25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Aug 03, 2024

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்றள்ளது. நீயுசிலாந்து, அயர்லாந்தை வென்ற இந்தியா, அர்ஜென்டினாவுடன் டிரா செய்தது. பெல்ஜியத்திடம் மட்டும் தோல்வியடைந்தது.லீக் சுற்றில் விளையாடி 5 போட்டியில் 3 வெற்றி, ஒரு டிரா,ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடம் பிடித்தது. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக் அரங்கில் 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. நாளை நடக்கும் காலிறுதியில் இந்திய அணி, ஏ பிரிவில் 3-வது இடம் பிடிக்கும் ஜெர்மனி  , பிரிட்டன், நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளும்.

Aug 03, 2024

துப்பாக்கி சுடுதலில் அசத்தும் மனுபாகர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கி சூடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் மனு பாகர், ஈஷா சிங் பங்கேற்றனர். இதில் பிரிச்சியன், ரேபிட், என இரு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இம்முறை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனி நபர், கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெண்கலம் வென்ற மனு பாகர், ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இன்றைய பைனலில் மீண்டும் சாதித்தால், ஒரே ஒலிம்பிகில் ஹாட்ரின் பதக்கம் வென்ற முதல் இந்தியர்  என்ற புதிய வரலாறு படைக்கலாம்.

Aug 03, 2024

வில்வித்தையில் கலக்கும் அன்கிதா, தேவரா 

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான ரவுண்டு 16 போட்டியில் இந்தியா இந்தோனேஷியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் அன்கிதா பகத்திராஜ்.  பொம்ம தேவரா ஜோடி பங்கேற்றது. இதில் இந்திய அணி 5-1 (37-26, 38-38, 38-37) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியா, ஸ்பெயின், அணிகள் மோதின. இதில் மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 5-3 (38-37,38-38, 36-37 37-36)என வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒலிம்பிக் வில்வித்தையில் அரையிறுதிக்கு முன்னேறி முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தனர்.

Aug 03, 2024

அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் லக்சயா சென்.

.பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சீன,தைபேயின்  சோடியென் சென் மோதினர் முதல் செட்டை 19-21 என இழந்த லக்சயா சென், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-15 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் மீண்டும் அசத்திய லக்சயா சென் எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிகும் 3-வது செட்டில் மீண்டும் அசத்திய லக்சயா சென் 21-22 என தன்வசப்படுத்தினார்.முடிவில் 19-21, 21-15,21-12, என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர், மூன்றாவது இந்தியரானார்.

Aug 03, 2024

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் ஆல்ரவுண்டு பிரிவு தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் சிமோன் பைனல்ஸ், 59.566 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான நீச்சல் போட்டி 4 × 200 மீட்டர் பிரீஸ் டைல் பிரிவு பைனலில் இலக்கை 7 நிமிடம் 38.08 வினாடியில் அடைந்த ஆஸ்திரேலிய அணி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றது. கேட்டி லெடிக்கி இடம் பெற்ற அமெரிக்க அணி (7 நிமிடம் 40.86 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. சீனாவுக்கு (7 நிமிடம் 42.34 வினாடி) வெண்கலம் கிடைத்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் லெடிக்கி, தனது 3வது பதக்கம் வென்றார்.டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-4 இடத்துக்கான போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுலோவாகியாவின் அனா கரோலினா மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-1, என்ற நேர் சேட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். இது, ஒலிம்பிக் வரலாற்றில் இவரது முதல் பதக்கம்.

Aug 02, 2024

துப்பாக்கிசுடுதலில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே

பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் துப்பாக்கிசுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன்ஸ் பிரிவில் போட்டி நடந்தன. இதன் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே, 590 புள்ளி எடுத்து, 7வது இடம் பிடித்து மொத்தம் 8 பேர் பைனலுக்கு முன்னேறினர். ஸ்வப்னில் முதல் 4 வாய்ப்பில் 10-5, 9-4, 9-9, 10-0, என சற்று தடுமாற, பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் 451.4 புள்ளி எடுத்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இப்பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என சாதித்துள்ளார். ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Aug 02, 2024

பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரர் லக்சயா சென்

 பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன்பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்டு 16, போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதினர். முல் செட்டை 19-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டை விட்டார். முடிவில் சிந்து 19-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய்யிக் ஜோடியை சந்தித்தது. இதில் சாத்விக்- சிராக் ஜோடி 21-13, 14-21, 16-21, என தோல்வியடைந்து வெளியேறியது. சூடபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவண்டு 16, போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 0-4, என சீனாவின் யிங்ஷாவிடம் தோல்வியடைந்தார்.இதில் லக்சயா சென் 21-12, 21-6, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரரானார்.ஆண்களுக்கான குத்துச்சண்டை 71 கிலோ பிரிவு ரவண்டு 16, போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ்.3-2 என ஈகுவடாரின் ஜோஸ் டெனோரியோவை வீழ்த்தினார். பெண்களுக்கான நீச்சல் 1500 மீட்டர், பிரிஸ்டைல், பிரிவு பைனலில் இலக்கை 15 நிமிடம், 30.02 வினாடியில் கடந்த அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Aug 01, 2024

ஒலிம்பிக் பாட்மின்டன்

 ஆண்கள் ஒற்றையர் எல் பிரிவு 2வது போட்டியில், உலகின் நம்பர் 22 இந்தியாவின் லக்சயா சென் ,  உலகின் நம்பர் 4 இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி 26 மோதினார். பாராமாக ஆடிய லக்சயா சென் 21-18, 21-12 என வெற்றி பெற்றார். முதல் போட்டியில் பெல்ஜியம் வீரரை வீழ்த்திய லக்சயா சென், எல் பிரிவினல் இருந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நழைந்தார்.  ஒலிம்பிக் பாட்மின்டன்  பெண்கள் ஒற்றையர் 'எம்' பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் சிந்து, எஸ் தோனியாவின் கிறிஸ்டின் குபா மோதினர். முதல் செட்டை 21-5 எனக் கைப் பற்றிய சிந்து, இரண்டா வது செட்டை 21-10 என வென்றார். 2 புள்ளிகளுடன் எம் பிரிவில் முதலிடம் பிடித்து, ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் ரவுண்டு 16 போட்டியில் சிந்து சீனாவின் ஹிபிங்ஜியாவோ மோதுகின்றனர்.பெண்கள் அணிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் ஆர்டிஎஸ்டிக் ஆல் அரவுண்டு பிரிவு பைனலில் சிமோன் பைல்ஸ், ஜேட் கேரி, ஜோர்டான் சிலிஸ், சுனிசாலி, ஹெஸ்லி ரிவேரா அடங்கிய அமெரிக்க அணி முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.

Aug 01, 2024

ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி

ஒலிம்பிக்கில் தற்போது தனிநபர் வில்வித்தை போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான ரவுண்டு 32 போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி எஸ்.தோனியாவின் ரீனா பர்னத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இராண்டாவது சுற்றில் ரவுண்டு 16 தீபிகா குமாரி நெதர்லாந்தின் குயிண்டி ராபெனை சந்தித்தார். முதல் செட்டை 2-0 (29-25) 67601 கைப்பற்றிய இவர் அடுத்த செட்டை 27-29 என இழக்க, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. பின் சுதாரித்துக் கொண்ட இவர், 3, 4-வது செட்டை 25-17, 28-23 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ரவண்டு 16 முன்னேறினார். இதில் ஜெர்மனியின் மிட்செல்லியை ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திக்க உள்ளார்.ஆண்களுக்கான முதல் சுற்று ரவுண்டு 32 போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், பிரிட்டனின் டாம் ஹாலை எதிர்கொண்டார். இதில் தருணதீப் ராய் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.துப்பாக்கி சுடுதல் போட்டி, சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் நடக்கிறது. ஆண்களுக்கான ரைபிள் 3  பொசிசன்ஸ் பிரிவு, தகுதிச்சுற்று போட்டி நடந்தன. இந்தியா சார்பில் ஸ்வப்னில் குசாலே, ஐஸ்வரி பிரதாப்சிங் களமிறங்கினர். மூன்று நிலைகளில் போட்டி நடந்தன. ஸ்வப்னில் மொத்தம் 590 புள்ளி எடுத்து 7வது இடம் பிடித்தார். டாப் 3 இடம் பிடித்தால் மட்டுமே பைனலுக்கு செல்லலாம். என்ற நிலையில் ஸ்வப்னில் பைனலுக்குள் நுழைந்தார். ஐஸ்வரி பிரதாப் 589 புள்ளி எடுத்து 11  வது இடம் பிடித்து  வெளியேறினார் பெண்களுக்கான துப்பாக்கி சூடுதல் டிராப் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் ராஜேஸ்வரி, எஸ்ரோயாசி பங்கற்ேறனர். நேற்று இரண்டாவது நாள் தகுதிச்சுற்று நடந்தது இருவரும் மீண்டும் ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதையடுத்து ராஜேஸ்வரி 113 புள்ளி 22-வது ஸ்ரேயாசி 113, 23வது இடத்துக்கு தள்ளப்பட்டு பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினர்.பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லவ்லினா, நார்வேயின் சன்னிவா ஹாப்ஸ்டாட் மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் 69கிலோ கைப்பற்றிய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்ககு நுழைந்தார்.

Jul 31, 2024

ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேற்றம்  ஸ்மிருதி மந்தனா NO - 4

ஐ.சிசி. டி-20  பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) துபாயில் வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதிமந்தனா 743 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து நம்பர் 4 இடத்துக்கு முன்னேறினார். துணை கேப்டனான இவர் சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை பைனலில் 60 ரன் விளாசினார்.பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர், 722 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். வேகத்தில் மிரட்டிய இவர், ஆசிய கோப்பையில் 7 விக்கெட் சாய்த்தார். தீப்தி சர்மா 755 புள்ளிகள் 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 24 25

AD's



More News