உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில், நடக்கிறது.நேற்று நடந்த 5வது சுற்றுக்கான முதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். அர்ஜுன், 41வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மெக்சிகோவின் ஜோஸ்மார்டினெஸ் அல்காண்டாரா மோதினர். ஹரிகிருஷ்ணா, 41வதுநகர்த்தலில் 'டிரா' செய்தார்.இன்று, 5வது சுற்றுக்கான 2வது போட்டியில் வெற்றி பெறும் வீரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். ஒரு வேளை போட்டி மீண்டும் 'டிரா' ஆனால், 'டை பிரேக்கர்' சுற்று நடத்தப்படும்.
உலகின் 'டாப்-8' வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியில் ,'ஜிம்மி கானர்ஸ்' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-1 என இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை வென்றார். அல்காரஸ்வெற்றியை பதிவு செய்து, ஆண்டு இறுதியில் வெளியாகும் தரவரிசை பட்டியலில் 'நம்பர்-1' இடத்தை உறுதி செய்தார்.இவர், 2வது முறையாக (2022, 2025) முதலிடத்தை கைப்பற்றினார். இதற்கான கோப்பை வழங்கப்பட்டது.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ,வங்கதேசத்தின் தாகாவில் தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு போட்டி நடந்தன. இதன் அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி, 149-143 என தென் கொரியாவின் சி யு செனை வீழ்த்தினார்.பைனலில் ஜோதி, சக வீராங்கனை பிரித்திகா மோதினர். இதில் ஜோதி 147-145 என வென்று, தங்கம் கைப்பற்றினார்.கடந்த 2015, 2021, தற்போது 2025 என ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்ற முதல் வீராங்கனை என பெருமை பெற்றார் ஜோதி.இந்தியாவின் தீப்ஷிஹா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி, பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 236-234 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது.காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை எதிர் கொண்டது.இதில் இந்தியா 153-151 என வென்று, தங்கம் கைப்பற்றியது. பிரிவில் இந்தியாவின் அபி ஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி, ஆண்களுக்கானகாம்பவுண்டு அணிகள் பிரிவில் பைனலில் 229-230 என கஜகஸ்தானிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன்கோவாவில், மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, 3 வீரர்கள் நான்காவது சுற்றில் பங்கேற்றனர். நேற்று டை பிரேக்கர்' போட்டி நடந்தன. முதல் போட்டியில் அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோ மோதி ,அர்ஜுன் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது போட்டியின் முடிவில் 3.0-1.0 என வெற்றி பெற்று, ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மற்றொரு போட்டியில் சுவீடனின் கிரான் டெலியஸ் இடையிலானமுதல் 'டை பிரேக்கர்' போட்டி 'டிரா ஆனது. அடுத்த போட்டியில் விளையாடிய ஹரிகிருஷ்ணா, 34வது நகர்த்தலில் வெற்றி பெற்று.முடிவில் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று, ஐந்தாவதுசுற்றுக்குள் நுழைந்தார்.
இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை'T-20' தொடர் ஆசிய criket கவுன்சில் சார்பில் 2013 - முதல் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று - கத்தாரில் தோஹாவில் ,போட்டி கள், 'தி வெஸ்ட் என்டு பார்க்' மைதானத்தில் துவங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ் தான் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன.போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 21) முன்னேறும். பைனல் நவ. 23 இல் நடக்கும். சாதிக்குமா இளம் இந்தியா!.......
உலக ஸ்னூக்கர் கத்தார் தலைநகர் தோஹாவில் (15-'ரெட்') பைனலில், இந்தியாவின் அனுபமா 23, ஹாங்காங்கின் இங் ஆன் யீ மோதினர். சென்னை வீராங்கனை அனுபமா 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
நவ.15-26ல் காது கேளா தோருக்கான ஒலிம்பிக்போட்டி ,ஜப்பான்தலைநகர் டோக்கியோவில், ('டெப்லிம் பிக்ஸ்') ,இந்தியா சார்பில் முதன் முறையாக 111 பேர், தடகளம், பாட்மின்டன், கோல்ப், ஜூடோ உள் ளிட்ட 11 வகையானபோட்டிகளில் பங்கேற்கின்றனர்.துவக்க விழா அணி வகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை பாட்மின்டன் வீராங்கனை, தமிழகத்தின் ஜெர்லின் அனிகா 21, ஏந்தி வரவுள்ளார். மதுரை சேர்ந்த இவர், 3வது முறை யாக (2017, 2022, 2025) ஒலிம்பிக்கில் களமிறங்க உள்ளார்.கடந்த 2022ல் பிரேசிலில் நடந்த போட்டியில் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவில் தலா ஒரு தங்கம் கைப்பற்றினார். இதனையடுத்து 2022ல் நாட்டின் உயரிய அர்ஜுனா விருதை வென்றார்.ஜெர்லின் கூறுகையில், "இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்ல இருப்பதுமிகப் பெரிய கவுரவம். இது, எனது கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன்," என்றார். இந்தியா சார்பில் 2022 இல் பிரேசிலில் நடந்த போட்டியில் 65 பேர் பங்கேற்றனர். இதில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கம்கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 9வது இடம் பிடித்தது.
பார்வை குறைபாடு உள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் இந்தியா, இலங்கையில், இந்தியா, ஆஸ்தி ரேலியா, இலங்கை, நேபாளம் 7 உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 209 ரன் குவித்தது.ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 57 ரன் னுக்கு தோல்வி யடைந்தது. ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் தீபிகா தட்டிச் சென்றார்.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்ஜப்பானில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கோகி வடனாபே மோதினர். மொத்தம் 39 நிமிடம் போட்டியில் லக்சயா சென் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் பிரனாய் மற்றொரு போட்டியில் 16-21, 21-13, 23-21 என மலேசியாவின் ஜூன் ஹாவோ லியோங்கை வீழ்த்தினார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் 20-22, 10-21 என, மலேசியாவின் ஜிங் ஹாங் கோக்கிடம் தோல்வியடைந்தார்.
போன்டி ஓபன் சாலஞ்சர் ஸ்கு வாஷ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ,பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ராதிகா சீலன் 3-0 (11–7, 11-3, 11-3) என்ற நேர் செட் கணக்கில், தாய்லாந்தின் அனன்டனாவை வீழ்த்தினார்.சீன ஓபன் ஸ்குவாஷ் தொடர் ஷாங்காய்நகரில்,பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் 1-3 என்ற செட் கணக்கில் உலகின் 'நம்பர்-15' வீராங்கனை, எகிப்தின் சனா இப்ராஹிமிடம் தோல்வியடைந்தார்.