25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Jun 28, 2024

கடவுள்களும் – வாகனங்களும் 

 விநாயகர் - மூஞ்சுறுமுருகன் - மயில்சிவ பெருமான் - நந்திபைரவர்-நாய்அய்யப்பன் - புலிலட்சுமி - செந்தாமரை, ஆந்தைசரஸ்வதி- வெண்தாமரை,அன்னம்விஷ்ணு - கருடன்பிரம்மா - அன்னம்கண்ணன் - ஆல இலைசண்டி தேவி - பன்றிதுர்க்கை - கலைமான்இந்திரன் - ஐராவதம் யானைகாமதேனு - பசுகுபேரன் - கீரி அக்னி  - ஆடு

Jun 28, 2024

நவகிரக – வாகனங்கள்

சூரியன் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் சந்திரன் - மான்கள் பூட்டிய ரதம் செவ்வாய் - ஆட்டுக் கிடா புதன் - குதிரை வியாழன் - யானை சுக்கிரன்- முதலை சனி - காகம் ராகு .சிங்கம், புலி கேது - மீன்

Jun 21, 2024

.பஞ்ச நரசிம்மர் திருக்கோயில்

தெலங்கானா மாநிலம், யாதகிரிகுட்டாவில் உள்ள நரசிம்மர் கோயில்,300 அடி உயரம் உள்ள பெரிய குன்றின் மீது அமைந்துள்ளது. புராணங்கள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு கண்கவர் வரலாற்றை இக்கோயில் கொண்டுள்ளது. இக்கோயில் நரசிம்மரின் ஐந்து வடிவங்களைக் கொண்டது.புராணத்தின்படி, இக்கோயிலின் இருப்பிடம் யாதவ வம்சத்தின் ஆட்சியாளர் யதுவின் புராணக் கதையுடன் தொடர்புடையது. ரிஷ்ய ஷ்ருங்கரின் மகனான ஸ்ரீ யாதவ மகரிஷி ஆஞ்சனேயர் சுவாமியின் அருளாசியுடன் நரசிம்ம சுவாமியை நோக்கித் தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் அவருக்கு5 திருக்கோலங்களில் காட்சியளித்தார். அவை: ஸ்ரீ ஜ்வாலா நரசிம்மர், ஸ்ரீ யோகானந்த நரசிம்மர், ஸ்ரீ உக்ர நரசிம்மர், ஸ்ரீ கந்தபெருந்த நரசிம்மர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் என ஐந்து திருக்கோலங்களில் தோன்றினார். இதனால் இந்தக் கோயிலுக்கு பஞ்ச நரசிம்மர் கோயில் என்று பெயர் வந்தது.புராண இதிகாசங்களின்படி, யாதகிரி குட்டா, ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்ற பிறகு நரசிம்ம பகவான் ஓய்வெடுத்த இடமாக நம்பப்படுகிறது. இந்த இடம் தீமையின் மீது நன்மையின் வெற்றியை குறிக்கிறது.புராண சிறப்புகளைப் பெற்ற இந்த நரசிம்மர் கோயிலுக்கு மக்கள் வந்து வணங்கி வேண்டிக் கொண்டால் அவர்களின் நோய் தீரும் என்பது ஆழமான நம்பிக்கை. இந்த கோயிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை,'வைத்திய நரசிம்மர்' என்று போற்றுகிறார்கள். மேலும், கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வந்து வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். இக்கோயிலில்40 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தீராத நோய்களைக் கூட தீர்த்து வைப்பார் என்று மக்கள் கருதுகிறார்கள். பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்கள் காணக்கிடைக்கின்றனபத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் இது. விஜயநகர பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது சுயசரிதையில் இந்த நரசிம்மர் கோயிலுக்கு வழக்கமாகச் சென்று வழிபட்டு வந்ததையும், போருக்கு செல்லும் முன்பு இங்கு விசேஷ வழிபாடு செய்ததையும் பற்றிய குறிப்புகள் உள்ளன.நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரமும் அதைத் தொடர்ந்து பல உள் மண்டபங்களும் கொண்ட இந்தக் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முக்கிய பூஜை மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் கருவறைக்கு முன்னால் ஒரு பெரிய மகா மண்டபம் உள்ளது. கர்ப்பக்கிரகம் ஒரு குறுகிய குகையில் நரசிம்மரின் அவதார உருவத்துடன் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயிலின் கருவறையில் ஜ்வாலா நரசிம்மர், கந்தபெருண்ட நரசிம்மர்(உருவம் இல்லாதவர்) மற்றும் யோக நரசிம்மர் ஆகியோர் வழிபாட்டில் உள்ளனர். மேலும், லட்சுமி நரசிம்மரின் வெள்ளி உருவமும் ஆண்டாளம்மா சன்னிதியும் உள்ளன.கருவறை குகையின் சுவரில் உள்ள இரண்டு பாறை வடிவங்கள் முறையே ஜ்வாலா நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் என்று வணங்கப்படுகின்றன. ஜ்வாலா நரசிம்மர் உருவம் ஒரு பாம்பை ஒத்திருக்கிறது. அதே நேரத்தில் யோக நரசிம்ம உருவம் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. மலையடிவாரத்தில் வைகுண்ட துவார நுழைவாயில் உள்ளது. கோயிலின் உள் கருவறையில் சிகரத்தின் மேல் மகாவிஷ்ணுவின் தங்க சுதர்சன சக்கரம் மூணுக்கு மூணு அடி பரிமாணத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.கருவறையில் நரசிம்மரின் சிலைக்கு அருகில் நிற்கும்போது ஒரு சூடான உணர்வை அல்லது தெய்வத்தின் சுவாசத்தை அனுபவிப்பதாக மக்கள் அடிக்கடி தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வு தெய்வீக ஆசீர்வாதமாக கருதப்படுகிறது.

Jun 21, 2024

18 சித்தர்கள் ஐக்கியமான ஊர்கள்

அகத்தியர் -  கும்பகோணம்,. வான்மீகி - எட்டுக்குடி . அழகனி சித்தர் - நாகப்பட்டினம். கோரக்கர் - வடக்கு பொய்கை நல்லூர். கமலமுனி - திருவாரூர். சட்டைமுனி - ஸ்ரீரங்கம். சுந்தரானந்தர் - மதுரை. கருவூரார் - கரூர். அகப்பைசித்தர் - திருவிடை மருதூர் . கொங்கணர் - திருப்பதி . தன்வந்தரி - வைத்திஸ்வரன் கோவில் . பாம்பாட்டி - மருதமலை திருக்கடையூர் . இராமதேவர் - அழகர்மலை . இடைக்காட்டு சித்தர் - திருவண்ணாமலை . திருமூலர் - சிதம்பரம் . போகர் - பழனி . காளங்கிநாதர் - காஞ்சிபுரம் சதுரகிரி . மச்சமுனிசித்தர் - திருப்பரங்குன்றம் . 

Jun 19, 2024

பல்லியை வைத்து சகுனம்

பொதுவாகவேவீட்டில் உலாவும் உயிரினங்களில் பல்லி முக்கியஇடம் வகிக்கின்றது. பல்லியைவைத்து பல்வேறு சகுனம்பார்க்கும் வழக்கமும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது.பல்லியைப்பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும்ஏற்படும். பல்லி இருந்தாலேவாழும் இடம் என்றுசொல்வார்கள்.ஆனால், சுவற்றில்பல்லியைப் பார்த்தாலே தெறிக்கஓடுபவர்களும் இருக்கிறார்கள்.வீட்டில்சில நேரங்களில் நாம் குட்டி பல்லிகள் சுற்றுவதை கண்டிருப்போம். இதற்கு இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் என்ன பலன் இருக்கின்றது பல்லியை வைத்து பல்வேறு சகுனம் பார்க்கும் வழக்கமும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றதுஇந்துசாஸ்திரத்தின் படிபல்லிகள் மகா லட்சுமியின் வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே வீட்டில்பல்லி குட்டிகள் நடமாடினால்,இது மிகவும் நல்லஅறிகுறி என நம்பப்படுகின்றது. எனவே ஒவ்வொருமுறை பல்லியை பார்க்கும்போதும் உங்களின் நிதிபிரச்சனை தீரும், கஷ்டங்கள்தீரும் எனபது ஐதீகம்.எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நல்லநிகழ்வுகள் குறித்து உணர்துவதாகவே பல்லியின் குட்டியைகாண்பது பார்க்கப்படுகின்றது.ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிபல்லிகளை ஒன்றாக பார்த்தால்அது மிகவும் நல்லசகுனம் ஆகும். அதனால்எதிர்பாராத நல்ல செய்திகள்கிடைக்கும். மேலும் ஆண்மற்றும் பெண் பல்லிகள் வீட்டில் இணைவதை பார்த்தால்,கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமையும் பாசமும் அதிகரிக்கும்.நல்ல நாட்களின்குட்டி பல்லி வீட்டிற்குவந்தால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும் என இந்துசாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. வீட்டில் பல்லிகுட்டிகள் ஓடினால் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும்ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும்.வீட்டில்பல்லி குட்டியை கண்டால்அதை விரட்டவோ, கொல்லவோகூடாது. அதை கொல்வதால் மோசமான பலன்களை சந்திக்கநேரிடும். பாரிய பணதட்டுப்பாடு மற்றும் தொழில்ரீதியான வீழ்சிக்கு வழிவகுக்கும்.ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் பயப்பட தேவையில்லை அதனை நிலத்தில் புதைத்துவிட்டால் எந்த தீமையும் ஏற்படாது.

Jun 14, 2024

கோபுரத்தின்உச்சியில் சுதர்சன சக்கரம்உள்ள கோவில் ஸ்ரீநாத்ஜி

கோவிலின் கோபுரத்தில் கலசங்கள் தான் இருக்கும். ஆனால் இங்குள்ள கோவிலிலோ சுதர்சன சக்கரம் பொருத்தப்பட்டு மணிக்கு ஒரு முறை அதை வாசனை திரவியத்தால் துடைத்து விடுகிறார்கள்.நாதன் இருக்கும் இடத்தின் வாயில்அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில்என்னும் பொருள்பட ஸ்ரீநாத் என்றபெயரில் அமைந்துள்ள ஆலயம். ராஜஸ்தானில் உதய்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் பனஸ்நதி கரையில் உள்ளது.இறைவன் ஸ்ரீநாத்ஜி. பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்தஇறைவனை வைணவ ஆச்சாரியர்களில் முக்கியமானவரான ஸ்ரீமந் நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்தபோது பூஜித்து வந்ததாக சொல்கிறார்கள். ஸ்ரீநாதமுனிகள் நேரில் வந்து தரிசிக்க எண்ணியகோவில் இது. அவர் வர இயலாத காரணத்தால் அவர்பெயரில் ஸ்ரீநாத் துவாரகை என்றுஅழைக்கப்படுகிறது. 1665 இல் ஔரங்கசீப் மதுராவை தாக்கிய போது1672 ல் இங்கு கொண்டுவரப்பட்டது. அந்நிய படையெடுப்பின் போதுகோஸ்வாமி தாவோஜி என்பவர் ராணாராஜ்சிங்கின் உதவியுடன் பெருமாளின் விக்கிரகத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டிநகர மறுக்கவே இந்த இடமேஇறைவனுக்கு விருப்பம் போலும் என உணர்ந்த தாவோஜி அங்கேயே விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தாராம்.ஏழு வயது குழந்தையாக இங்கு கிருஷ்ணர் காட்சி தருகிறார். வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் என்ற சம்பிரதாயத்தில் இக்கோவில் வழிபாட்டு முறை உள்ளது. வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல் நாத்ஜி இவ்வழிபாட்டு முறையை ஸ்தாபித்தார்.கோவர்தன மலையைதூக்க இடது கையை தூக்கியதால் விக்ரகம் அவ்வாறே காணப்படுகிறது. இடதுகையால் கோவர்தனகிரியை சுமந்த படியும், வலதுகையை இடுப்பில் வைத்த படியும் தரிசனம் தரும்ஸ்ரீநாத்ஜி கருப்பு சலவை கல்லில் வடிக்கப்பட்ட விக்ரகம். இந்த விக்கிரகத்தில் இரண்டுபசுக்கள், இரண்டு மயில்கள், பாம்புமற்றும் கிளி ஆகியவையும் உள்ளன. இங்கே எம்பெருமாளை குழந்தை கண்ணனாகவே பாவித்து வணங்குகின்றனர். குழந்தையால் நீண்டநேரம் நிற்க முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும்30 நிமிடங்களுக்கு மட்டுமே தரிசனம் தருகிறார். பக்திமீராவுக்கு ஸ்ரீ கண்ணன் அடைக்கலம் அளித்ததலமும் இதுதான்.காலையிலிருந்து இரவுவரை கிருஷ்ணர் விக்ரகம் பலவாறுஅலங்கரிக்கப்படுகிறது. ஆரத்திஇங்கு மிகவும் விசேஷமாக காட்டப்படுகிறது.இங்கு தரப்படும் பிரசாதங்கள் மிகவும் பெரிய சைஸ் உள்ளன. விலையும் ஜாஸ்தி தான்.ஸ்ரீநாத்ஜிக்கு அணிவிக்கப்படும் ஆடைகள்தைக்கும் இடம் மாடியில் உள்ளது. வாயில்துணி கட்டிக் கொண்டு(எச்சில் தெறிக்காமல் இருக்க) ஸ்ரீநாத்திற்கு ஆடை தைக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விதவிதமாக அழகாகஉடை மாற்றி விடுகிறார்கள்.அதேபோல் பகவானுக்கு மாலையில் அணிவிக்கக்கூடிய மலர்மாலையை தொடுத்து மிக அழகாகவாழை இலையை சுற்றி மூடிவைக்கிறார்கள்.பூத்தொடுக்கும் இடம், மாலை கட்டும் இடம், உடைகள்தைக்கும் இடம், பிரசாதம் செய்யும் இடம்ஆகியவற்றை நம்மால் நேரில் சென்றுபார்க்க முடிகிறது.மிக மிக அழகான சுதர்சன சக்கரம் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. அதற்குஅரை மணி நேரத்துக்கு ஒரு முறை வாசனை திரவியத்தை கொண்டுபஞ்சால் துடைத்து விடுகிறார்கள். சுதர்சன சக்கரம் உஷ்ணம்ஆகிவிடும் எனவும் அதனால் அரை மணிக்கு ஒரு முறைவாசனை திரவியங்களை பஞ்சில் நினைத்து ஒத்திஎடுப்பதாகவும் கூறுகிறார்கள்.நம் பக்கம் திருப்பதி ஏழுமலையானைப் போல தென்னிந்தியர்கள் ஸ்ரீ நாத்ஜீயை கொண்டாடுகின்றனர் 

Jun 14, 2024

பக்தியால் ஏற்படும் சிறப்புகள்

சாதத்துடன் பக்தி இணையும்பொழுது பிரசாதம் ஆகின்றது. பட்டினியுடன் பக்தி இணையும் பொழுது நோன்பாக மாறுகின்றது. தண்ணீருடன் பக்தி இணையும் பொழுது தீர்த்தமாகின்றது. பயணத்துடன் பக்தி இணையும் பொழுது யாத்திரையாகின்றது. செயல்பாட்டில் பக்தி இணையும்பொழுது சேவையாகின்றது. இசையுடன் பக்தி இணையும்பொழுது கீர்த்தனையாகின்றது. வீடு பக்தியில் திளைக்கும் பொழுது கோவிலாக மாறுகின்றது. பிரம்மச்சரியம் பக்தியில் இணையும் பொழுது துறவறமாகின்றது. மனிதனை பக்தி ஆக்கிரமிக்கும் பொழுது புனிதன் ஆகின்றான். அந்த பக்தி முழுமையடைந்தால் ஞானியாகின்றான். 

Jun 07, 2024

யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம் விநாயகி

விநாயகரைபற்றிதெரியாதவர்கள்இருக்கமுடியாது.முழுமுதற்கடவுளானவிநாயகரைவணங்கியபின்தான்எந்தஒருசெயலாகஇருந்தாலுமேசெய்யத்தொடங்குவோம்.அப்போதுதான்நம்மனதில்நினைத்தகாரியம்எந்தத்தடையுமின்றிநிறைவேறும்என்றநம்பிக்கைஉண்டு. ஆனால்,விநாயகியைபற்றிகாண்போம்.விநாயகி என்பவர் யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம். இவரைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. இவரைப் பற்றிய குறைந்த தகவல்களும், சிலைகளுமே உள்ளன. விநாயகிக்கு சிலை இருந்தால் கண்டிப்பாக அதற்கு பின் கதையும் காரணமும் இருக்கும் என்று தேடினால் அவரைப் பற்றிய பெரிதாக தகவல் இல்லை. பிள்ளையாரை நம்முடைய இஷ்டப்படி எப்படி வேண்டுமோ வழிபடலாம் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. அதுவும் கி.பி.6ம் நூற்றாண்டிற்கு பிறகு தான். அதற்கு முன் நம்பிக்கை இருந்தது, ஆனால் உருவ வழிபாடு கிடையாது. யானை தலையினை கொண்டிருப்பதால், விநாயகருடன் இவரை சம்பந்தப்படுத்தி பேசுவதுண்டு.ஸ்ரீ கணேசா, வைநாயகி, கஜனனா, விக்னேஷ்வரி, கணேசானி என்று பல பெயர்களில் இவரை அழைக்கிறார்கள். விநாயகி சில நேரங்களில்64 யோகினி தெய்வங்களுடன்இருக்கிறார். ஜெயின் மற்றும் புத்தத்தில் விநாயகியைஒரு தனி தெய்வமாகவேகுறிப்பிடுகிறார்கள். புத்த மதத்தில் விநாகியை'கணபதி ஹிரிதயா’ என்று அழைக்கிறார்கள். அதாவது கணபதியின்இதயம் என்று பொருள்.முதலாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விநாயகியின் சிலை ராஜஸ்தானில் உள்ளது. அதன் பிறகு10ம் நூற்றாண்டிலிருந்தே விநாயகியின் சிலை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பிரபலமான விநாயகியின் சிலை மத்திய பிரதேசத்தில் உள்ள சௌசாத் யோகினி கோயிலில் அமைந்துள்ளது.மச்ச புராணத்தில் விநாயகியை பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிவபெருமான் அரக்கனை வதம் செய்யவே விநாயகியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. ஹரிவம்சா, வாயு மற்றும் ஸ்காந்த புராணங்களிலும் விநாயகியை பற்றிய குறிப்புகள் உள்ளன.எல்லா தொடக்கங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் ஏற்றபெண் வடிவம்தான் விநாயகி என்றும் கூறுகிறார்கள். விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதாக விநாயகபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி விநாயகர் ஏற்றபெண் வடிவம்தான் விநாயகி. தமிழ்நாட்டில் சொல்லுமளவிற்கு விநாயகிக்கு தனி சன்னிதியில்லை என்றாலும் கோயில் தூண்களில் விநாயகியை காண முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஅழகம்மன் திருக்கோயிலில் வீணை வாசித்தப்படி இருக்கும் விநாயகியை காணலாம். அதேபோலசுசீந்திரத்தில் உள்ள தாணுமலையான் கோயிலில் விநாயகியின் சிற்பத்தை காண முடிகிறது. மதுரைக்கு பெயர் போன மீனாட்சியம்மன் கோயிலில்‘விநாயகதாரணி’ என்றபெயரில் பெண் உருவிலான விநாயகியை காண முடிகிறது. இவரின் கால் புலிக்கால் போல அமைக்கப்பட்டுள்ளதால்‘வியாக்ரபாத்தா விநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்.களத்திர தோஷம், திருமணத்தில் உள்ளதடை, காரியத்தில் ஏற்படும் தடை ஆகியவை நீங்க வேண்டும் என்றால் மாதத்தில் வரும்வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகிக்கு சந்தனக்காப்பிட்டு வழிபட்டால் அனைத்து தடைகளும் விலகும் என்றுநம்பப்படுகிறது.

May 31, 2024

காஞ்சிகைலாசநாதர் கோயில் போலவேஉருவ ஒற்றுமை கொண்டபனமலை சிவன் கோயில்

ஒரு பக்கம் வயல்வெளி, இன்னொரு பக்கம் ஏரி என்று சிறு குன்றின் மீது அமைந்துள்ளது பனமலை சிவன் கோயில். இந்தக் கோயிலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக உள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனமலை என்னும் அழகிய கிராமத்தில்தான் இக்கோயில் அமைந்துள்ளது.தமிழ்நாட்டின் முதல் கருங்கல் கோயில் இதுதான் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சி கைலாசநாதர் கோயில்தான் உலகின் முதல் கருங்கல் கோயில் என்று கூறுவார்கள். இந்த பனமலை கோயிலும், காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இரண்டு கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்விரு கோயில்களைக் கட்டியதும் ஒரே மன்னர் என்பதால் இவ்வாறு கூறுகிறார்கள்.இக்கோயிலுக்குச் செல்லும் மலையடிவாரத்தில் இருக்கும் விநாயகர் கோயிலை பாறையிலேயே குடைந்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முகப்பு மண்டபத்தை அமைத்துள்ளனர். இந்த மலையில் இயற்கையாக அமைந்த சுணைகளும் உள்ளன. வலது பக்கத்தில் பச்சைப்பசேலேன்று வயல்வெளியும்,இடதுபக்கம்பிரம்மாண்டமானஏரியும்அமைந்திருக்கிறது.இக்கோயிலை1300 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்ம பல்லவ மன்னனே8ம் நூற்றாண்டில் கட்டினார். இந்த ராஜசிம்ம பல்லவ மன்னன்தான் ஒரே விதத்தில் மூன்று கோயில்களை கட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், பனமலை சிவன் கோயில் ஆகியவையாகும்.இந்த ஊருக்கு பனைமலை என்று பெயர் வரக்காரணம் இந்த மலையில் நிறைய பனை மரங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு பல்லவ மன்னன்தாளகிரீஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளார்.‘தாள்’ என்பதுபனை மரத்தை குறிக்கும் சொல்லாகும். பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்டசிவன் என்பதால் இது இத்தலம் பனமலைஎன்று அழைக்கப்படுகிறது.மூலவருக்குப் பின்புறம் சோமாஸ்கந்தர் காட்சி தருகிறார். கோயில் கருவறையைச் சுற்றி நிறைய சிற்பங்கள் காணப்படுகின்றன. கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி இக்கோயிலை கட்டியிருப்பது தனிச் சிறப்பு. மேலும், இக்கோயிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சுவர் ஓவியம் ஒன்று இக்கோயில் கருவறையில் உள்ளது. அந்த ஓவியத்தை இப்போது பார்ப்பதற்கும் கலைநயத்துடனும், உயிரோட்டத்துடனும் உள்ளது. தற்போது இந்த ஓவியத்தில் எஞ்சியிருப்பது பார்வதி தேவி மட்டும்தான். இவருடைய நகைகள் அவ்வளவு நுணுக்கத்துடனும், கலைநயத்துடனும் வரையப்பட்டிருக்கிறது.பார்வதி தேவி எதிரே இருக்கும் நடராஜரை பார்ப்பது போல இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. ஆனால், நடராஜரின் ஓவியம் முற்றிலுமாக சிதைந்த நிலையில் உள்ளது. கோயிலுக்கு பின்புறம் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அது செஞ்சிக்கோட்டை வரை செல்வதாகவும் சொல்லப்படுகிறது.இக்கோயிலின் அருகில் இருக்கும் ஏரிதான் பனமலை கிராமத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்தக் கோயிலைக் கட்டிய காலத்தில்தான் இந்த ஏரியையும் வெட்டியிருக்கிறார்கள். பல்லவர்கள் எங்கே கோயில் கட்டினாலும் அங்கு ஓர் நீர்நிலையை அமைப்பது வழக்கம்.இந்த அதிசயக் கோயிலை ஒருமுறையாவது சென்று தரிசித்து ஈசனின் அருளைப் பெறுவது சிறப்பாகும்.

May 24, 2024

திருநந்திக்கரை குடைவரை குகைக்கோயில்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே அமைந்துள்ளது திருநந்திக்கரை குடைவரை குகைக்கோயில். கி.பி.7ம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பல்லவர் கால குகைக்கோயில் இது.சமணர்களின்வழிபாட்டுக்காகநிறுவப்பட்டஇக்கோயில்பிற்காலத்திலஇந்துகோயிலாகமாறிவிட்டது.இங்குள்ள சுதை ஓவியங்கள் கி.பி.9 மற்றும்10ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். சில சுவரோவியங்கள் கேரள பாணியில் அமைந்துள்ளன. இவை ராமாயணம் மற்றும் மகாபாரத நிகழ்வுக் காட்சிகளை சித்தரிக்கும் வண்ணம் உள்ளன. இயற்கையான தாவர நிறங்கள் மற்றும் நிறமிகளைக்கொண்டு இந்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியாகும். இது மிகவும் தொன்மையான குடைவரை கோயில்.1956ம் ஆண்டு வரை கேரளாஅரசின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. தற்போது தமிழ்நாடு அரசின்கீழ் உள்ளது.கி.பி.8ம் நூற்றாண்டில் வீரநந்தி என்றசமண முனிவர் இக்கோயிலில் தங்கிசமயப் பணியாற்றியுள்ளார். கி.பி.1003ம் ஆண்டுமுதலாம் ராஜராஜ சோழன் இக்கோயிலில் தங்கிதனது பிறந்த நாளைக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.முகப்பின் மேற்குப்பாறை சுவரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் திருநந்திக்கரை மகாதேவருக்கு தன் பிறந்த நாளான ஐப்பசி சதய நாளன்று விழா எடுக்கவும், ஆற்றில் நீராட்டவும், நாழி நெய் ஊற்றி நந்தா விளக்கேற்றவும் இந்நாட்டில் இருந்த முட்டம் என்னும் ஊரை மும்முடிச் சோழநல்லூர் என பெயர் மாற்றம் செய்து தானமாக வழங்கிய செய்தியினை பதிவு செய்துள்ளது.திருநந்திக்கரையில் இரண்டுமுக்கியமான சிவன் கோயில்கள் உள்ளன. ஒன்று, திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில்மற்றது திருநந்திக்கரை குகைக் கோயில். தெற்குநோக்கிய திருநந்திக்கரை குன்றின் சரிவில் உள்ளதுஇக்குடைவரை கோயில். இது தரை மட்டத்திலிருந்து4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து குகைத்தளத்திற்கு செல்வதற்கு10 படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இதில்இரண்டு படிகள் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வெட்டப்பட்டது.இக்குடைவரைக் குகையில் முகப்பு மண்டபம், முக மண்டபம், உள் மண்டபம், கருவறைஎன உள்ளன. முகப்பு மண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம்செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுதைஓவியங்கள் பல அழிந்து காணப்படுகின்றன. உள் மண்டபத்தின் மேற்குச் சுவரில் கருவறைஅகழப்பட்டுள்ளது.இதில் சிவலிங்கத்தின் பாணம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலில் நான்குவட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்து . 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News