ரூ.65 சம்பளத்தில் தொடங்கி ரூ.20,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்!.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.ஜி. சந்திரமோகன், கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். மாதம் ரூ.65 சம்பளத்தில் வேலை செய்த அவர், குடும்ப நிலத்தை விற்று கிடைத்த ரூ.13,000 முதலீட்டில் 1970-ல் 'அருண்' ஐஸ்கிரீம் தொழிலை தொடங்கினார்.
பின்னர் பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால்வளப் பொருட்களிலும் விரிவாக்கம் செய்து, ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால்வள நிறுவனங்களில் ஒன்றாக வளர்த்தார்.
தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.20,000 கோடிக்கும் மேல் உள்ளது. ஆர்.ஜி. சந்திரமோகனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிய தொடக்கமும் விடாமுயற்சியும் இருந்தால் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
0
Leave a Reply