சர்வதேச பாட்மின்டன் தொடர் போலந்தில் பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் உன்னதி ஹூடா 18, பங்கேற்றார். இத்தொ டரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற உன்னதி, அரை யிறுதியில், 'நம்பர்-4' வீராங்கனை, துருக்கியின் பேராக்கை 21-19, 21-16 என பைனலுக்கு முன்னேறினார்.இதில் உன்னதி, இத் தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை, உக்ரைனின் போலினா புருரோவாவை எதிர்கொண்டார். இத் தொடரில் முதன்முறையாக முதல் செட்டை இழந்தார். அடுத்த இரு செட்களையும் 21-15, 21-8 என கைப்பற்றினார். முடிவில் உன்னதி, 10-21, 21-15, 21-8 என வென்று சாம்பியன் ஆனார்.
'டி.டி.பி. போகல் 2026' ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி ஜெர்மனியில் சீனா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் களமிறங்கினர். இந்தியாவின் ஹர்ஸ்சித் தாமோதரன், நிஷாத் மிலிந்த் நர வானே ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில்பங்கேற்றனர் வால்ட் 1, 2பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஸ்சித், 13.525 புள்ளிகள் எடுத்து நான்காவது இடம் பிடித்தார்.பைனலில்வால்ட் 1 பிரிவில்ஹர்ஸ்சித்,13.933 புள்ளிஎடுத்தார்.வால்ட் 2பிரிவில் 13.400 புள்ளிபெற்றார். ஹர்ஸ்சித்மொத்தமாக 13.666 புள்ளிஎடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் ஸ்பெயினில். ஆண்கள் ஒற்றையரில் பிரமோத், சுகந்த், பெண்கள் ஒற்றையரில் மணிஷா, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நிதேஷ், ருதிக் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத், மணிஷா ஜோடி என இந்திய நட்சத்திரங்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றனர்.நிதேஷ், ருதிக் ஆண்கள் ஒற்றையரில் பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தன. இந்தியாவின் துளசிமதி பெண்கள் ஒற்றையரில் வெள்ளி வசப்படுத்தினார். பிரமோத் /சுகந்த் ஜோடி, ஆண்கள் இரட்டையரில்,கலப்பு இரட்டையரில் ஷிவம், நீரஜ் ஜோடி வெள்ளிப்பதக்கங்கள் பெற்றனர். இந்தியாவின் நீரஜ், ஜகதீஷ், ஷிவம், துள சிமதி/நிதேஷ் ஜோடி வெண்கலம் கைப்பற்றினர்.மொத்தமாக இத்தொடரில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றனர்.
உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 21வது சீசன் போலந்தில், ஆண்களுக்கு 'போல் வால்ட்' கான போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ். அதிக பட்சமாக 6.25 மீ., உயரம் தாவிமுதலிடம் பிடித்தார். உலக உள்ளரங்கு தடகளத்தில் டுப்ளான்டிஸ். தொடர்ச்சியாக 4வது தங்கத்தை (2022, 2024, 2025, 2026) தட்டிச் சென்றார்.
ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று, வெலிங்டனில் 4வது போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 164/5 ரன் எடுத்தது, நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல்-அவுட் டாகி தோல்வியடைந்தது. தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது ஆட்ட நாயகன் விருதை எஸ்தர்ஹியுசன் வென்றார்.
12வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் இர்பான் யத்வாட் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 88வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ்ஜிங்கன் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. மற்றொரு லீக் போட்டி யில் இன்டர் காஷி. பெங்களூரு அணிகள் கோல்கட்டாவில் மோதின.2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் மும்பையில், பைனலில் பஞ்சாப்பின் திக்விஜய் கேடியன், பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆணையம் பிரிஜேஷ் தமானி மோதி, திக் விஜய் 7-1 (55-59, 88-17, 77-1, 83-73, 76-36, 92-0, 62-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட் டத்தை கைப்பற்றினார். திக்விஜய்க்கு, கோப்பையுடன், ரூ.3.5 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டாவது இடம் பிடித்த பிரிஜேஷிற்கு ரூ. 1.75 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில், பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ஹனா மோதாஸ் மோதினர். முதலிரண்டு செட்டை 11-5, 11-6 எனக் கைப்பற்றிய அனாஹத், 3வது செட்டை 9-11 என இழந்தார். 4வது செட்டை 11-6 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் 3-1 (11-5, 11-6, 9-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபே சிங் ஆண்களுக்கானபைனலில் மோதி, அபே சிங் 3-0 (11-9, 11-8, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
.மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர் இத்தாலியில் பெண்கள்ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் பவினா படேல் பங்கேற்றுகாலிறுதியில் 3-0 (11-8, 11-2, 11-6) என்ற நேர் செட்டில்தென் கொரியாவின் சங்யே மூனை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில்மற்றொரு தென் கொரிய வீராங்கனை யங் ஜங்கை சந்தித்து பவினா 3-1என (8-11, 11-8, 11-4, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் பவினா, துருக்கியின் ஐயர்ம் ஓலக்கை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை பவினா 11-2, 11-6 14-12 என வென்று, , 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர்மும்பையில். நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, மலேசியாவின் எய்னா அமா னியை சந்தித் தார். முடிவில் தான்வி, 3-1 என்ற செட்கணக்கில்வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஜோஷ்னா சின்னப்பா இந்தியாவின் சீனியர் வீராங்கனை, எகிப்தில் நாடியன் எல்ஹாம்மமியுடன் மோதி., ஜோஷ்னா 1-3 என்ற (8-11, 11-8, 6-11, 1-11)கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியாவின் வீர் சோட்ரானி ஆண்கள் பிரிவு காலிறுதியில் 3-0 என (11-9, 11-8, 11-2) மலேசியாவின் முகமது ஷராப்பை வென்றார்.