25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Sep 19, 2025

புதுமனை குடியேற செய்ய வேண்டியது.

முதன் முதலாக வீட்டிற்கு செல்லும்போது நிறைகுடம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். நிறைகுடம் தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து பூ போட்டு பூஜை அறையில் வைக்கவும் .தண்ணீர் குடத்தில் விபூதி பட்டையிட்டு மஞ்சள் குங்குமம் வைக்கவும், பிறகு குத்து விளக்கு. சாமி படம், கல் உப்பு, விரலி மஞ்சள். புளி, வரமிளகாய், தாம்பூல தட்டு, கற்கண்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். சமையலறையில் அரிசி மாவு கோலம் போட்டு அங்கு நிறை செம்பு தண்ணீர் வைக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் ஒன்பதுதொன்னைஅல்லதுகிண்ணம்எடுத்துகல்லுப்பு,மஞ்சள்தூள், குங்குமம், புளி,வரமிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு,பச்சரிசி, சர்க்கரை, அனைத்தையும்   கொட்டி வைத்து பூஜை அறையில்  வைக்கவும்.

Sep 12, 2025

பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும்.

தினந்தோறும் நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொள்வீர்கள் அல்லவா, அந்த குங்குமத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்துவிட்டு, தினம்தோறும் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் பண ஈர்ப்பு அதிகரிக்கும். தினம்தோறும் பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் குங்குமத்தோடு கலந்து வைத்து மூடி போட்டு விடுங்கள்.அந்த வாசம் அந்தக் குடும்பத்திலேயே நிலைத்திருக்கும். அந்த குங்குமம் தீரும் வரை அப்படியே பயன்படுத்தி வரலாம்.நீங்கள் நம்பவே மாட்டீர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இப்படி குங்குமத்தை உங்கள் நெற்றியில் வைத்து பாருங்கள். கையில் காசு வருவதில் நன்றாக வித்தியாசம் தெரியும்.

Sep 05, 2025

சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் .

எவர் ஒருவர் தொடர்ந்து ருத்ர காயத்திரி மந்திரம் சொல்லி வருகிறாரோ அவர்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ருத்ர காயத்ரி மந்திரம்:நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம…

Sep 05, 2025

"திங்கட்கிழமை இதை மட்டும் செய்தால் எவ்வளவு பெரிய கொடிய நோயும், சொல்லாமல் கொள்ளாமல் கரைந்து போகும்"

உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது ஒரு குளம், கிணறு உள்ள சிவன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை அந்த சிவன் கோவிலுக்கு மண்டை வெல்லம் 1/2 கிலோ வாங்கி சென்று சிவபெருமானுக்கு விளக்கு போட்டு மனதார நோய் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த கோவிலில் இருக்கும் கிணற்றில் அல்லது குளத்தில் இந்த மண்டை வெல்லம் கரைவதை போல நோய்நொடிகள் கரையட்டும் என வேண்டி போட்டு விட வேண்டும். 21 திங்கட்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். நோய்கள் தீரும்.

Aug 29, 2025

வறுமையை உண்டாக்கும் சில பழக்கங்கள்!

வீட்டி ஓட்டடை அதிகம் இருப்பதும், பழைய உடைந்த ஓட்டையான பொருள்கள் இருப்பதும், எப்போதும் சொட்டிக் கொண்டு இருக்கும் தண்ணீர் குழாய், சாமி படங்கள் சுத்தமில்லாமல் மங்கிய தோற்றத்தில் இருப்பது, தானியங்களை பூச்சி பிடிக்கும் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வெளியே கொட்டுவது போன்றவை வறுமையை உண்டாக்கும்.கோவில்களில் பிரசாதமாக தரப்படும் வில்வமும் துளசியும் பணப்பெட்டியில் வைத்தால் பணம் சேரும் மேலும் பணம் அந்த பெட்டியில் தங்கும் ஆகையால் பிரசாதங்களை தூக்கி போடாமல் பணப்பெட்டியில் வையுங்கள் இந்த துளசியும்வில்வமும் காய்ந்து போனாலும் இதற்கு உள்ள மகிமை   எப்போதும்  போகாது.

Aug 22, 2025

நீண்ட ஆயுளுடன் வாழ கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றி வர  வேண்டும் ?

ஒரு முறை சுற்றினால் இறைவனை அணுக முடியும் 3 முறை சுற்றினால் மனச் சுமை குறையும் 5 முறை சுற்றினால் இஷ்ட சித்தி கிடைக்கும் 7 முறை சுற்றினால் காரியத்தில் வெற்றி கிடைக்கும் 9 முறை சுற்றினால் சத்துரு நாசம் அழியும் 11 முறை சுற்றினால் ஆயுள்  விருத்தி கிடைக்கும்.

Aug 22, 2025

குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா?

குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? என்றெல்லாம் பலர் தயங்குவது உண்டு ஆனால் பிரம்ம முகூரத்தத்திற்கு இந்த தடைகள் எதுவும் இல்லை. காலையில் எழுந்ததும் கதவை திறந்து வாசல் தெளித்து வண்ணக் கோலங்கள் இட்டு வீட்டிற்குள் வந்து முகம் கழுவி விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கலாம். அதன் பிறகு நீங்கள் மற்ற வேலைகளை எப்பொழுதும் போல் செய்யலாம். இது தீட்டு அற்ற சமயதிற்கு மட்டுமே பொருந்தும், இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாகவும், பணப்பிரச்சனை இருந்தாலும் அவை யாவும் நீங்கி செல்வம் பெருகும், மகாலட்சுமி தங்குவாள் என்பது நம்பிக்கை. அதே போல மாலை வேளையை விஷ்ணு முகூர்த்தம் என்று கூறுவார்கள்.

Aug 15, 2025

குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில்  இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது.

கோவிலுக்கு செல்லும் போது, நல்ல காரியத்துக்கு செல்லும் போது கருப்பு துணிகளை  உடுத்திச் செல்ல வேண்டாம் காலையில் கண்விழித்ததுடன் அவரவர் உள்ளங்கையில் கண் விழித்தால் அதிகமான நன்மைகள் சேரும் குலதெய்வம், திருப்பதி திருத்தணி, திருச்செந்தூர், பழனி கோயிலுக்கு சென்றால் நேராக அவரவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில்  இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது. தாலி செயினை எப்பொழுதும் அடகு வைக்க  கூடாது. தேரை தேங்காய் தண்ணீரை கர்ப்பிணி பெண் குடிக்க கூடாது.

Aug 08, 2025

கடலில் கால் வைப்போருக்கு கஷ்டம் தீரும்.

1.இரவில் உப்பை யாருக்கும் கடனாய் தந்தால் கலைமகள் நம்மை விட்டு சென்று விடுவாள். 2 வீட்டில் தொடர்ச்சியாக கஷ்டம் இருந்தால் ஒரு பாத்திரத்தில் உப்பு கலந்த தண்ணீரை நடுகாலில் வைத்து விட்டு காலையில் அதை செடிகளுக்கு அருகில் ஊற்றி விட்டால் வீட்டில் நிம்மதி வரும். 3. கடலில் கால் வைப்போருக்கு கஷ்டம் தீரும். 4. உப்பை மண்பானையில் அல்லது கண்ணாடி ஜாடையில் வைத்தால் குடும்பத்தில் பணக்கஷ்டம் வராது. 5. திருஷ்டி சுத்தும் போது கல் உப்பு சேர்த்துக் கொண்டு; அதை தண்ணீரில் போட்டால் உப்பு கரைவதை போல் திருஷ்டியும் கரைந்து போகும்.

Jul 11, 2025

கடன் வாங்கி பயன்படுத்தக் கூடதா பொருட்கள் .

துணிகள்அடுத்தவர்கள் பயன்படுத்திய உடைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், நமக்கு வஸ்திர தோஷம் உண்டாகும்.நகைகள்:தங்க நகைகள் மகாலக்ஷ்மியின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி அணியும்போது நிதி தொடர்பான கஷ்டங்கள் ஏற்படும். நாம் நகை வாங்கக்கூடிய யோகம் போய்விடும். இதனால் ஸ்வர்ண தோஷம்உண்டாகும்.கை கடிகாரம்:ஒருவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தை நாம் வாங்கிப் பயன்படுத்தும்போது பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நமக்கான நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும்.பேனா அடுத்தவர் பேனாவை முக்கியமான தருணங்களில் குறிப்பாக கையெழுத்து போடுவதற்கு பயன்படுத்தக் கூடாது. இது நம் முன்னேற்றத்தை பாதிக்கும்.காலணிகள் சில நேரங்களில் அவசரத்திற்கு மற்றவர்களின்செருப்பை போட்டுக்கொண்டு வெளியில் சென்று விடுவோம். காலணி சனீஸ்வரனின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி பயன்படுத்தும்போது சனீஸ்வரரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News