விடிந்த நேரத்தில் அதாவது 7 to 8 மணிக்கு பெருக்கினால், மூதேவி வெளியேறி மகாலட்சுமி உள்ளே வருவாள். காலை நேரத்தில் 8 to 9 மணிக்கு வீட்டை பெருக்கினால், எதிர்மறை சக்திகள் உள்ளே வராது. பகல் நேரத்தில் அதாவது 12 மணிக்கு மேல் வீட்டை பெருக்கினால், எந்த நல்லதும் நடக்காது.அதாவது நல்லதும் கிடையாது, கெட்டதும் கிடையாது. மதிய நேரத்தில் அதாவது 3 மணிக்கு மேல் வீட்டை பெருக்கினால், தோஷங்கள் ஏற்படும். மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், தரித்திரம் உண்டாகும். இரவு நேரங்களில் வீட்டை பெருக்கினால், மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, மூதேவி குடி கொள்வாள். அன்றைய நாளில் உங்களால் வீட்டை பெருக்க முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. ஆனால் இரவு நேரங்களில் கண்டிப்பாக வீட்டை பெருக்கக் கூடாது.
மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் அடிக்கடி தலைக்கு குளித்தால் அவர்களின் வசீகரம் குறைவதோடு, முகராசி, கைராசி,லட்சுமி கடாட்சம் குறைந்து போகும். பெண்கள் மாலை நேரத்தில் கை, கால், முகம் கழுவி, பொட்டு வைத்து தீபம் ஏற்றும் பொழுது அவர்கள் முகத்தில் அவர்களை அறியாமலேயே லட்சுமி கடாட்சம் உண்டாகும்.பெண்கள் முடிந்த அளவு மங்களப் பொருட்களான பூ, மஞ்சள், பொட்டு, வளையல் போன்றவற்றை பயன்படுத்தும் போது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அவ்வாறு மங்களகரமாக இருக்கும் பெண்கள் இடத்தில் கைராசி, முகராசி,லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்தால் : வீட்டில் செல்வம் பெருகும் காகம் எச்சம் இடுவது தலையில் தட்டுவது கொத்தி விட்டு போவது - நமக்கு வர இருக்கும் சில ஆபத்துக்களை உணர்த்தும். ஆந்தை வீட்டிற்கு வந்தால்: நல்ல அறிகுறி தான் ஆனால் பலரும் அப்படி நினைப்பது இல்லை. பாம்பு வீட்டிற்கு வந்தால் வருமானம் பாதிக்கும். வௌவால் வீட்டிற்கு வந்தால் : வீட்டிற்கு நல்லது அல்ல. கொளவி வீட்டிற்கு கூடு கட்டினால் வீட்டில் செல்வம் உண்டாகும். வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால்: வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
துளசி செடி இருக்கும் இடத்தில் தீயசக்திகள் அண்டாது பசுவின் சாணம் பட்ட இடத்தில் தீயசக்திகள் நெருங்காது. ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்டமுடியாது. மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை கேட்டால் தீய சக்திகள் நெருங்காது. நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி இருப்பவரை தீயசக்திகள் அண்டாது. இரும்பு உலோகத்தை கையில் வைத்திருந்தால் தீயசக்திகள் அண்டாது.
நகைகளை ஒருபோதும் சமையல் அறையில் உள்ள அரிசி பருப்பு போன்ற அஞ்சறைப் பெட்டிகளில் வைக்க கூடாது.அடுப்பங்கறையில் அக்னி மூலையில் வைக்கும் தங்க நகைகள் ஒருபோதும் பெருகாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது .அடுப்பங்கறையில் வைக்கும் நகைகள் விரைவில் அடகு கடைக்கு போகும் அல்லது திருடு போக வாய்ப்பு உள்ளது.அதேபோல் வடமேற்கு மூலையில் உள்ள அறையில் தங்க நகைகள் சேமித்து வைக்க கூடாது.
ஆணுக்கு வலது பக்கம் பெண் உட்கார கூடாது இடது பக்கம் தான் உட்கார வேண்டும் என்பது ஐதீகம். மணப்பந்தலிலும் பெண்கள் ஆணுக்கு இடது பக்கம் தான் உட்கார வேண்டும். பெண்ணின் வலது பாகமாக செயல்பட வேண்டியது ஆண் என்றும், ஆணின் இடது பாகமாக செயல்பட வேண்டியது பெண் என்றும் அர்த்தம். இந்த நம்பிக்கையை பலமளிப்பது இந்து மத சாஸ்திரத்தில் வலது பக்கம் ஆணும், இடது பக்கம் பெண்ணும் இருக்கின்ற அர்த்தநாரீஸ்வரர் ஆவர்.
1.கோவிலில்நமக்கு கொடுக்கப்படும் பூ மாலைகள், பூக்கள், துளசி, அன்னம் கொடுக்கப்படும் பிரசாதங்கள் நிர்மால்யம் என்று பெயர். அவற்றில் கடவுளின் சக்தி அதிகம் இருக்கும். அவைகள் வெறும் பூக்களோ உணவு பண்டங்களோ அல்ல. 2. பிரசாதங்களை வாங்கி கண்களில் ஒற்றி கொண்டு உணவாக இருந்தால் சாப்பிடலாம். பூவை தலையில் சூடி கொள்ளலாம். ஆனால் துளசியை தலையில் வைக்க கூடாது. மாலையை பூஜை அறையில் வைத்து பிறகு ஓடும் நீரில் விடலாம். 3.சிலர்வாசல் நிலைப்படியில் மேலே மாட்டுவார்கள் அந்த வாசலில் யார் வேண்டுமானாலும்நுழைவார்கள், வண்டி வாகனங்களுக்கு மாட்டினால், அந்த பூக்கள் சிதறிஅங்கெங்கே மற்ற வாகனங்களில் மிதிபட்டு சிதலம் அடையக்கூடும் இவைஇரண்டையும்தவிர்ப்பது நல்லது.
ஒருவர் பணம் கொடுத்து ஏமாந்து விட்டால், அவர்கள் செய்த கர்மா தான் அவர்களை காப்பாற்றியது என்று அர்த்தம். நமக்கு அதிக துன்பத்தை தருவது உயிர் சேதம்.அடுத்து பணம் திருடு போவது அல்லது யாரிடமாவது கொடுத்து ஏமாறுவது, இவை இரண்டும் தான் மனிதனை அணு அணுவாக கொல்லும், மற்றவைகள் எல்லாம் நாளடைவில் மறந்து விடுவார்கள்.நாம் செய்த கர்மா தான், பண சேதத்தை ஏற்படுத்தி உயிர் சேதத்தை தடுக்கும். ஆனால் நம்மை ஏமாற்றியவர்களுக்கு பாவ புண்ணியத்தின் படி உயிர் சேதமோ அல்லது வேறு வகைகளில் ஏற்படுத்தி அவர்களை படுகுழியில் தள்ளும்.வருத்தப்படாமல் இருங்கள் பொறுத்தார் பூமி ஆள்வார்..!
வீட்டில் நிறைய ஊறுகாய் வகைகளை வைத்து இருப்பது குபேர சம்பத்து தரும். கல்லுப்பு, புளி போட்டு வைக்கும் பாத்திரம் காலியாக இருக்க கூடாது. வெள்ளிக்கிழமையில் மாலை 6-7 மணிக்குள் கல்லுப்பு வாங்கி வீட்டில் வைத்தால் பணம் சேரும். விளக்கேற்றும் போது பின்பக்க கதவை சாத்தி விட்டு ஏற்றினால் ஐஸ்வர்யம் கூடும். முறம், அம்மி, ஆட்டுக்கல், உணவு தானியங்களை மிதிக்கவும் கூடாது தாண்டக்கூடாது. மாலை சாய்வதற்கு ஒரு நாழிகை முன் (5.45-6.00) விளக்கேற்றினால் வீடு செழிக்கும். குழந்தைகளின் உடைகளை மாலை நேரத்திற்கு முன்பே காய வைத்து எடுத்து விட வேண்டும். .காலாட்டுவது வீட்டிற்கு கேடு விளைவிக்கும். பால், தயிர், ஊசி என்று வரும் இரண்டெழுத்து பொருட்களை இரவில் இரவல் தரக் கூடாது.
சாப்பிட்ட பாத்திரங்களை உடளே கழுவாமல், ஒரேடியாக சேர்த்து மூலையில் குவித்து வைப்பது. வீட்டில் எங்காவது ஒரு மூலையில் குப்பை கிடப்பது; தண்ணீர் சொட்டு சொட்டாக வீணாக விழுவது. மாலை விளக்கேற்றும் நேரத்தில் சோகமாக இருப்பது, அழுகை சீரியல் பார்ப்பது அல்லது சத்தமாக திட்டுவது. கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பது அல்லது திட்டிக் கொண்டிருப்பது. பெற்றோர் குழந்தைகளை அடிப்பது அல்லது எப்போதும் குறை கூறி அழ வைப்பது. இரண்டு மூன்று நாட்களாக ஒரே துணியை அணிந்து, சுத்தமின்றி இருப்பது. அந்தி சாயும் நேரத்தில் வீடு இருளாக இருந்தும், பூஜை அறையில் விளக்கேற்றாமல் அல்லது லைட் போடாமல் இருப்பது.