உலக ஜூனியர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்!
கனடாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்ட்-16' ஆட்டத்தில் மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீயை 11-4, 11-8, 11-3 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்திய முதல் நிலை வீராங்கனையான அனாஹத், அடுத்த சுற்றில் எகிப்தின் ஹபிபா ரிஸ்கை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், அமெரிக்காவின் யாசீன் ஷலாபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
0
Leave a Reply