100 நாடுகள் ஒருங்கிணைந்து, டிச.21ல் சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, தியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டிச. 21ம் தேதி, 100 நாடுகளில் சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது.டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில்தீர்மானத்தை தாக்கல் செய்தன.இதை ஏற்று,ஐ.நா., சபை டிசம்பர் 21 ஆண்டுதோறும் உலகதியான நாளாக அனுசரிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு அறிவித்தது.
டிச. 21ம் தேதி இரண்டாவது முறையாக உலகம் முழுதும், தியான தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, 100 நாடுகளில் மொத்தம் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப் பட்டுஉலகின் வெவ்வேறு நேரங்களின் படி, இந்த நிகழ்ச்சி, 33 மணி நேரமாக நடைபெறும்.நியூசிலாந்து நேரப்படி காலை 8:00 மணிக்கு துவங்கி, அமெரிக்காவின்ஹவாய் தீவில் மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு நாட் டிலும், தலா, 20 நிமிடங்களுக்கு தியான நிகழ்ச்சி நடக்கும்.
0
Leave a Reply