25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான  தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வுக்கான  உண்டு உறைவிட, சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வுக்கான உண்டு உறைவிட, சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.பொறியியல் கல்லூரியில்,  மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான  தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வுக்கான உண்டு உறைவிட, சிறப்பு பயிற்சி முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  (01.10.2024)  நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களிடையே போட்டித்தேர்வின் முக்கியத்துவம், பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து உரையாற்றினார்.

பள்ளி மாணவ மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு" நடத்தப்பட்டு வருகிறது.2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500ஃ- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழில் ஆர்வம் மிக்க 140 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்விற்கு தயார் செய்யும் வகையில், கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.பொறியியல் கல்லூரியில்,  உண்டு, உறைவிட பயிற்சி முகாம் 30.09.2024 முதல் 17.10.2024 வரை நடைபெறுகிறது.அதன்படி,  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உண்டு, உறைவிட பயிற்சி முகாமினை பார்வையிட்டு, மாணவர்களிடையே போட்டித் தேர்வின் முக்கியத்துவம், பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தினார்.

மேலும், போட்டி தேர்வில் பங்கு பெறுவது என்பது இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் திறனை அறிந்து கொள்ளவும், அனைத்து போட்டி தேர்வுகளில் பயமின்றி பங்கு பெற்று வெற்றி பெறவும் முடியும். வெற்றி பெறுவதில் மூலம் கிடைக்கும் உதவி தொகை கல்வி செலவிற்கும் உதவுவதோடு குடும்பத்தின் நிதிசுமையை குறைக்கும். இதுபோன்று தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News