லோகேஷ் கனகராஜ் இயக்கும்,கூலி படத்தில், ரஜினி,, 'ஹீரோ' மட்டுமின்றி வில்லத்தனமான காட்சிகளிலும் நடிக்கிறார். இந்நிலையில், கூலி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் தனிமையில் அமர்ந்து, தன்னுடைய சுயசரிதையை எழுதப் போவதாக கூறுகிறார், ரஜினிகாந்த்.தன்னை பற்றி கடந்த காலங்களில் சர்ச்சையாக பேசப்பட்ட சில விஷயங்களை சுயசரிதையில் தெளிவுபடுத்தும், ரஜினி, எதிர்காலத்தில் இந்த கதையில் நடிப்பதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.'
மணிகண்டன் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய 3 படங்களுமே 50 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடின. ஹாட்ரிக் வெற்றியால் நெகிழ்ந்த மணிகண்டன், 'சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப் படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிர மப்படுகிறேன். சிறிய படம் 50 நாட்கள் தியேட்டர்களில் கொண்டாடப்படுவது வெற்றி மற்றும் சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை இரண்டு முறை அல்ல, மூன்று முறை இந்த அன்பு எங்களுடனே இருக்கும்' என்கிறார்.
சமீபத்தில் வெளியான படம் பெருசு'.வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் ,இளங்கோ ராம் இயக்கி இருந்தார். அடல்ட் கன்டென்ட் காமெடி படமாக வந்த இதனை ,ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்காக உரிமையை ஹன்சல் மேத்தா மற்றும் முகேஷ் ஷாப்ரா ஆகியோர் வாங்கி உள்ளனர். பார் நடிப்பது, இயக்குவது உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும்.
ஏ.ஆர்., முருகதாஸ் இயக்கி உள்ள “சிக்கந்தர்” ஹிந்தியில் சல்மான் கான், ராஷ்மிகா நடிப்பில் ,மார்ச் 30ல் ரிலீஸாகிறது. ஹிந்தியில் முருகதாஸிற்கு பெயரை தந்த படம் தமிழில் அவர் இயக்கிய கஜினி படத்தின் ரீமேக் தான். 'ஹிந்தியில் அமீர்கான் நடித்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முருகதாஸ் "அதுபற்றி ஆலோசிக்கிறேன். தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்க போகிறார். சரியான நேரம் வரும்போது, ஒரேநேரத்தில் தமிழ், ஹிந்தியில் கஜினி 2 வை இயக்க போகிறேன் என்றார்..
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படம் ஜூன் 20ல் ரிலீசாகிறது. படம் பற்றி சேகர் கம்முலா கூறுகையில், "குபேரா படத்தை இயக்குவதில் பெருமை. படத்தை பார்க்கும் 'ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் மெசேஜ் இருக்காது. அதேசம யம் சமுதாய கட்டமைப்பை பாதிக்காத அளவிலேயே எனது கதைகள் இருக்கும்" என்றார்.
நடிகர். இத்தாலியில் நடந்த 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர். அஜித் ரேஸிங் அணி ஜிடி992 பிரிவில் 3ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. அவரது வெற்றிக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸிலும் அஜித் அணி 3வது இடம் பிடித்தது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் “அக்கா “என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார். இதுதவிர ஹிந்தியில் மீண்டும் ஒரு. காமெடி கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில், ஹீரோவாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத் சிங்' ஆகிய படங்களில் நடிக்கும் நடிகரும், -ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண்,. இவற்றை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது.இதுபற்றி பவன் கூறுகையில்,"எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதேசமயம் எனது அரசு, அரசியல் பணிகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்" என்றார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரேவதி சில படங்களையும் இயக்கி உள்ளார். முறையாக தமிழில் ஒரு வெப் தொடரை முதன் இயக்கி உள்ளார். இதில் முதன்மை வேடத்தில் நடிகை பிரியாமணி, நடிகர் ஆரி அர்ஜூனன் ஆகியோர் நடிக்க, அம்ரிதா ஸ்ரீனிவாசன், சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.தலைப்பு உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.கே' என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில் இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். பாடகர்கள் திப்பு, ஹரிணியின் மகனான இவர், 'கட்சி சேர' ஆல்பம் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.