"தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்" (Certificate Course on Entrepreneurship and Innovation) சான்றிதழ் படிப்பிற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் EDII அகமதாபாத் இணைந்து "தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்" என்ற சான்றிதழ் (Certificate Course on Entrepreneurship and Innovation) படிப்பைத் தொடங்கவுள்ளது. இதற்கான வகுப்புகள் வரும் 03.08.2026 அன்று தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் https://editn.in/Web-One-Year-Registration என்ற இணைய தளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000/- கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது(Scholarship upto 75 %). 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ -இல் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள். இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். மேலும், விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும் மற்றும் 86681-01638 /86681-07552 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply