25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Jul 23, 2024

ஸ்குவாஷ் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிகள் தோற்றது.

அமெரிக்காவில் நடக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய ஆண்கள் அணி 1-2 என தென் கொரியாவிடம் வீழ்ந்தது. இந்திய பெண்கள் அணி 1-2 என மலேசியாவிடம் தோற்றது. ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தர வரிசையில் இந்திய வீரர் சுமித் நாகல் 80வது இடத்துக்கு பின்தங்கினார்.  அமெரிக்காவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-2' அந் தஸ்து பெற்ற ஸ்பெயினின் அலிசா லினானா, அர் ஜென்டினாவின் மெலானே ஜோடியை சந்தித்தது. சஹாஜா ஜோடி 2-6, 0-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது. 

Jul 22, 2024

லியாண்டர் பயஸ், அமிர்தராஜ் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் தேர்வு

 இந்திய ஜாம்பவான்களான விஜய் அமிர்தராஜ். லியாண்டர் பயஸ்,அமெரிக்காவின் ரிச்சர்டு ஈவன்ஸ் சர்வதேச டென்னிஸ் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில்  சேர்க்கப்பட்டனர்.   உலக ஜூனியர் ஸ்குவாஷ் இந்திய அணி வெற்றி குவைத், பிரேசிலை வீழ்த்திய இந்தியா,அமெரிக்காவில் நடக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 2-0 என கனடாவை வென்றது. 

Jul 20, 2024

டி- 20 அணி கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று டி -20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி-20 போட்டி வரும் ஜீலை 27, 28 30 ல் பல்லேகெலே, ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 2, 4, 7ல் கொழும்புவில் நடக்க உள்ளன.ரோகித் சர்மா ஒய்வு பெற்ற நிலையில் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டி-20 அணிக்கு தலைமை ஏற்பார். என நம்பப்பட்டது. ஆனால் புதிய திருப்பமாக சூர்யகுமார். 33, கேப்டனாக நியமிக்கப்பட்டார். டி-20 அணி கேப்டன் சூர்யகுமார், சஞ்சு சாம்சனுக்கு ஒரு நாள் அணியில் இடமில்லை. ஹர்திக் பாண்ட்யா தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் தொடரில் விலகினார். ரியான் பராக் 22, முதன் முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், சகால், எவ்வித அணியிலும் சேர்க்கப்படவில்லை.

Jul 19, 2024

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 26ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா முதன்முறையாக மைதானத்துக்கு வெளியே, சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்கிறது. தொடக்க விழாவை முன்னிட்டு சென் நதியின் கரையோரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை, போலிசார் தங்கள் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த பகுதிக்குள் முன்கூட்டியே அனுமதி பெற்று இருப்பவர்கள் தவிர, வேறு யாரும் நுழைய முடியாது. இந்த கட்டுப்பாடுகள் தொடக்க விழா முடிந்த பிறகு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 40 நாடுகளை சேர்ந்த ,1750 பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்இந்த நிலையில் ஒலிம்பிக் பாதுகாப்பு பணிக்காக இந்தியாவில் இருந்து 10 மோப்ப நாய்கள் பாரீஸ் சென்றுள்ளன. இந்த மோப்ப நாய்களை கையாள பயிற்சி பெற்ற, மத்திய அரசின் பல்வேறு ஆயுதப்படையை சேர்ந்த 17 பேர் சென்று இருக்கிறார்கள். இந்தியா பிரான்ஸ் நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.இந்த மோப்ப நாய்கள் சந்தேகத்திற்குரிய நபர்களின் இருப்பிடம், குண்டுகளை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் திறன் படைத்தவை. ஸ்டேடியம் பகுதியில் இவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். இந்தியாவில் இருந்து மோப்ப நாய்கள் வெளிநாட்டில் பாதுகாப்பு பணிக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், பொது ஒழுங்கை நிலைநாட்டவும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

Jul 18, 2024

117 வீரர், வீராங்கனைகள் இந்திய அணியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில்  இடம் பிடித்துள்ளனர் இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது

.இந்திய ஒலிம்பிக் அணி 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-த் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத் தப்படுகிறது.பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அணியினருடன் பயிற்சியாளர் கள், உதவிஊழியர்கள். அதிகாரிகள் உள்பட மொத்தம் 140 பேர் செல்லவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டி விதிமுறைப்படி ஒலிம்பிக் கிராமத்தில் வீரர், வீராங்க னைகள் தவிர்த்து பயிற்சியாளர், மருத்துவ அதிகாரிகள், உடல் தகுதி நிபுணர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் உள்பட 7 பேர் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்பட்டும் எது விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி காசு கூடுதலாக செல்லும் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் உள்ளிட்டோர் ,ஒலிம்பிக் கிராமத்துக்கு வெளியில் உள்ள  ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை  மத்திய அரசு செய்துள்ளது.

Jul 15, 2024

ஐந்தாவது T20 விளையாட்டு போட்டி ஜீம்பாவேயில் நடைபெற்றது 4-1 என்ற வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

T20 விளையாட்டு போட்டிக்காக ஜீம்பாவே சென்ற இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கோப்பை வென்ற உற்சாத்தில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், முகேஷ் உள்ளிட்ட இந்திய அணியினர். 4-வது வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷிவம் துபே, தொடர் நாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டனர்

Jul 15, 2024

செஸ் சூப்பர் ஸ்டார் இந்திய இளம் வீரர் குகேஷ்

உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை இந்திய இளம் வீரர் குகேஷ் பெற்றுள்ளார்.16 வயது சூப்பர் ஸ்டாருக்கு ஹாட்ஸ் ஆஃப் பிரஞ்யானந்தா மட்டுமில்லை. இவரும் செஸ் சூப்பர் ஸ்டார் தான். 

Jul 15, 2024

இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ்

இந்தியாவின் நிஷாந்த் தேவ்  "ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளன. பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு." என்றார்.'அமெரிக்காவில் நடக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 3வது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் 11-7, 12-10, 11-6 என அமெரிக்காவின் சமந்தா ஜாப்பை வீழ்த்தினார்.  

Jul 13, 2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள்

பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, பிரனாய் சுலப பிரிவில் இடம் பிடித்துள்ளனர். மற்றொரு இந்திய வீரர் லக்சயா சென், கடின பிரிவில் இடம் பெற்றுள்ளார். தடகள வீரர் அவினாஷ் சபிள் (3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ் ஓட்டம்) கூறுகையில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க மட்டும் விரும்பவில்லை. இந்தியாவுக்கு பதக்கம் வெல்வதே இலக்கு" என்றார்.

Jul 12, 2024

பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு ஆலோசகராக பிரகாஷ் படுகோன் நியமிக்கப்பட்டார்

பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு ஆலோசகராக பிரகாஷ் படுகோன்நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இவர், சிந்துவின் ஆலோசகராக உள்ளார். இந்திய ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் , ''நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்று நினைக்கவில்லை. பாரிஸ் போட்டி எனது கடைசி ஒலிம்பிக்காக இருக்கும்," என்றார்

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 25 26

AD's



More News