1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும். 2 வஸ்திர தானம் ஆயுளை விருத்தி செய்யும். 3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். 4 கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும். 5. தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும். 6 நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும். 7.தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும். & வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும். 9.தேன்தானம்-புத்திர பாக்கியம் உண்டாகும். 10 நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 11.அரிசி தானம்-பாவங்களைப் போக்கும். 12 பால் தானம்- துக்கம் நீங்கும்.. 13. தயிர் தானம் இந்திரிய விருத்தி ஏற்படும். 14 தேங்காய் தானம் நினைத்த காரியம் நிறைவேறும். 15.பழங்கள் தானம் புத்தியும் சித்தியும்கிட்டும்.
கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது-3 தலைமுறை. பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது- 5 தலைமுறை. கோவில் திருப்பணிக்கு உதவுவது-7 தலைமுறை. ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை. அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை கோசாலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை. காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் -16 தலைமுறை. பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் 27 தலைமுறை.
பெண்கள்வாசல் தெளிக்கும் முன், பல் விலக்கி முகம் கழுவி குங்குமம் வைத்துக்கொண்டபிறகு தான் தலை வாசலில் சாணம் அல்லது தண்ணீர் தெளிக்கவேண்டும்.வாசலில்தெளிக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும் .பல பேர் துணிதுவைத்த தண்ணீர், வெகு நாட்களுக்கு முன்பு சேமித்த தண்ணீர் போன்றவற்றை தலைவாசலில் தெளிப்பார்கள்.அவ்வாறு கண்டிப்பாக செய்யக்கூடாது.தலைவாசலில் பசு சாணம் கரைத்து தெளிக்கலாம் .அவ்வாறு இயலாத பட்சத்தில் சிறிது மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை தண்ணீரில் கலந்து தெளிப்பது நல்லது.
வீட்டுக்கு முன் வேப்பமரம்.பக்கத்தில் ஒரு முருங்கைமரம்.வெளியே பப்பாளிமரம் இருக்க வேண்டும்.குளிக்கும் தண்ணீர் போகும் இடம் வாழை மரம் இருக்க வேண்டும்.பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னைமரம் இருக்க வேண்டும்.ஒரு எலுமிச்சை மரம் அவசியம்,அதன் நிழலின் கீழ் பகுதியில் கறிவேப்பிலைச் செடி இருக்க வேண்டும்.ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்.ஒரு மாமரம் வைக்க வேண்டும்.இப்படி இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்.
கண்ணாடி எந்த ஒரு விஷயத்தையும் , அப்படியே பிரதிபலிக்கும் அதாவது நாம் சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழுகும்.அப்படிப்பட்ட கண்ணாடியை நாம் படுக்கை அறையில் வைத்தால், நாம் தூங்கும் பொழுது அல்லது சண்டை நடக்கும் பொழுது அதை அப்படியே நாம் வீட்டில் பிரதிபலிக்கும்.ஆகையால் அது நமக்கு எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணுவதோடு, வீட்டில் செல்வ செழிப்பையும் குறைக்கும். எனவே படுக்கை அருகில் கண்ணாடியை தவிர்ப்பது நல்லது.
1-நாம் உபயோகித்த பழைய துணிகளை யாருக்கும் கொடுக்க கூடாது..!! 2-இரவு நேரங்களில் மரத்தடிக்கு அடியில் படுத்து தூங்க கூடாது..!! 3-வீட்டுக் குழாய்களில் நீர் சொட்டக் கூடாது. 4-வாசக்காள் கதவு ஜன்னல்களில் கரையான் அரிக்க கூடாது..!! 5-தலையணை மீது உட்காரக் கூடாது..!! 6.தலையணைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது..!! 7-துடைப்பத்தை மிதிக்கவோ, தாண்டவோ கூடாது.!! 8-ஈர உடையுடன் பூஜை செய்யக்கூடாது..!! 9. திருமணமாகாத ஆண்கள், குழந்தைகள் வாழைமரம் வெட்டக் கூடாது..!!"
மொட்டை போடுவது போன்ற சுப காரியங்களை நல்ல நேரம் பார்த்து செய்வது நல்லது.முண்டன் முகூர்த்தம் என்று மொட்டை போடுவதற்கான நல்ல நாட்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படும்.குழந்தை பிறந்த ஜென்மநட்சத்திரம், பிறந்தநாள், சந்திராஷ்டமம் உள்ள நாள், மரணயோகம், கீழ் நோக்கு நாள், சூரியன் மறைந்த பிறகு, ராகு காலம்,எமகண்டம் போன்ற நாட்களில் மொட்டை அடிக்கக்கூடாது.மொட்டை அடிக்கதைமாதம்சிறந்தது.அஸ்வினி, மிருகசீரிடம்பூசம், அஸ்தம், பூனர்பூசம், சித்திரை, சுவாதி, கேட்டை, திருவோணநட்சத்திரம், அவிட்டம், சதயம் போன்ற நட்சத்திரங்களிலும், திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளிலும் மொட்டை அடிப்பது சிறந்தது.
மாவிலை தோரணத்தை கட்டும் போது 'ஓம்' பிரணவ மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.இதனால் மாவிலை தோரணத்தில் தெய்வீக சக்தி நிறைந்து, வீட்டிற்குள் நன்மைகள் வரவும் செய்கிறது.மாவிலை தோரணம் வீட்டில் குலதெய்வம், இஷ்டதெய்வம் மற்றும் அஷ்டலட்சுமியை வரவேற்கிறது.
'ஓம் ரீங் வசி வசி என்னும் மந்திரத்தை கண்களை மூடி உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் வடகிழக்கு திசையை நோக்கி 108 முறை ஜெபிக்கவேண்டும்.தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்தால் சர்வ வசியம் உண்டாகும் தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மன ஒருமைபாட்டுடன் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் பொதுவாக எல்லா மந்திரங்களும் ஜெபித்தஉடனேயே பலன் தருவதில்லை ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய பின்னரே அவை வேலை செய்யத் தொடங்கும். வசிய மந்திரத்தை ஜெபிக்கும்போது வாயின் வலது பக்கத்தில் ஒரு கிராம்பினை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.எக்காரணம் கொண்டும் கடிக்கக்கூடாது ஜெபம் முடிந்ததும் கிராம்பைத் துப்பிலிட வேண்டும் இது வசிய சக்தியை விரைவு படுத்த உதவும்.வசியப் பிரயோகம் செய்தால் கண்னுக்குத் தெரிந்த எதிரிகளும் தெரியாத எதிரிகளும் வசியமாகி விடுவார்கள் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம: வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ"
முதல் சாபம்பெற்றோர்களின் சாபம் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரமாகும். பெற்றோர்கள் இட்ட சாபத்தை நீக்கும் படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.இரண்டாவது சாபம்சுமங்கலிகள் கண்ணீர் மல்க விடும் சாபங்கள் நிச்சயம் அடுத்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டு விடாது என்பார்கள். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு நந்தி பகவானை திருதியை திதியில் அபிஷேகம் செய்து பாவத்திற்கு மன்னிப்பு கேட்டால் பலன் கிடைக்கும்.மூன்றாவது சாபம்உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது பெரிய பாவமாகும். பாவத்தை செய்த பிறகு பரிகாரம் தேடுவது சரியானது அல்ல. அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கு ஏற்றி சாபம் நீக்க வழிபாடு செய்ய வேண்டும்.