25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Aug 22, 2025

நீண்ட ஆயுளுடன் வாழ கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றி வர  வேண்டும் ?

ஒரு முறை சுற்றினால் இறைவனை அணுக முடியும் 3 முறை சுற்றினால் மனச் சுமை குறையும் 5 முறை சுற்றினால் இஷ்ட சித்தி கிடைக்கும் 7 முறை சுற்றினால் காரியத்தில் வெற்றி கிடைக்கும் 9 முறை சுற்றினால் சத்துரு நாசம் அழியும் 11 முறை சுற்றினால் ஆயுள்  விருத்தி கிடைக்கும்.

Aug 22, 2025

குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா?

குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? என்றெல்லாம் பலர் தயங்குவது உண்டு ஆனால் பிரம்ம முகூரத்தத்திற்கு இந்த தடைகள் எதுவும் இல்லை. காலையில் எழுந்ததும் கதவை திறந்து வாசல் தெளித்து வண்ணக் கோலங்கள் இட்டு வீட்டிற்குள் வந்து முகம் கழுவி விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கலாம். அதன் பிறகு நீங்கள் மற்ற வேலைகளை எப்பொழுதும் போல் செய்யலாம். இது தீட்டு அற்ற சமயதிற்கு மட்டுமே பொருந்தும், இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாகவும், பணப்பிரச்சனை இருந்தாலும் அவை யாவும் நீங்கி செல்வம் பெருகும், மகாலட்சுமி தங்குவாள் என்பது நம்பிக்கை. அதே போல மாலை வேளையை விஷ்ணு முகூர்த்தம் என்று கூறுவார்கள்.

Aug 15, 2025

குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில்  இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது.

கோவிலுக்கு செல்லும் போது, நல்ல காரியத்துக்கு செல்லும் போது கருப்பு துணிகளை  உடுத்திச் செல்ல வேண்டாம் காலையில் கண்விழித்ததுடன் அவரவர் உள்ளங்கையில் கண் விழித்தால் அதிகமான நன்மைகள் சேரும் குலதெய்வம், திருப்பதி திருத்தணி, திருச்செந்தூர், பழனி கோயிலுக்கு சென்றால் நேராக அவரவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில்  இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது. தாலி செயினை எப்பொழுதும் அடகு வைக்க  கூடாது. தேரை தேங்காய் தண்ணீரை கர்ப்பிணி பெண் குடிக்க கூடாது.

Aug 08, 2025

கடலில் கால் வைப்போருக்கு கஷ்டம் தீரும்.

1.இரவில் உப்பை யாருக்கும் கடனாய் தந்தால் கலைமகள் நம்மை விட்டு சென்று விடுவாள். 2 வீட்டில் தொடர்ச்சியாக கஷ்டம் இருந்தால் ஒரு பாத்திரத்தில் உப்பு கலந்த தண்ணீரை நடுகாலில் வைத்து விட்டு காலையில் அதை செடிகளுக்கு அருகில் ஊற்றி விட்டால் வீட்டில் நிம்மதி வரும். 3. கடலில் கால் வைப்போருக்கு கஷ்டம் தீரும். 4. உப்பை மண்பானையில் அல்லது கண்ணாடி ஜாடையில் வைத்தால் குடும்பத்தில் பணக்கஷ்டம் வராது. 5. திருஷ்டி சுத்தும் போது கல் உப்பு சேர்த்துக் கொண்டு; அதை தண்ணீரில் போட்டால் உப்பு கரைவதை போல் திருஷ்டியும் கரைந்து போகும்.

Jul 11, 2025

கடன் வாங்கி பயன்படுத்தக் கூடதா பொருட்கள் .

துணிகள்அடுத்தவர்கள் பயன்படுத்திய உடைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், நமக்கு வஸ்திர தோஷம் உண்டாகும்.நகைகள்:தங்க நகைகள் மகாலக்ஷ்மியின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி அணியும்போது நிதி தொடர்பான கஷ்டங்கள் ஏற்படும். நாம் நகை வாங்கக்கூடிய யோகம் போய்விடும். இதனால் ஸ்வர்ண தோஷம்உண்டாகும்.கை கடிகாரம்:ஒருவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தை நாம் வாங்கிப் பயன்படுத்தும்போது பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நமக்கான நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும்.பேனா அடுத்தவர் பேனாவை முக்கியமான தருணங்களில் குறிப்பாக கையெழுத்து போடுவதற்கு பயன்படுத்தக் கூடாது. இது நம் முன்னேற்றத்தை பாதிக்கும்.காலணிகள் சில நேரங்களில் அவசரத்திற்கு மற்றவர்களின்செருப்பை போட்டுக்கொண்டு வெளியில் சென்று விடுவோம். காலணி சனீஸ்வரனின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி பயன்படுத்தும்போது சனீஸ்வரரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

Jul 04, 2025

சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் சண்டை போடும் தவறை செய்யாதீர்கள்! சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை

வீட்டிலிருக்கும் நபர்களையோ அல்லது உற்றார், உறவினர், நண்பர்கள் போன்றவர்களையோ சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் சண்டை போடுபவர்கள், இயலாத ஏழைகள் பசி என்று வாடிய முகத்துடன் பிச்சை கேட்டு வந்தால் இல்லை என்று கூறி அனுப்புவது உணவை அதிகமாக குப்பையில் கொட்டுபவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பசியுடன் காக்க வைத்து சாப்பிடுபவர்கள், பசியுடன் இருக்கும் சிறுபிள்ளைகள் முன் நீங்கள் மட்டும் சாப்பிடுவது, சாப்பிடும் சாப்பாட்டை சதா குறை சொல்வது போன்ற காரியங்களை செய்தால் உங்களுக்கு நிச்சயம் அன்னதோஷம்ஏற்படும் என்றுஆணித்தரமாக எடுத்துரைக்கிறது சாஸ்திரம். மேற்கூறிய தவறுகளை செய்தால் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை.

Jun 27, 2025

வசிய சக்தி தரும் அஞ்சன கல்.

அஞ்சனம் கல் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதை வாங்கி ஓர் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வைத்து பூஜை அறையில் வைத்தால் கெட்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறும். அஞ்சனம் கல் கையில் வைத்து மந்திரம் உச்சரித்தால் இறைவழிபாடு சிறக்கும். வேண்டுதல் நிறைவேறும். நமது மூன்றாவது கண் திறக்கபட்டு எதிர்காலம் அறியலாம்.அஞ்சனம் கல் உரசி திலகம் வைத்து சென்றால் போகும் காரியம் வெற்றி தரும்.

Jun 20, 2025

சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி.

தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளை இந்த மூலிகை சாம்பிராணி தூபம் போட்டால் தொழில் வளம் பெறும் கண் திருஷ்டி நீங்கும் தீய சக்தியை விரட்டும் லட்சுமி கடாட்சம் பெருகும் நிம்மதியின்மையை நீக்கும் தூக்கமின்மையை போக்கும் அமைதியை பெருக்கும் ஆரோக்கியத்தை காக்கும்.சாம்பிராணி உடன் வெண்கடுகு நாய் கடுகு மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி ,குங்கிலியம் இவற்றைக் கலந்து தூபம் போட்டு வரவும்.

Jun 20, 2025

திருச்செந்தூர் செல்வதாக இருந்தால் புதன்கிழமையில் புறப்பட்டு சென்று இரவு அங்கு தங்கி வியாழக்கிழமையில் முருகப் பெருமானை வழிபடுவதே சரியானதாகும்.

திருச்செந்தூர் செல்வதாக இருந்தால் புதன்கிழமையில் புறப்பட்டு சென்று இரவு அங்கு தங்கி வியாழக்கிழமையில் முருகப் பெருமானை வழிபடுவதே சரியானதாகும். குரு பகவானுக்கு முருகப் பெருமான் அருள்  செய்த தலம் என்பதாலும் முருகன் திருத்தலங்களில் திருச்செந்தூரில் மட்டுமே முருகப் பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்யும் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாக அருள் செய்கிறார்கள் திருச்செந்தூர் தலத்திற்கு சென்றால் குறைந்த பட்சம் 3 முதல் 12 மணி நேரம் அங்கேயே இருக்க வேண்டும்.அப்போது தான் அந்த தெய்வத்தின் முழு  அருள் கதிர்களையும் பெற முடியும். இந்த முறைகளை பின்பற்றி திருச்செந்தூர் தளத்திற்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முருகன் அருளால் கர்ம வினைகள் கரைந்து தலையெழுத்து மாறும்.

Jun 20, 2025

உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தமிழர்களுக்கு உகந்த கோடை விழா.

உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள இந்த ஆறு மாத காலங்கள் ஆகும். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சணாயன காலமாகும். உத்திராயண காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும் தட்சிணாயன காலத்தை தேவர்களின் இரவு காலமாகவும் கொள்ளும் மரபுகள் உள்ளன. ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில் காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர். இந்த ஆறு வகை காலங்களில் இளவேனில் காலமும், முதுவேனில் காலமும் கோடை காலங்கள். இது கோயில் விழாக்களுக்கான காலங்கள் ஆகும்.

1 2 3 4 5 6 7

AD's



More News