பெங்களூரு, சின்ன சாமி மைதானத்தில் இந்தியன்பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடரின் 19வது சீசன் இன்றுதுவங்குகிறது. மே 31ல் பைனல் நடக்கஉள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று முதல் லீக்போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.இம்முறை லீக் சுற்றில்ஐ.பி.எல்., தொடரில் 70 போட்டிகள் ,அடுத்து 'பிளே ஆப்' சுற்றில் 4 என மொத்தம் 65 நாளில், 74 போட்டிகள் நடக்க உள்ளன.சென்னையில் சேப்பாக்கம், மும்பை வான்கடே, கொல்கட்டா ஈடன் கார்டன் உட்பட 13 மைதானங்களில் போட்டிகள் நடக்கும்.ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா 1 முறை (4 போட்டி) மோதும். அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா இருமுறை மோதும் (10 போட்டி). ஒவ்வொரு அணியும் தலா 14 போட் டியில் பங்கேற்கும்.புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் தகுதிச்சுற்று 1ல் மோதும். வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். 3, 4 வது இடம் பிடிக்கும் அணி கள் 'எலிமினேட்டர்' 'போட்டியில் மோதும். வெல்லும் அணி தகுதிச் சுற்று 2க்கு முன்னேறும்.தோற்கும் அணி வெளியேறும்.தகுதிச்சுற்று 1ல் தோற்ற, 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற அணிகள் தகுதிச்சுற்று 2ல் மோதும். வெல்லும் அணி பைனலுக்கு செல்லும். தோற்கும் அணிக்கு 3வது இடம் கிடைக்கும்.தகுதிச்சுற்று 1, 2ல் வென்ற அணிகள் மே 31 ல், நடக்கவுள்ள பைனலில் மோதும்.
ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர். போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். மற்றவை இரவு 7:30 மணிக்கு துவங்கும்.'பிளே-ஆப்' சுற்றுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.ஐ.பி.எல்., தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 46.5 கோடி. பைனலில் சாதித்து, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 13 கோடி வழங்கப்படும்.ஐ.பி.எல் .,தொடரில் 2025ல் முதன் முறையாக சாம்பியன் ஆனது பெங்களூரு அணி. இதற்கான கொண்டாட்டத்தில் 11 பேர் (ஜூன் 4, 2025) பலியாகினர். சம்பவம் நடந்து 10 மாதம் ஆன நிலையில், முதல் போட்டி இன்று பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடக்கிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்முறை மைதானத்தை சுற்றிலும் பல் வேறு பாதுகாப்பு பணிகள் நடந்துள்ளன. ரசிகர் கள் உள்ளே வர, வெளியேற தற்காலிகபாதைஅமைக்கப்பட்டுள்ளன.
ஆசிய வில்வித்தை 'ஸ்டேஜ் 1' தொடர் தாய்லாந்தின்பாங்காக் நகரில் ,காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் தகுதிச்சுற்றில் 'நம்பர் -1' இடம் பெற்ற இந்திய ரஜத் சவுகான் சிகிதா ஜோடி, நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது.இதில் 159-155 என்ற கணக்கில் சீன தைபே அணியை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இந்திய ஜோடி 157-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்து, இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு கலப்பு அணி கள் போட்டிக்கான தகு திச்சுற்றில் இந்தியாவின் தேவாங்,ருமா ஜோடி முதலிடம் பிடித்தது.நேரடியாக காலிறு தியில் களமிறங்கியது. இதில், தரவரிசையில் 9வது இடம் பிடித்த வியட் நாம் ஜோடியிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
பிலிப்பைன்சில் ஆசிய சைக்கிளிங் டிராக் சாம் பியன்ஷிப் பிலிப்பைன்சில் ,ஆண்களுக்கான எலைட்கெய்ரின் பிரிவில் போட்டி நடந்தது. இதன் இரண்டாவது அரையிறுதியில் இந்தியவீரர் டேவிட் பெக்காம் பங்கேற்றார். துவக்கத்தில் கால்பந்தில், சைக்கிளிங்கில் சாதித்து வரும் டேவிட் பெக்காம், 10.014 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார்.சீனாவின் ஜிவெய் ( 9.866),ஜியி ஹானுக்கு (9.869) அடுத்து, டேவிட் பெக்காம் மூன்றாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
வரும் செப்டம்பர் முதல், 2027, மார்ச் 3 வரை இந்தியாவில் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியானது. இந்தியஅணி பங்கேற்கும் 9 ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட், 'டி-20'ல் இருந்து ஓய்வுபெற்ற 'சீனியர்' வீரர்கள் ரோகித்-கோலி களமிறங்குகின்றனர்.
ஆண்களுக்கான தெற்காசிய கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) தொடர் மாலத்தீவில் ,இந்தியா, வங்கதேசம் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன. நேற்று மாலியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.விஷால் யாதவ், முதல் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வங்கதேசம், இந்திய அணிகள் . 'பி' பிரி வில் முதல் இரு இடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறின
சென்னை - மும்பை அணிகள் ,பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சென்னை - மும்பை மோதல்.முதற்கட்ட அட்டவணை முதல் 20 லீக் போட்டிகளுக்கான (மார்ச் 28 - ஏப்.12) வெளியானது 2ம் கட்ட அட்டவணை , (ஏப். 13-மே 24) பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு வெளியானது. வரும் மே 2ல் சென்னை, மும்பை அணிகள் சென்னையில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. பிரிமியர் கிரிக்கெட் 19வது சீசன் நாளை துவங்கி.பைனல், மே31ல் நடக்கவுள்ளது. 84 போட்டிகளில் நடப்புசாம்பியன் ' பெங்களூரு,சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள், விளையாடுகின்றன.பின்னர் 'பிளே - ஆப்' சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்படும்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ஸ்டேஜ் 1 தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் ரீகர்வ் பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் சுஹ்ஜெய்ன், தேவாங்க், ஜூயல் இடம் பற்ற இந்திய அணி, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இருந்தது. இந்திய அணி, நேற்று நடந்தகாலிறுதியில் ,மங்கோலியாவை சந்தித்தது.ஷு ட் ஆப்' வரை சென்ற, இப் போட்டியில் இந்தியா 29-27 என வெற்றி பெற்றது.அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை 5-1 என்ற கணக்கில், வென்று பைனலுக்கு முன்னேறியது. இந்தியாவின் சிகிதா, தேஜல், ராஜ் கவுர்இடம் பெற்ற அணி, பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் ,தகுதிச்சுற்றில் 'நம்பர்-1' இடம்பெற்றது. நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, 232-222 எனஹாங்காங்கை வென்று,அரையிறுதியில் இந்திய அணி, 229-226 என தாய்லாந்தை வீழ்த்தியது. பைனலில் (நாளை) இந்தியா-கஜகஸ் தான் மோத உள்ளன.பெண்கள் அணிகளுக்கான ரீகர்வ் ,அரையிறுதியில் இந்தியாவின் ரிதி, கீர்த்தி, ருமா இடம் பெற்ற அணி, 1-5 என சீனாவிடம் தோற்றது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணி 5-1 என மலேசியாவை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றியது. இந்தியாவின் ரஜத் சவுகான், ரிஷாப், பிரதமேஷ் இடம் பெற்ற அணி, ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவு அரையிறுதியில் தகுதிச்சுற்றில் ,'நம்பர்-1' இடம் பிடித்தது. எனினும் அரையிறுதியில் வியட்நாமிடம் இந்திய அணி, 233-234 என தோற்றது.அடுத்து நடந்த போட்டியில் 234-232 என பூடானை சாய்த்து, வெண் கலம் வசப்படுத்தியது. இந்தியாவின் ரிதி, பெண்களுக்கான தனிநபர் ரீகர் பிரிவு அரையிறுதியில் ,6-0 என மலேசியாவின் ஜோயேடனை வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (ஜூன் 12 -ஜூலை 5) இங்கிலாந்து, வேல்சில், நடக்கவுள்ளது. இந்திய அணி, இதற்கு தயாராகும் வகையில் தென் ஆப்ரிக்காவில் 5 போட் டிகள் (ஏப். 17, 19, 22, 25, 27) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ஐ.சி. சி., உலக கோப்பை கடந்த ஆண்டு நவி மும்பையில் நடந்த (50 ஓவர் ) பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய, ஹர்மன்பிரீத் கவுர்தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுவரலாறு படைத்தது. இந்த வெற்றி, 'டி-20' உலக கோப்பையிலும் தொடரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றதால், எங்கள் மீதான எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடரில் கிடைத்த அனுபவம், உலகின் எந்த பகுதியிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.
ஆசிய சைக்கிளிங் டிராக் சாம்பியன்ஷிப் பிலிப்பைன்சில். பெண்கள் ஜூனியர் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் இந்தியா சார்பில் ஆபா, நமிதா, தபிதா இடம் பெற்ற அணி பைனலுக்குமுன்னேறியது. இதில் 52.817 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றது.இந்தியா சார்பில் செலஸ் டினா, திரியாஷா, கீர்த்தி இடம் பெற்ற அணிபெண்கள் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் களமிறங்கியது. இதன் முதல் சுற்றில் இந்தியா, மலே சியா மோதின. இந்திய அணி 49.525 வினாடியில் வந்து, தேசிய சாதனை படைத்தது. இதற்கு முன் 50.329 வினாடியாக இருந்தது. இருப்பினும் இந்திய அணி இரண்டாவது சுற்று வாய்ப்பை இழந்தது. மலேசிய அணி 48.086 வினாடியில்அடுத்த சுற்றுக்கு வந்து, முன்னேறியது.