கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது. கோயிலின் திருநீறு, குங்குமம்.பூ போன்றவற்றை கீழே சிந்த கூடாது. தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது. கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூச கூடாது. விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் போதுமானது. சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும். பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது. (ஆகம முறைக்கு உட்பட்டது ) .
வீட்டில் விசேஷ நாட்களில் பண்டிகை தினங்களில், பெண்கள், ஆண்கள் மருதாணி இட்டு கொள்வதை பார்த்திருப்போம்காரணம் ஸ்ரீ மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களில் ஒன்று மருதாணி.மருதாணிக்கு செல்வத்தை, ஐஸ்வர்யத்தை, லட்சுமிகரத்தை, ஈர்த்து எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தி உண்டு.அதனால் தான் மங்களகரமான நாட்களில் பெண்களையும், ஆண்களையும் மருதாணி இட்டு கொள்ள சொல்கிறது சாஸ்திரம் .
துளசியைப் பார்த்தால், செய்த பாவங்கள் அழியும். துளசியை தொட்டால், உடல் தூய்மையடையும். துளசியைப் பணிந்தால் நோய்கள் தீரும். துளசிக்கு நீர் வார்த்தால் யமனுக்கு பயம் உண்டாகும். துளசியை நட்டால் பகவான் கிருஷ்ணரை நெருங்கலாம்.துளசியை பகவான் கிருஷ்ணரின் பாதத்தில் அர்ப்பணித்தால், கிருஷ்ணப் பிரேமை கிடைக்கும் அத்தகைய துளசிக்கு நமஸ்காரம்.
ஆடி ஏகாதசி நாளில் அன்னதானம் வழங்குவது, வாழ்வில் வளமும் நலனும் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.ஆடி மாதத்தில் மாரியம்மனை பக்தியுடன் வழிபட்டால், தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி விலகும் என பக்தர்கள் கருதுகின்றனர்.மதுரை மீனாட்சி அம்மனை ஆடி மாதத்தில் தரிசித்து வழிபடுவது குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.
தினமும் ஒரு முறை இந்த உருவத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். இனி உங்கள் வாழ்வில் தினம் தினம் வெற்றி தான்.அர்ஜூனன் தவமிருந்த போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுருவில் காட்சியளித்தார்.இந்த நவகுஞ்சரம் சேவல் தலையும், யானை, புலி, மான், மனிதன் ஆகியவற்றின்கால்களுடன், மயிலின் கழுத்து, பாம்பு வாலுடன் சிஙகத்தின் உடல் என்று ஒன்பது விலங்குகளின் உறுப்புகளை கொண்டுள்ளது. வெற்றி கிடைக்க...தினமும் பாருங்கள்..
எவ்வளவு தான் பணம் சேர்த்து வைத்தாலும் பணம் உங்களிடம் தங்கவில்லை என்றால் இப்படி செய்து பாருங்கள் முதலில் மண்ணால் செய்யப்பட்ட ஒரு உண்டியல் வாங்கி வந்து அதனை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அந்த உண்டியல் உள்ளே சிறிது பச்சை கற்பூரம் மற்றும் இரண்டு ஏலக்காய் அந்த உண்டியல் உள்ளே போட்டுக் கொள்ள வேண்டும்,பிறகு வெள்ளிக்கிழமை காலையில் வரும் குளிகை நேரத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் அந்த உண்டியலை வைத்து பூஜை செய்து விட்டு அந்த உண்டியலில் உங்களால் எவ்வளவு முடியுமோ 5 ரூபாய் அல்லது 11 ரூபாய் முதலில் போடும் பணம் ஒற்றை இலக்கில் இருக்க வேண்டும். அடுத்த நாள் முதல் உங்கள் கையில் எவ்வளவு போட முடியுமோ அவ்வளவு பணம் போடாலாம் பணம் போடும் போது உங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனமுருகி வேண்டி போடவேண்டும். ஏனெனில் குளிகை நேரத்தில் செய்யும் எந்த ஒரு செயலும் பல மடங்கு பெருகும்.
ஊருக்கு முன்பு விளக்கு ஏற்றினால் உயர் குடியாகும் என்பது பழமொழி.சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-30 முதல் 6.00 மணிக்குள் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும்.பிரம்ம நேரத்தில் விளக்கு ஏற்றிவிட்டு, பின்பு கூட நீங்கள் உறங்க போகலாம்.காலை 4 - 4. 30 ஏற்றினால் மிக மிக சிறப்பு.முன்வினை பாவம் போகும். விளக்கை ஊதியோ, கைகளால் வீசியோ அணைக்க கூடாது.மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்) ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும்,
துளசி செடிகள் இருக்கும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது பசுவின் சாணம் தெளித்த இடத்தில் தீய சக்திகள் அண்டாது| ஓடும் தண்ணீரை தீய சக்தி தாண்டாது மிருதங்கம்,உடுக்கை,சங்கு போன்ற இசை கேட்டால் தீய சக்திகள் அண்டாது. நெற்றியில் விபூதி.குங்குமம் பூசி இருந்தால் தீய சக்திகள் நெருங்காது | இரும்பு உலோகத்தை கையில் வைத்திருந்தால் தீய சக்திகள் நெருங்காது
பெண்கள் மருதாணி வைக்கும் பொழுது வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் வைப்பது நல்லது மருதாணி வைத்துள்ள பெண்களிடம் எமன் கூட நெருங்க மாட்டான் என்பது ஐதீகம். அதைப்போல் மருதாணியை சுக்கிர ஓரையிலும், சுக்கிரனின் நத்திரமான பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் வைத்தால் ராஜயோகம் வரும் என்பது ஐதீகம் மருதாணி வைத்த கையில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் பொழுது, பணம் பல மடங்கு பெருகும். மருதாணி வைத்திருக்கும் பொழுது பூச்சிகள் கடித்தால் விஷயங்கள் அவ்வளவு சீக்கிரமாக ஏறாது.
தினசரி காலையும் ,மாலையும், தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை ,கோவில் கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள் ,தீபம் ,கண்ணாடி, சந்தனம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி குழந்தைகள்.நம் வீட்டின் கிழக்கு பக்கம் துளசி செடி ,வேப்பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது தூய்மையான காற்றும் கிடைக்கும்.