குஜராத், டெல்லி அணி நேற்றிரவு டெல்லியில் நடந்த போட்டியில் மோதியது. டாஸ்' ஜெயித்த டெல்லி கேப் டன் அக்ஷர் பட்டேல் முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்தார். 20 ஓவரில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது, டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் குஜராத்தின் முதல் வெற்றியாகும்.
தாய்லாந்தில் 12-வது பெண்கள் ஆசியகோப்பை உட்பட் கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி ,'சி' பிரிவில் ,இந்திய அணி. தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வென்றது. இந்திய அணியில் சிபானி தேவி (32-வது, 87-வது நிமிடம்), பூமிகா தேவி (26-வது நிமிடம்) கோலடித்தனர். சீன தைபே தரப்பில் மாற்று ஆட்டக்காரர் காவ் ஹசின்கடைசி நிமிடத்தில் கோல்திருப்பி,இந்திய அணி தனது பிரிவில் 3-வது இடம் பெற்றது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் இந்தியா முதல் வெற்றி. இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 8-வது சுற்று ,செஸ் கேண்டிடேட்ஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. பெண்கள்பிரிவில் ஆர். வைஷாலி (இந்தியா)-பிபிசரா அசாபயேவா (கஜகஸ்தான்) இடையிலானஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், உக்ரைனின் அன்னா முசிசுக்கை தோற்கடித்தார். 8-வது சுற்றுமுடிவில் வைஷாலி, திவ்யா, முசிசுக் உள்பட 5 வீராங்கனைகள் தலா 4-1/2புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசியகுத்துச்சண்டை பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 4-1 - என்ற கணக்கில் தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்தவிஸ்வநாத் சுரேஷ் ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் ,5-0 என்ற கணக்கில் ஹூதைபா எஷிசை (ஜோர் டான்) வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். . இந்தியாவை சேர்ந்த 6 வீராங்கனைகள், 2 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஸ்பெயினின் கிரனடாவில் நேற்று முன்தினம் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் முதலில் தகுதி சுற்றில் பங்கேற்ற ,42 ஜோடிகளில் முதல் 4 இடத்தை பிடித்தவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள்தகுதி சுற்றில் 2-வது இடத்தை பெற்ற பலாக்-முகேஷ் நெலவள்ளி ஜோடி இறுதி ஆட்டத்தில் 487.7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்சும், மும்பைஇந்தியன்சும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு மோதின.பலத்த மழையால் ஆட்டம் தொடங்குவதில் 2- 3/4 மணி நேரம் தாமதத்தால் ,11 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன்ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.11 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட் டுக்கு 150 ரன்கள் குவித்தது. மும்பை அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீனாவின் நிங்போ நகரில் ,43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் லக்ஷயா சென், பிரனாய், ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, உன்னதி ஹூடா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் களம்காணுகிறார்கள். இரட்டையர் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை ,காயம் காரணமாக விலகியுள்ளது.
ஆண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காத உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாரோவ் 6 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 டிரா) முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் பேபியானோ கருணா 4½ புள் ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 7சுற்று முடிந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 3% புள்ளிகளுடன் (ஒருவெற்றி, 5 டிரா, ஒரு தோல்வி) 4-வது இடத்தில் இருக்கிறார். இனி எஞ்சிய 7 சுற்றிலும் சிறந்த முடிவுகளை பெற்றால் மட்டுமே பிரக்ஞானந்தாவால் பட்டம் வெல்லும் வாய்ப்பில் நீடிக்க முடியும். பெண்கள் பிரிவில் 8 வீராங்கனைகள் இடையிலான, தமிழகத்தின் ஆர். வைஷாலி கடைசி இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடத்தில் ,பட்டம் வெல்லும்வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் தென்கொரியாவின் ஏஜி இம்மை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரீத்தி இறுதி சுற்றில் 3 முறை உலக சாம்பியனான ஹூவாங்சியோளவா வென்னை (சீன தைபே) எதிர் கொள்கிறார்.60 கிலோஎடைப்பிரிவின்அரைஇறுதியில்இந்தியவீராங்கனைபிரியா 5-0 என்றகணக்கில்மங்கோலியாவின் நமூன்மோன்கோரை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த பிரியா இறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் உன் கியோங் வோனை சந்திக்கிறார். இதேபோல் 70 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் ஒய்ஷா தோய் ராவை (உஸ்பெகிஸ்தான்) வென்று இறுதிப்போட்டியை எட்டினார்.
பில்லி ஜீன் கோப்பை (பெட் கோப்பை) டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப் 1 போட்டி பெண்கள் அணிகளுக்கான டெல்லியில் இன்றுமுதல் 11ந்தேதிவரைநடக்கிறது.இதில் இந்தியா,இந்தோனேசியா, தென்கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை 'ரவுண்ட்' ராபின் லீக்' முறையில் மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.