உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள இந்த ஆறு மாத காலங்கள் ஆகும். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சணாயன காலமாகும். உத்திராயண காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும் தட்சிணாயன காலத்தை தேவர்களின் இரவு காலமாகவும் கொள்ளும் மரபுகள் உள்ளன. ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில் காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர். இந்த ஆறு வகை காலங்களில் இளவேனில் காலமும், முதுவேனில் காலமும் கோடை காலங்கள். இது கோயில் விழாக்களுக்கான காலங்கள் ஆகும்.
நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் தூங்குவதில் தவறில்லை. எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அவர்களின் மற்ற வேலையை தொடர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வீட்டிற்கு அழைப்பதற்காகவே காலையில்விளக்கேற்றப்படுகிறது.விளக்கேற்றி தெய்வங்களை வீட்டிற்கு அழைத்துப் பிறகு போய் தூங்குவது முறையல்ல.
கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும் இதை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும்.மகாலட்சுமியையும் சுக்கிரனையும் மனதார வேண்டி வெள்ளை மொச்சையை எடுத்து நம்முடைய கட்டைவிரல் சுண்டுவிரலை பயன்படுத்தி கண்ணாடி பாட்டிலில் தண்ணீரில் தினமும் போட வேண்டும். தினம் ஒவ்வொரு மொச்சையாக அதில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.பரிகாரத்தை 48 நாட்கள் செய்து முடித்த பிறகு கண்ணாடி பாட்டில் உள்ள தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றிவிட்டு அதில் உள்ள மொச்சைகளை பறவைகளுக்கு தானமாக போடுங்க தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமியின் அருளும் சுக்கிர பகவானின் அம்சமும் பரிபூரணமாக கிடைக்கும்.
எலுமிச்சம் பழத்தை நசுக்குவது என்பது காவு கொடுப்பதற்கு சமமானதாக பார்க்கப்படுகிறது இந்த உலகத்தில் உள்ள துர் தேவதைகளுக்கு அவ்வாறு செய்யப்படுகிறது இதன் மூலமாக அந்த வாகனத்தின் மீதும் வாகனத்தை இயக்குவர்மீதும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் என்பது இருக்காது என்பதற்காகவும் ஏதேனும் தோஷம் அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே வந்திருந்தாலும் அவைகளும் அதைவிட்டு விலக வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது.
மூன்று மயிலிறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு 'ஓம் சனீஸ்வராய நமஹ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயிலிறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து 'ஓம் சோமாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்து தோஷம் நீங்கும்
பெண்கள் தனது வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ,ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியிடம் தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார். அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா என்று கேட்டார்.யாரால் செய்யப் படுகிறது?" என்று வினவினார். வேலைக்காரி தான் என்றாள் கோடீஸ்வரரின் மனைவி, மஹா ஸ்வாமிகள் நிதானமாக, "பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து விட்டது!" என்றார். எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்ய வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார்.
1 முதல் முகம் உலகுக்கு ஒளி தருவது 2-ஆம் முகம் - வேள்வி காப்பது 3-ஆம் முகம் - அடியார் குறைநீக்குவது- 4-ஆம் முகம் - வேத ஆகமப்பொருளை விளக்குவது 5-ஆம் முகம் - தீயோரை அழித்துநன்மை செய்வது 6-ஆம் முகம் - வள்ளிக்கு மகிழ்வைத் தருவது.
சிவன் -தாழம்பூவிநாயகர் - துளசிபைரவர் - அலரிபார்வதி- பாதிரிசூரியன் - தும்பைதுர்க்கை - நந்தியாவட்டை
முதல் நாள் உடுத்திய துணியை அடுத்த நாள் உடுத்துவது .இருள் சூழ்ந்திருக்கும் வீடுகள் சனி பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதன் காரணமாக மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். மேலும் அமங்கல சொற்கள் பேசுவதும், சுத்தமில்லாத இடங்களும் சனி பகவானுக்கு பிடிக்காது .மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டவர்கள், சனி பகவானால் அழிவை சந்திப்பது நிச்சயம். அனைத்து கிரகங்களையும் சிறைபிடித்த ராவணனால், சனி பகவானை ஒன்றும் செய்ய முடியவில்லை. மாற்றான் மனைவி மீது கொண்ட ஆசையே அவனது அழிவுக்கும் காரணமானது. மேலும் வஞ்சகம் இது செய்து வெற்றி பெறலாம் நினைத்தால், சனி பகவான் தண்டிக்காமல் விடமாட்டார்.