25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Jul 04, 2025

சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் சண்டை போடும் தவறை செய்யாதீர்கள்! சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை

வீட்டிலிருக்கும் நபர்களையோ அல்லது உற்றார், உறவினர், நண்பர்கள் போன்றவர்களையோ சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் சண்டை போடுபவர்கள், இயலாத ஏழைகள் பசி என்று வாடிய முகத்துடன் பிச்சை கேட்டு வந்தால் இல்லை என்று கூறி அனுப்புவது உணவை அதிகமாக குப்பையில் கொட்டுபவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பசியுடன் காக்க வைத்து சாப்பிடுபவர்கள், பசியுடன் இருக்கும் சிறுபிள்ளைகள் முன் நீங்கள் மட்டும் சாப்பிடுவது, சாப்பிடும் சாப்பாட்டை சதா குறை சொல்வது போன்ற காரியங்களை செய்தால் உங்களுக்கு நிச்சயம் அன்னதோஷம்ஏற்படும் என்றுஆணித்தரமாக எடுத்துரைக்கிறது சாஸ்திரம். மேற்கூறிய தவறுகளை செய்தால் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை.

Jun 27, 2025

வசிய சக்தி தரும் அஞ்சன கல்.

அஞ்சனம் கல் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதை வாங்கி ஓர் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வைத்து பூஜை அறையில் வைத்தால் கெட்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறும். அஞ்சனம் கல் கையில் வைத்து மந்திரம் உச்சரித்தால் இறைவழிபாடு சிறக்கும். வேண்டுதல் நிறைவேறும். நமது மூன்றாவது கண் திறக்கபட்டு எதிர்காலம் அறியலாம்.அஞ்சனம் கல் உரசி திலகம் வைத்து சென்றால் போகும் காரியம் வெற்றி தரும்.

Jun 20, 2025

சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி.

தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளை இந்த மூலிகை சாம்பிராணி தூபம் போட்டால் தொழில் வளம் பெறும் கண் திருஷ்டி நீங்கும் தீய சக்தியை விரட்டும் லட்சுமி கடாட்சம் பெருகும் நிம்மதியின்மையை நீக்கும் தூக்கமின்மையை போக்கும் அமைதியை பெருக்கும் ஆரோக்கியத்தை காக்கும்.சாம்பிராணி உடன் வெண்கடுகு நாய் கடுகு மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி ,குங்கிலியம் இவற்றைக் கலந்து தூபம் போட்டு வரவும்.

Jun 20, 2025

திருச்செந்தூர் செல்வதாக இருந்தால் புதன்கிழமையில் புறப்பட்டு சென்று இரவு அங்கு தங்கி வியாழக்கிழமையில் முருகப் பெருமானை வழிபடுவதே சரியானதாகும்.

திருச்செந்தூர் செல்வதாக இருந்தால் புதன்கிழமையில் புறப்பட்டு சென்று இரவு அங்கு தங்கி வியாழக்கிழமையில் முருகப் பெருமானை வழிபடுவதே சரியானதாகும். குரு பகவானுக்கு முருகப் பெருமான் அருள்  செய்த தலம் என்பதாலும் முருகன் திருத்தலங்களில் திருச்செந்தூரில் மட்டுமே முருகப் பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்யும் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாக அருள் செய்கிறார்கள் திருச்செந்தூர் தலத்திற்கு சென்றால் குறைந்த பட்சம் 3 முதல் 12 மணி நேரம் அங்கேயே இருக்க வேண்டும்.அப்போது தான் அந்த தெய்வத்தின் முழு  அருள் கதிர்களையும் பெற முடியும். இந்த முறைகளை பின்பற்றி திருச்செந்தூர் தளத்திற்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முருகன் அருளால் கர்ம வினைகள் கரைந்து தலையெழுத்து மாறும்.

Jun 20, 2025

உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தமிழர்களுக்கு உகந்த கோடை விழா.

உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள இந்த ஆறு மாத காலங்கள் ஆகும். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சணாயன காலமாகும். உத்திராயண காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும் தட்சிணாயன காலத்தை தேவர்களின் இரவு காலமாகவும் கொள்ளும் மரபுகள் உள்ளன. ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில் காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர். இந்த ஆறு வகை காலங்களில் இளவேனில் காலமும், முதுவேனில் காலமும் கோடை காலங்கள். இது கோயில் விழாக்களுக்கான காலங்கள் ஆகும்.

Jun 05, 2025

விளக்கேற்றிய பின் தூங்கலாமா?

நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் தூங்குவதில் தவறில்லை. எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அவர்களின் மற்ற வேலையை தொடர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வீட்டிற்கு அழைப்பதற்காகவே காலையில்விளக்கேற்றப்படுகிறது.விளக்கேற்றி  தெய்வங்களை வீட்டிற்கு அழைத்துப் பிறகு போய் தூங்குவது முறையல்ல.

May 29, 2025

பணம் பெருக தண்ணீர்ல இதை  போடுங்க.

கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும் இதை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும்.மகாலட்சுமியையும் சுக்கிரனையும் மனதார வேண்டி வெள்ளை மொச்சையை எடுத்து நம்முடைய கட்டைவிரல் சுண்டுவிரலை பயன்படுத்தி கண்ணாடி பாட்டிலில் தண்ணீரில் தினமும் போட வேண்டும். தினம் ஒவ்வொரு மொச்சையாக அதில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.பரிகாரத்தை 48 நாட்கள் செய்து முடித்த பிறகு கண்ணாடி பாட்டில் உள்ள தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றிவிட்டு அதில் உள்ள மொச்சைகளை பறவைகளுக்கு தானமாக போடுங்க தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமியின் அருளும் சுக்கிர பகவானின் அம்சமும் பரிபூரணமாக கிடைக்கும்.

May 22, 2025

வாகனத்தின் சக்கரங்களில் எலுமிச்சை பழம் வைப்பது ஏன்?

எலுமிச்சம் பழத்தை நசுக்குவது என்பது காவு கொடுப்பதற்கு சமமானதாக பார்க்கப்படுகிறது இந்த உலகத்தில் உள்ள துர் தேவதைகளுக்கு அவ்வாறு செய்யப்படுகிறது இதன் மூலமாக அந்த வாகனத்தின் மீதும் வாகனத்தை இயக்குவர்மீதும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் என்பது இருக்காது என்பதற்காகவும் ஏதேனும் தோஷம் அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே வந்திருந்தாலும் அவைகளும் அதைவிட்டு விலக வேண்டும் என்பதற்காகவே  அவ்வாறு செய்யப்படுகிறது.

May 15, 2025

தோஷங்கள் நீங்கும் மயிலிறகு

மூன்று மயிலிறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு 'ஓம் சனீஸ்வராய நமஹ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயிலிறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து 'ஓம் சோமாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்து தோஷம் நீங்கும்

May 08, 2025

பெண்களுக்கான ஆன்மீக  குறிப்புகள்.

பெண்கள் தனது வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ,ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.சாமி படங்களில் உலர்ந்த பூக்களை  விட்டு வைக்கக் கூடாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News