதர்களிடமிருந்து நாகரிகத்தையும், புது விஷயங்க ளையும் கற்பதற்காகவே, இவை பழக முற்படுகின்றன என்று கூறுகிறார்கள்.

Sep 17, 2025

 35.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊர்வன உயிரியின் தொல்லெச்சத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

இதுவரை கிடைத்த தொல்லெச்சங்களைக் கொண்டு, முதன்முதலில் ஊர்வன உயிரிகள் தோன்றியது .32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஓர் ஊர்வன உயிரியின் தொல்லெச்சத்தைக் கண்டெடுத்துள்ளனர். இது 35.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது.

Sep 17, 2025

கீடோ டயட் உணவு முறையால் இதயம் பாதிக்கப்படாது.

மாவுச்சத்தை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக புரதத்தையும் கொழுப்பையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் உணவு முறைக்குப் பெயர் கீடோ டயட் .இதனால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்த உணவு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோயை உருவாக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த யூ.சி.எல்.ஏ., மருத்துவ ஆய்வு மையம் இந்த உணவு முறையால் இதயம் பாதிக்கப்படாது என்று கண்டறிந்துள்ளது.

Sep 17, 2025

2024 YR4 எனும் விண்கல்

 வருகின்ற 2032ம் ஆண்டு 2024 YR4 எனும் விண்கல் பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியி ருந்தனர். ஆனால் இதன் இப்போதைய பாதை மாறி வருகிறது. இதனால்,இது பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

Sep 16, 2025

“அமைதி நினைவுப்பூங்கா' ஜப்பான் நாட்டின்  ஹிரோஷிமா நகரில்….'

 1945-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின்  ஹிரோஷிமா நகரம் மீது வீசப்பட்ட, அணு குண்டு தாக்குதலின் கோரம் எப்படி இருக்கும் என்புகுற்கு சாட்சியாக . ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சு பாதிப்புக்கு உள்ளான இடங்கள் 'அமைதி நினைவுப்பூங்கா' என்ற பெயர் சூட்டப்பட்டு, பூங்காவின் வடக்குப் பகுதியில் அணு குண்டு தாக்கிய ஒரு கட்டிடத்தின் உள்ள 'ஏ-பாம்ப் டோம்' என்று அழைக் கப்படும் எஞ்சியிருக்கும் குவிமாடம் வேலி அமைத்து பாதுகாக் கப்பட்டு வருகிறது. ஹிரோஷிமாவின் சில பகுதிகள், போர் அச்சறுத்தல் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு எச்சரிக்கையை தரும் அருங்காட்சியகமாக இந்த நகரம் மாற் றப்பட்டு உள்ளது. 1996-ம் ஆண்டு முதல், இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது. ஹிரோஷிமாவின் ஏ-பாம்ப் டோம் குவிமாடம் மற்றும் இந்த பூங்காவை பார்வையிட ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். ஆனால், இந்த குவிமாடம் அருகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஹிரோஷிமா நகரை கடந்து செல்லும் மோட் போயாசு ஆற்றின் பின்னணியில் காணப்படும் ஏ-பாம்ப் டோம் குவிமாடத்தை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணுகுண்டு வீச்சால் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனவே அதன் நினைவானது வலிமிகுந்ததாக இருப்பதால், இதனை அகற்ற வேண்டும் என்று சிலர் கூறினாலும், அணுஆயுதங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை மக்களுக்கு உணர வைக்கும் என்ப தால், இது எப்போதும் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று உலக அளவில் கருதப்படுகிறது.

Sep 16, 2025

எறும்புகள் காகத்தின் மீது ஃபார்மிக் அமிலத்தைத் தெளிக்கின்றன.

.மிகவும் புத்திசாலி  காகம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, ​​அது ஒரு எறும்புக் கூட்டைக் கண்டுபிடித்து அதைத் தொந்தரவு செய்கிறது. எறும்புகள் காகத்தின் உடலில் ஊர்ந்து செல்கின்றன, ஆனால் காகம் அதன் இறக்கைகளை விரித்து அசையாமல் இருக்கும். எறும்புகள் காகத்தின் மீது ஃபார்மிக் அமிலத்தைத் தெளிக்கின்றன, இது கிருமிகளையும் ஒட்டுண்ணிகளையும் கொல்ல உதவுகிறது. இது ஒரு இயற்கை மருந்தாக வேலை செய்கிறது. எறும்புகள் சாப்பிட்ட பிறகு, காகம் நன்றாக உணர்கிறது.

Sep 15, 2025

ஆடைகளை துவைப்பதற்கு விண்வெளியில் வாஷிங் மெஷின்.

 சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர்கள்பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் ,ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஆடைகளை துவைப்பதற்கு இதற்கேற்ற பிரத்யேக வாஷிங் மெஷினை சீன வானியல் ஆராய்ச்சி பயிற்சி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பனி, ஒசோனை பயன்படுத்தி இந்த வாஷிங் மெஷின்ஆடைகளை சுத்தம் செய்கிறது இதற்கு வாஷிங் பவுடர், தண்ணீர்தேவையில்லை..கனசதுரம்வடிவிலானஇந்தமெஷின்,12 கிலோ எடையுள்ளது.400 மி.லி., தண்ணீரில்,800 கிராம் எடையுள்ள துணிகளை துவைப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

Sep 15, 2025

பனிக் கடல் யானை.

 கடல் பாலூட்டிகளில்,  பனிக் கடல் யானை. துடுப்புகாலி இனத்திலேயே பெரியதான இது தந்தம் போன்ற நீண்ட பற்களைக் கொண்டுள்ளது. இவை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வட துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் நிறைந்த இடங்களில் காணப்படுகின்றன.பின்னங் கால்களால் நீந்தும் ஆற்றல் கொண்டவை. உட்பொதிந்த காதுகள் உண்டு.  துடுப்புகள் போன்ற கால்களால் தரையிலும் தவழ்ந்து செல்லும், தடிமனான தோல் கொண்டிருப்பதால் கடும் குளிர், பனி சூழல்களில் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த யானைகளின் தொண்டையின் அடியில் பெரிய காற்றுப்பைகள் உள்ளது. எதிரிகளை துரத்தி அடிப்பதற்கு இதன் நீண்ட தந்தம் போன்ற பற்கள் ,பனிக்கட்டிகளை துளையிட்டு கடலில் இறங்கவும், கடலில் இருந்து பனிக்கட்டிகளின் மேல் ஏறுவதற்கும் பயன்படுகிறது. இதன் பற்கள் 15 ஆண்டுகள் வரை வளரக்" கூடியது. இந்த பற்கள் மூலம் பனிக்கரடி மற்றும் திமிங்கலத்திடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. 

Sep 13, 2025

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன் படுத்தினால்பாதிப்புகள் ஏற்படாது.

நீண்ட நேரம் மொபைல் போன் பயன் படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சினைகள் ஏற்படலாம். செல்போன் பழக்கம் நீடித்துக் கொண்டே சென்றால் நம்மை மன நோய்க்கு ஆளாக்கி விடும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன் படுத்துவது இது போன்ற கடுமையான பாதிப்புகளை களைய உதவும்.இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும். இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். முடிந்த அளவு, இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி,வலி,கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும். எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கண்கள் பாதுகாக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும் போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும், இந்த பாதிப்பை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதனை தவிர்க்க கழுத்து பகுதியை வலுவாக்கும் உடற்பயிற்சிகளோடு சரியான அளவு ஓய்வும் வேண்டும்.சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன் படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும். எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது ஒலி அளவை 50 சதவீதம் குறைத்து பயன்படுத்துங்கள். பாதிப்புகள் ஏற்படாது. செல்போனுக்கும், கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்..

Sep 13, 2025

சிரிப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிகம்.

பெண்கள்  ஆண்களை விட அதிகமாக சிரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு ஆராய்ச்சியின்படி, சராசரியாக ஒரு பெண் ஒரு நாளைக்கு 62 முறையும், அதே நேரத்தில் ஆண் ஒரு நாளைக்கு 8 முறை மட்டுமே சிரிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இரு பாலினத்தவரின் புன்னகை விகிதத்திலும் ,உள்ள வேறுபாடு இளமையாக இருக்கும்போது அதிகமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம், தொழில் அல்லது சமூக பொறுப்புகளில் ஆண் - பெண் ஒரே மாதிரியான பதவிகளை வகிக்கும்போது, இரு பாலினருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. புன்னகையைப் பொறுத்தவரை வயது, கலாசாரம் மற்றும் இனம் போன்ற பல காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

1 2 ... 60 61 62 63 64 65 66 ... 104 105

AD's



More News