25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஆன்மீகம்

Sep 19, 2024

மகாலட்சுமி தாயாருக்கு எத்தனை பெயர்கள்?

மாதுளம் பழத்தில் இருந்து தோன்றியதால் மகாலட்சுமியை மாதுளங்கி என்று பெயர் பெற்றால், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும் மகாலட்சுமி தாயார் அழைக்கப்படுகிறார். இது மட்டுமல்ல ஜனகரின் மகளாகப் பிறந்ததால் ஜானகி என்றும் மகாலட்சுமி தாயார் அழைக்கப்படுகிறார்.பூமிக்குள்ளே இருக்கும் கலப்பையின் நுனியில் இருந்து வெளிப்பட்டதால் சீதை என்றும், பாற்கடலில் இருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் மகாலட்சுமி தாயார் இத்தனை பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

Sep 12, 2024

உலகில் 1008 வகையான  காய்கறிகள் உண்டா?

ஆதிகாலத்தில் விஸ்வாமித்ரர் புகழ் பெற்ற ராஜரிஷி. ராஜ வம்சத்தை சேர்ந்தவர்.ஆனால் கடுமையான தபஸ்ஸால் ப்ரஹ்மரிஷியாக உயர்ந்தவர்.அதுவும் “வஸிஷ்டர் வாயால் ப்ரஹ்மரிஷி” பட்டம் பெற்றவர்.ஆனால் இப்படிப்பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வஸிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான்.வஸிஷ்டரிடமிருந்து காமதேனுவை பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று.ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு [திவஸம்] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.*"அதற்கென்ன வந்தால் போச்சு!.ஆனால் 1008 வகை காய்கறி செய்துபடைக்கவேண்டும்"என்றார்.உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா?அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்?விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத்தெரியாதா என்ன ?.இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல்,  "ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா?அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார்.*வஸிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம்.ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தை பார்க்கவேண்டுமவஸிஷ்டரும் அருந்ததியும் இணை பிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.*அருந்ததி கீழ்ஜாதிப்பெண்ணாக இருந்தபோதிலும் அவள் கற்பினால் உயர்ந்தவள் என்பதால் எல்லோருக்கும் அவளே தெய்வம்.*தமிழ்ப்புலவர்கள்ஈராயிரம்ஆண்டுகளாகஅவள்புகழ்பாடுகின்றனர்.*ஸ்ராத்தச்சாப்பாடு(பாகற்காய்கறி,பலாப்பழம், பிரண்டைத்துவையல்!)*ஸ்ராத்தச்சாப்பாடு நாளும் வந்தது.விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள்இல்லை.**விஸ்வாமித்திரர்கோபத்துடன்"என்னஇது1008 வகைகாய்கள்எங்கே?"என்றுவஸிஷ்டரைவினவினார்.அவரோ"நான் அருந்ததியிடம் சொல்லி விட்டேனே!அவளையேகேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.*இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து *காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்*  *பனஸம் ஷட் ஸதம்சைவ* *ஸ்ரார்த்தகாலே விதீயதே*  *कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं*  *पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते*ஸ்லோகத்தை கூறிவிட்டு,"இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!" என்றாள்.*விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார்.பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார்."ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும்சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம்,பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.*ஆயிரம் காய்கள் ஆயிற்றா?மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்,எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன்.ஆக மொத்தம் 1008! " என்றாள்.சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே?ஸமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்

Sep 05, 2024

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் தக்காளிச்சாறு அபிஷேகம் நடக்கும்

இளநீர், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் அம்மனுக்கு நடக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் (மாசி அல்லது பங்குனி) தக்காளிப் பழச்சாறு அபிஷேகம் செய்வது வித்தியாசமானதாகும்.

Sep 05, 2024

மகன் சொல்ல மகேசன் கேட்பது- பிரணவம்

மனிதன் சொல்ல இறைவன் கேட்பது -   திருவாசகம்இறைவன் சொல்ல மனிதன் கேட்பது- கீதைமனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது -  திருவருட்பா ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது - திருமந்திரம்மனைவி சொல்ல கணவன் கேட்பது  - வாழ்க்கை  மகன் சொல்ல மகேசன் கேட்பது- பிரணவம்   

Aug 29, 2024

.சமயபுரத்தாள் பக்தர்களின் நன்மைக்காக அம்மன் சாப்பிடாமல் விரதம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பங்குனி 17  -  சித்திரை 13 வரை 24 நாள்  உணவு படைப்பதில்லை. இந்நாட்களின் தன்  பக்தர்களின் நன்மைக்காக அம்மன் சாப்பிடாமல் விரதமாக இருக்கிறாள் . இளநீர், மோர் மட்டுமே படைப்பர். 1706ல் தொடங்கிய திருப்பணி 26 ஆண்டுகளாக நடந்து 1732ல்  திறக்கப்பட்டது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இக்கோயிலைக் கட்டினார்.

Aug 29, 2024

மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்சீறா நாகம் - நாகமலைகறவா பசு - பசுமலைபிளிறா யானை - யானைமலைமுட்டா காளை - திருப்பாலைஓடா மான் - சிலைமான்வாடா மலை - அழகர்மலைகாயா பாறை - வாடிப்பட்டிபாடா குயில் - குயில்குடி.

Aug 22, 2024

கோயில் வாசல் படியில் தொட்டு வணங்குவது ஏன்?

கோயில் வாசலை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள், வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். பக்தன். கோயில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞர சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும் .எனவே அடுத்த தடவை கோயிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு. உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். 

Aug 22, 2024

மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் உள்ள. சென்னை காளிகாம்பாள் கோயில்

வெண்கல கிண்ணித்தேர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ளது.இதன் உயரம் 24 அடி. அகலம் 11 அடி. வைகாசி திருவிழாவில் அம்மன் கிண்ணித்தேரில் வலம் வருகிறாள்.இங்கு மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் ஒன்றும் உள்ளது.

Aug 22, 2024

விளக்கேற்ற கூடாத நாட்கள்

தீட்டு, இறப்பு தீட்டு நம்முடைய பங்காளிகளுடைய வீட்டில் இறப்பு நேர்ந்து விட்டது என்றால் நிச்சயமாக நம்முடைய வீட்டிலும், காரியம் முடியும் வரை விளக்கு ஏற்றக்கூடாது. 16 நாள் காரியம் 3 முடிந்த பின்பு தான், நம்முடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, பூஜை ஜாமான்களை  சுத்தம் செய்துவிட்டு ,தலைக்கு குளித்துவிட்டு, பின்பு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.அடுத்தபடியாக குழந்தை பிறந்த தீட்டு ,நம்முடைய வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் புண்யாதானம் செய்யும் வரை, வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யக் கூடாது. குழந்தை பிறந்தவுடன் சிறிது நாட்களுக்கு விளக்கு  ஏற்றக்  கூடாது. 

Aug 15, 2024

பொட்டு வைக்க உதவும் விரல்களுக்கு ஒரு சக்தி உண்டு

.1-கட்டைவிரல்-சக்தியைதரும். 2-நடுவிரல்-நீண்ட ஆயுள். 3-மோதிரவிரல்-போஷாக்கு. 4ஆள்காட்டி விரல் சுதந்திரம். 1-சிவப்பு-மற்றவர்களை கவரும். 2-கருப்பு-அமைதி. 3-மஞ்சள்-செல்வம். 4-சந்தனம் வெண்மை மற்றும் மன அமைதி.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 20 21

AD's



More News