இந்தியாவின் முதல் AI ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகம் திறப்பு.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்தசெங்குத்து பல்கலைக்கழக வளாகமான VELS-இன் திருவான்மியூர்
வளாகத்தை ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும்தலைமை விஞ்ஞானி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கூட்டாட்சி தேசிய மன்ற உறுப்பினர்அகமது மிர் ஹாஷிம் கூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். VELSநிறுவனர்-வேந்தர் டாக்டர் இஷாரி கே. கணேஷ், துணைத் தலைவர்டாக்டர் பிரீதா கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தொழில்துறைசார்ந்த கற்றலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில்,இன்டெல், டிசிஎஸ் அயன், மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்டநிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் விமானப் பயிற்சிப் பள்ளிஅமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுடன்,
ஜோஹோ நிறுவனத்துடனும் AI மற்றும் ஆராய்ச்சி துறைகளில்விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என VELS அறிவித்தது.
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஸ்ரீதர் வேம்பு, உள்நாட்டுதொழில்நுட்ப வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியில் கவனம்
செலுத்தி, இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில்பங்களிக்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
0
Leave a Reply