25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Aug 01, 2024

ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி

ஒலிம்பிக்கில் தற்போது தனிநபர் வில்வித்தை போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான ரவுண்டு 32 போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி எஸ்.தோனியாவின் ரீனா பர்னத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இராண்டாவது சுற்றில் ரவுண்டு 16 தீபிகா குமாரி நெதர்லாந்தின் குயிண்டி ராபெனை சந்தித்தார். முதல் செட்டை 2-0 (29-25) 67601 கைப்பற்றிய இவர் அடுத்த செட்டை 27-29 என இழக்க, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. பின் சுதாரித்துக் கொண்ட இவர், 3, 4-வது செட்டை 25-17, 28-23 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ரவண்டு 16 முன்னேறினார். இதில் ஜெர்மனியின் மிட்செல்லியை ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திக்க உள்ளார்.ஆண்களுக்கான முதல் சுற்று ரவுண்டு 32 போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், பிரிட்டனின் டாம் ஹாலை எதிர்கொண்டார். இதில் தருணதீப் ராய் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.துப்பாக்கி சுடுதல் போட்டி, சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் நடக்கிறது. ஆண்களுக்கான ரைபிள் 3  பொசிசன்ஸ் பிரிவு, தகுதிச்சுற்று போட்டி நடந்தன. இந்தியா சார்பில் ஸ்வப்னில் குசாலே, ஐஸ்வரி பிரதாப்சிங் களமிறங்கினர். மூன்று நிலைகளில் போட்டி நடந்தன. ஸ்வப்னில் மொத்தம் 590 புள்ளி எடுத்து 7வது இடம் பிடித்தார். டாப் 3 இடம் பிடித்தால் மட்டுமே பைனலுக்கு செல்லலாம். என்ற நிலையில் ஸ்வப்னில் பைனலுக்குள் நுழைந்தார். ஐஸ்வரி பிரதாப் 589 புள்ளி எடுத்து 11  வது இடம் பிடித்து  வெளியேறினார் பெண்களுக்கான துப்பாக்கி சூடுதல் டிராப் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் ராஜேஸ்வரி, எஸ்ரோயாசி பங்கற்ேறனர். நேற்று இரண்டாவது நாள் தகுதிச்சுற்று நடந்தது இருவரும் மீண்டும் ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதையடுத்து ராஜேஸ்வரி 113 புள்ளி 22-வது ஸ்ரேயாசி 113, 23வது இடத்துக்கு தள்ளப்பட்டு பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினர்.பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லவ்லினா, நார்வேயின் சன்னிவா ஹாப்ஸ்டாட் மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் 69கிலோ கைப்பற்றிய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்ககு நுழைந்தார்.

Jul 31, 2024

ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேற்றம்  ஸ்மிருதி மந்தனா NO - 4

ஐ.சிசி. டி-20  பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) துபாயில் வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதிமந்தனா 743 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து நம்பர் 4 இடத்துக்கு முன்னேறினார். துணை கேப்டனான இவர் சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை பைனலில் 60 ரன் விளாசினார்.பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர், 722 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். வேகத்தில் மிரட்டிய இவர், ஆசிய கோப்பையில் 7 விக்கெட் சாய்த்தார். தீப்தி சர்மா 755 புள்ளிகள் 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Jul 31, 2024

சுதந்திர இந்தியாவுக்குப் பின், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் மனு பாகர்.

.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில்  மனு பாகர் ,சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.பாரிசில் இருந்து 273 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் துப்பாக்கி சூடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர் ,சரப்ஜோத் சிங் இடம் பெற்ற அணி களமிறங்கியது.பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை பெண்களுக்கான தனிநபர் முதல் சுற்றில் ரவுண்டு 64 இந்தியாவின் பஜன் கவர் இந்தோனேஷியாவின் சைபா நுராபிபா கமால் மோதினர். இதில் பஜன் கவர் 7-3 (27-27, 27-29, 29-27, 27-25, 28-25) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் ரவுண்டு 32 பஜன் கவர் போலந்தின் வயோலெட்டா மைசோர் மோதினர். இதில் மீண்டும் அசத்திய பஜன் கவுர் 6-0 (28-23, 29-26, 28-22) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் (ரவுண்டு16) நுழைந்தார்..முதல் நாள் நடந்த தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட மனு பாகர், சரப்ஜோத் ஜோடி 580 புள்ளி எடுத்து 3வது இடம் பிடித்தது. 1 புள்ளி வித்தியாசத்தில் 2வது இடத்தை இழந்து, தங்கப்பதக்கத்துக்கு போட்டியிடும் வாய்ப்பை நழுவ விட்டது. நேற்று நடந்த வெண்கலப்  பதக்கத்திற்கான போட்டியில் மனு பாகர், சரப்ஜோத் ஜோடி 4வது இடம் பெற்ற தென் கொரியாவின் ஒயேஜின், வான்ஹோ ஜோடியை எதிர்கொண்டது.ஒவ்வொரு சுற்றுக்கும் 2 புள்ளி தரப்பட்டன. 16 புள்ளி எடுத்தால் பதக்கம் என்ற நிலையில், முதல் சுற்றில் தென் கொரியா 2-0 என முந்தியது. அடுத்து சிறப்பாக செயல்பட்ட மனுபாகர்-சரப்ஜோத் ஜோடி, தொடர்ந்து 4 சுற்றில் அசத்த, 8-2 என முந்தியது. 10 சுற்று முடிவில் மன பாகர் சரப்ஜோத் ஜோடி 14-6 என வெற்றியை நெருங்கியது.இந்நிலையில் தென் கொரிய ஜோடி அடுத்தடுத்து இருசுற்றை வசப்படுத்த 10-14 என இந்தியாவை நெருங்கியது. பின் சுதாரித்துக் கொண்ட மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி 13- வது சுற்றை கைப்பற்றியது. முடிவில் 16-10 என வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் தட்டிச் சென்றது. ஒலிம்பிக் துப்பாக்கிசூடுதலில் அணிகளுக்கான பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் .ஏற்கனவே தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாகருக்கு, இது இரண்டாவது பதக்கமாக அமைந்தது. இதையடுத்து சுதந்திர இந்தியாவுக்குப் பின், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் .

Jul 30, 2024

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியர்கள்

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் எல் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், பெல்ஜியத்தின் ஜீலியன் கராக்கி மோதினர். இதில் லக்சயா சென் 21-19, 21-14 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் நான்காவது இடம் பிடித்த, மூன்றாவது இந்தியர் ஆனார். அர்ஜீன். நான்காவது இடம் பிடித்து பதக்க வாயப்பை இழந்தார். ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவு தகுதிச் சுற்ற நேற்று நடந்தது. தமிழகத்தின் பிரித்விராஜ் வயது 37 பங்கேற்றார். 3-வது சுற்றில் 21 புள்ளி மட்டும் எடுத்தாரர் முதல் நாள் முடிவில் 68 புள்ளி மட்டும் எடுக்க, கடைசி இடத்துக்கு ( 30 வது  இடம் ) தள்ளப்பட்டார்.ஒலிம்பிக்கில் நேற்று ஆண்கள் அணிகளுக்கான வில்வித்தை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் இடம் பெற்ற அணி பங்கேற்றது. இந்தியா 2-4 நான்காவது முதல் 5 ஆரோவில் சிறப்பாக செயல்பட்டது. கடைசி வாய்ப்பில் திராஜ் 7 புள்ளி மட்டும் எடுக்க, 54-58 என செட்டை இழந்தது. முடிவில் இந்திய அணி 2-6 என தோற்று காலிறுதியுடன் வெளியேறியது.பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவினல் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, பிரான்சின் மோன்பைல்ஸ், ரோஜர் வாசலின் ஜோடியை 5-7, 2-6, என தோல்வியடைந்து. இதைனையடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக போபண்ணா வயது 44, அறிவித்தார்.

Jul 29, 2024

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெண்கல  பதக்கம் வென்ற மனு பாகர்.

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்த மகிழ்ச்சியில் மனு பாகர். நேற்று 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் வெண்கலம் வென்றார். , 'இலக்கில் மட்டும் கவனம் செலுத்து,' .என பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனிடம்  கூறியது  மட்டுமே எனது மனதில் இருந்தது. இதனால் தான் சாதிக்க முடிந்தது. பதக்கம் வென்ற மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை.எனது வெற்றியை தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.” மகிழ்ச்சியில் மனு பாகர்.12 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 12 ஆண்டுக்குப் பின் பதக்கம் வென்றது. முன்னதாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். மகிழ்ச்சியை மூவர்ணக் கொடியுடன்  வெற்றியை வெளிப்படுத்தினார்.

Jul 29, 2024

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியா 5வது பதக்கம் வென்ற மனு பாகரை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மோடி

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியா நேற்று ஐந்தாவது பதக்கம்.2008ல் அபினவ் பிந்த்ரா (தங்கம், பீஜிங்), 2004 ல் ராஜ்யவர்தன் ரத்தோர் (வெள்ளி, ஏதென்ஸ்), 2012ல் விஜய் குமார் (வெள்ளி), ககன் நரங் (வெண்கலம், லண்டன்) பதக்கம் வென்றிருந்தனர்.2024 ல்  வெண்கலம் மனு பாகர் பாரிஸ் ஒலிம்பிக் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெண் கலம் வென்ற மனு பாகருக்கு வாழ்த்துகள். இந்த பதக்கம் கூடுதல் ஸ்பெஷலானது. ஏனெனில், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்துள்ளார். இது வியக்கத்தக்கது, என பிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.  மனு பாகரை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மோடிபீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கிசுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா கூறுகையில்,"உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, கடின உழைப்பு, ஆர்வம் உள்ளிட்டவை உண்மையில் பலன் தந்துள்ளது. இந்த வெண்கலம் விடாமுயற்சிக்கு கிடைத்தது.தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்," என்றார்.

Jul 27, 2024

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜீலை 27-ம் தேதி இன்று கோலாகலமாக துவங்கியது

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இருப்பினும் 78 பேர் மட்டுமே துவக்க விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். சிலருக்கு அடுத்த நாள் போட்டி இருந்ததால், அணிவகுப்பை தவிர்த்தனர்.லவ்லினா (குத்துச்சண்டை) மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) தீபிகா குமாரி (வில்வித்தை) ரோகன் போபண்ணா (டென்னிஸ்) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.துப்பாக்கி சுடுதலில் நடக்கவுள்ள 15 போட்டியிலும் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். மனுபாகர், ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர், அஞ்சும் மவுத்கில், இளவேனில் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் பொறுத்தவரையில் திறமை மட்டுமல்ல. வெற்றிக்க அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும் 22 வயதான மனுபாகர், உலக அளவில் பல்வேறு தொடரில் பதக்கங்கள் குவித்துள்ளார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இவரது துப்பாக்கி சரியாக வேலை செய்யாமல் போக, கடைசி வரை மீண்டு வரவே முடியவில்லை.ஒலிம்பிக் டென்னிசில் 1996ல் (அட்லாண்டா) லியாண்டர் பயஸ், ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். இது தான் இந்தியா வென்ற ஒரே பதக்கம். இந்தியா முதல் பதக்கம் வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து சி பிரிவு லீக் போட்டியில், ஸ்பெயின், ஐப்பான் மோதின. இதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணிக்காக பொன்மதி அய்டனா (22 வது நிமிடம்) மரியோனா (74வது) தலா ஒரு கோல் அடிக்க, ஐப்பான் சார்பில் புஜினோ (11வது) ஆறுதல் தந்தார். மற்றொரு போட்டியில் ஜெர்மனி, 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.ஆண்கள் ரக்பி காலிறுதியில் பிரான்ஸ், அர்ஜென்டினா மோதின. இதில் பிரான்ஸ் அணி 26-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் பிஜி அணி 19-15 என அயர்லாந்தை வீழ்த்தியது. 

Jul 26, 2024

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024

ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ,ஐந்து நிறத்தினால் ஆன ஒலிம்பிக் வளையங்கள் ,இது ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா, என உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிக்கும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 3வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.( 1900, 1924, ,2024. ),நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம் சற்று வித்தியாசமாக இம்முறை பாரிசின் சென் நதியில் துவக்க விழா நடக்க உள்ளது. ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கும் 100 படகுகளில் 6 கிலோ மீட்டர் தூரம், 205 நாடுகளை சேர்ந்த 10., 500 வீரர்கள், வீராங்கனைகள் செல்ல உள்ளனர். நதியின் இருபுறமும் அமர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் துவக்க விழாவை காண உள்ளனர். பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா பாட உள்ளனர். பின் நடக்கும் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை சிந்து, சரம் கமல் ஏந்தி வர உள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்காக பாரிசில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. துவக்கவிழா நடக்கும் சென்நதிகரையில் 45,000 போலீசார், பாரா ராணுவத்தினர், 10,000 சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் இந்தியா உட்பட 31 பல் வேறு நாடுகளில் இருந்து 1800 சிறப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண ஒரு கோடி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 25, 2024

பாரிஸ் ஒலிம்பிக் நாளை துவக்கவிழா

 பாரிஸ் ஒலிம்பிக், நாளை முறைப்படி கோலாகலமாகத் துவங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு (ஜூலை 26) துவக்க விழா நடக்கும்.6 கி.மீ., நீளமுள்ள செய்ன் நதியில் ஒலிம்பிக் நட்சத்திரங்கள் படகில் அழைத்து வரப்படுவர். மைதானத்தை அடைந்த பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.  இன்று துவங்க  இருக்கும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டியில் தீபிகா குமாரி, அன்கிதா, பஜன் கவுர் பங்கேற்கின்றனர். ஆண்கள் பிரிவில் தருண்தீப் ராய், திராஜ், பிர வின் ஜாதவ் களமிறங்குகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில் ஒலிம்பிக் வில்வித்தையில் இது வரை யாரும் காலிறுதியை தாண்டியது இல்லை.இம்முறை இந்தியா சாதிக்கலாம்.  முதன் முதலில் பங்கேற்றாலும், இதுதான் கடைசி என்ற நினைப்புடன் வெற்றிக்கு போராட வேண்டும் என தருண் தீப்ராய் 40, கூறினார் ஒலிம்பிக்கில் பங்கேற்பது தான் அனைவரின் கனவாக இருக்கும். இதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். இது எனது நான்காவது ஒலிம்பிக் . இப்போது இல்லை என்றால், இனி எப்போதும் கிடையாது என்ற சூழ்நிலையில் உள்ளேன். எப்படியும் பதக்கம் வெல்ல வேண்டும்.  என தருண் தீப்ராய் கூறினார்.

Jul 24, 2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியரின் எதிர்பார்ப்பு

பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி வரும் 26-ல் துவங்குகிறது இதற்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் 11 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 29 பேர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் 16 பதக்கங்களை பெற போட்டியிட உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீது எதிர் பார்ப்பு அதிகம் உள்ளது.100 மீட்டர் தடை ஒட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் ஜோதி. இவரது சிறந்த செயல்பாடு 12.67 வினாடி ஆக உள்ளது. 12.50  வினாடிக்குள் ஒடி வர பயிற்சியாளர் ஹில்லியர் கைகொடுத்து  வருகிறார். ஜோதி, அரையிறுதிக்கு முன்னேறினால் சாதனைதான்.சமீபத்தில் நடந்த பாரிஸ் டைமண்டு போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஒட்டத்தில் அவினாஷ் சபில் தேசிய சாதனை படைத்தார் 8.10 வினாடிக்கும் குறைவாக பைனலுக்கு முன்னேறலாம்.பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ், 5000 மீட்டர் ஓட்டம் என இரு போட்டியில் பங்கேற்கிறார். பாருல் சவுத்ரி.ஒலிம்பிக்கில் ஹைலைட் போட்டி ,ரிலே ஒட்டம் .இந்திய ஆண், பெண்கள் அணிகள் களமிறங்குகின்றன. இப்போட்டியில் இந்தியா அணி “கருப்பு குதிரை”  என வர்ணிக்கப்படுகிறது. கடந்த உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆண்கள் அணி, கடும் சவால் தந்தது. இது இங்கும் தொடர்ந்தால் பைனலுக்கு செல்வது உறுதி. தமிழகத்தின் பிரவின் சித்ரவேல் டிரிபிள் ஐம்ப், தஜிந்தர்பால் சிங் குண்டு எறிதல், உள்ளிட்டோர் தங்களது முந்தைய சாதனைகளை தகர்த்து, செயல்பட  முயற்சிக்கலாம்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 25 26

AD's



More News