இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை முதல் சீசன் சென்னையில், நேற்று பெண்களுக்கான ,65-70 கிலோ பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரி 5-0 என, அனைத்து இந்திய போலீஸ் (ஏ.ஐ.பி.) அணியின் ஸ்னேஹாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.அசாம் வீராங்கனை அங்குஷிதா 3-2 என, ராஜஸ்தானின் பார்த்வி கிரேவலை, 60-65 கிலோ பிரிவு பைனலில், வென்று தங்கத்தை கைப்பற்றினார்.இந்திய விளையாட்டு ஆணையம் அணியின் 57-60 கிலோ பிரிவு பைனலில் ,பர்வீன் ஹூடா 3-2 என, ஹரியானாவின் பிரியாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன்நைஜீரியாவின் அபியா நகரில், முதல் சீசன் ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('எஸ். எல்.3') பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-7, 9-21, 21-9 என சகவீரர் மந்து குமாரை வென்றுதங்கத்தை கைப்பற்றினார்.இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த்கடம் ஜோடி ,ஆண்கள் இரட்டையர் பிரிவு ('எஸ். எல்.3-4') பைனலில் 21-13, 21-18 என நைஜீரியாவின் ஒபின்னாபிரிசியஸ், சிகோஜி ஜெரிமியா ஜோடியைவென்று தங்கத்தை கைப்பற்றியது. கலப்பு இரட்டையர் - பிரிவு ('எஸ்.எல்.3' பைனலில் 'எஸ்.யு.5') இந்தியாவின் பிரமோத் பகத், ஆரத்தி பாட்டீல் - 4 21-13, 21-17 பெருவின் கெர்சன் லாஸ் டானால், டயானா ரோஜஸ் கோலக் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.இதன் மூலம் பிரமோத் பகத் 37, 'ஹாட்ரிக்' தங்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் ரஞ்சித் சிங், மூன்று வெண்கலம் வென்றார். 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தன.
சென்னையில் நடந்த லீக் போட்டியில்நேற்று ஜெய்ப்பூர், டில்லி அணிகள் மோதின. டில்லி அணியினர், ஜெய்ப்பூர்வீரர்களை ஆல்-அவுட்' செய்தனர். ஆட்ட நேரமுடிவில் டில்லி அணி 29-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆறாவது தோல்வியை பெற்ற ஜெய்ப்பூர் அணி (12 புள்ளி) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஓபன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடர்நியூயார்க்கில், முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபய் சிங் மோதினர். வீர் சோட்ரானி 3-1 (6-11, 11-6, 11-5, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 'நடப்பு தேசிய சாம்பியன்' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்று போட்டியில் 3-0 (11-2, 11-8, 14-12) என வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தார்.இந்திய வீரர் ரமித் டான்டனுக்கு, முதல் சுற்றில் 'பை' சிறப்பு அனுமதிவழங்கப்பட்டதால், நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுவார்.
அல் ஜன் மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்கள் ஒற்றையர்பிரிவு பைனலில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 20, ஷ்ரியான்ஷி வாலி ஷெட்டி 18, மோதினர். முதல் செட்டை தஸ்னிம் மிர் 21-15 எனக் கைப்பற்றினார். பின் ஷ்ரியான்ஷி, 2வது செட்டை 22-20 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்துஇவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-7 என மிகச் சுலபமாக வென்றார்.ஷ்ரியான்ஷி மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் 15-21, 22-20, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'சூப்பர் 100' பட்டத்தை கைப்பற்றினார்.
நேற்று நடந்த பெண்கள் உலக கோப்பைஇலங்கை தலைநகர் கொழும்புவில் (50 ஓவர்) லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாத்திமா சனா பாகிஸ்தான் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 247 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பாகிஸ்தான் அணி 159 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
மாற்றுத்திறனாளி களுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் ('டி12') பைனலில், பந்தய துாரத்தை 24.46 வினாடியில்கடந்த இந்தியாவின் சிம்ரன் சம்ரா, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இம்முறை இவர் கைப்பற்றிய 2வது பதக்கம். இவர், 100 மீ., ஓட்டத்தில் ('டி12') தங்கம் வென்றிருந்தார். இந்தியாவின் பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி35') பைனலில் இலக்கை 14.33 வினாடியில் கடந்தவெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இம்முறை 200 மீ., ஓட்டத்தில் ('டி35') வெண்கலம் வென்ற இவர், உலக தடகளத்தில் தனது 4வது பதக்கத்தை பெற்றார் இந்தியாவின் நவ்தீப் சிங், ஆண்களுக்கானஈட்டி எறிதல் ('எப்41') பைனலில், அதிகபட்சமாக 45.46 மீ., எறிந்து வெள்ளி வென்றார். இது, உலக தடகளத்தில் இவரது 2வது பதக்கம் ஆனது.. இந்தியாவின் சந்தீப் ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('டி44') பைனலில், இலக்கை 23.60 வினாடியில் கடந்து வெண்கலம் வென்றார்.உலக பாரா தடகளம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தியாவுக்கு இம்முறை 6 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது. உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைத்துள்ளது.
இந்தியாவின் அபிஷேக் சர்மா ICC, T-20 தரவரிசையில் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் 7 இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்து, T-20 தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 919 புள்ளிகள் எடுத்ததே, இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபிஷேக் முறியடித்தார்.
நார்வேயின் போர்டேநகரில்உலகபளுதுாக்குதல்சாம்பியன்ஷிப் நார்வேயின் போர்டேநகரில், 87 நாடுகளில் இருந்து 477 வீரர், வீராங்கனைகள் 87 பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு போட்டியில்வெள்ளி வென்ற மீராபாய் சானு 31,உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.மீராபாய் சானு முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 84 கிலோ தூக்கினார். அடுத்து இரு முறை 87 கிலோ தூக்க முயன்று, முடியாமல் போக, 3வது இடம் பிடித்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒரு பக்கம் அனுபவ மில்லா, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதும் தொடர்ந்தது.கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தனர். அடுத்து களம் இறங்கிய ராகுல் 100 ரன்னும், ஜுரல் 125, ரன்னும், ஜடேஜா 104 ரன்னும் எடுத்து மூன்று சதத்தை கொண்டாடினர். 286 ரன் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்தது.விரைவாக ரன் சேர்த்தால், இன்று இந்திய பேட்டர்கள் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.