ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.74 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். தடகளம், நீச்சல், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 10 விளையாட்டுகள் நடைபெற உள்ளன. அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான 6 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.இந்தியா சார்பில் 125 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை ஒலிம்பிக் பதக்க வீராங்கனைகளான மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஏந்திச் செல்ல உள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒவ்வொரு முறையும் போட்டியை நடத்தும் நாடு தனித்துவமான லோகோவை அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால், கிளாஸ்கோ 2026 தொடங்கி அனைத்து காமன்வெல்த் போட்டிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த புதிய '3V' லோகோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த லோகோவில் ஆங்கில எழுத்தான 'V' மூன்று முறை இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றி (Victory), சமத்துவம் (Equality), மனிதநேயம் (Humanity), ஆற்றல் (Energy) ஆகிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது.லோகோவின் மேற்பகுதியில் உள்ள ஆறு பிரிவுகள், ஆப்ரிக்கா, ஆசியா, அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய காமன்வெல்த் நாடுகள் அமைந்துள்ள கண்டங்களை குறிக்கின்றன. இனி நடைபெறும் அனைத்து காமன்வெல்த் போட்டிகளிலும் இந்த லோகோ பொதுவான அடையாளமாக பயன்படுத்தப்படும்.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் ஆமதாபாத் நகரம் நடத்தவுள்ளது. இதையொட்டி, இந்திய வீரர்கள் கிளாஸ்கோ தொடரில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த தொடருக்கான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதற்கிடையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மாநில விளையாட்டுத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு கிளாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு போட்டி ஏற்பாடுகள், விளையாட்டு அரங்குகள், வீரர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை நேரில் ஆய்வு செய்து, அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஆமதாபாத்தில் உலகத் தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகின்றன. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பதக்க வேட்டைக்குத் தயாராகியுள்ளனர்.ஒலிம்பிக் தங்க நாயகன் நீரஜ் சோப்ரா, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், முத்தாண்டுத் தாண்டுதல் வீரர் பிரவீன் சித்ரவேல் உள்ளிட்ட பலர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக களமிறங்க உள்ளனர்.10 விளையாட்டுகள் மட்டுமே--இந்த முறை காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 10 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. தடகளம், நீச்சல், டிராக் சைக்கிளிங், பளுதூக்குதல், 3×3 கூடைப்பந்து, லான் பவுல்ஸ், நெட்பால், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ மற்றும் குத்துச்சண்டை ஆகியவை நடத்தப்படுகின்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பிரிவில் 6 போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.அதே நேரத்தில், பேட்மிண்டன், ஹாக்கி, கிரிக்கெட், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டிரையாத்லான், மல்யுத்தம், பீச் வாலிபால் மற்றும் ரக்பி செவன்ஸ் உள்ளிட்ட 9 விளையாட்டுகள் இந்த முறை சேர்க்கப்படவில்லை.போட்டிகள் கிளாஸ்கோவில் உள்ள நான்கு அரங்குகளில் நடைபெறவுள்ளன. வழக்கம்போல் தனி விளையாட்டு கிராமம் அமைக்கப்படாமல், வீரர்-வீராங்கனைகள் நகரின் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.துவக்க விழாவில் இந்தியக் கொடி.ஜூலை 23-ம் தேதி OVO Hydro Arena-வில் நடைபெறும் தொடக்க விழாவில், இந்திய அணியின் சார்பில் ஒலிம்பிக் பதக்க நாயகிகள் மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி இந்த தொடரில் அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான பைனலில், இரு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரஸ் அடித்த ஒற்றை கோல், ஸ்பெயினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.2010-க்கு பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடினர். தீர்மானிக்கும் கோலை அடித்த பெர்ரான் டோரஸ், ஸ்பெயின் ரசிகர்களின் புதிய நாயகனாக உயர்ந்தார்."என் கோல் மட்டும் அல்ல, இது ஒட்டுமொத்த ஸ்பெயின் மக்களின் கனவின் பலன். உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே இருந்தது. அந்த இலக்கை அடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றார் பெர்ரான் டோரஸ்.பிபா விருதுகளில் ஸ்பெயின் ஆதிக்கம்.உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கான பிபா விருதுகளில் ஸ்பெயின் வீரர்கள் மூன்று முக்கிய விருதுகளை கைப்பற்றினர்.கோல்டன் பால் (சிறந்த வீரர்): ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி. அணியை சிறப்பாக வழிநடத்தி உலக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.கோல்டன் கிளவ் (சிறந்த கோல்கீப்பர்): உனாய் சைமன். தொடரில் 7 போட்டிகளில் எதிரணிக்கு கோல் வாய்ப்புகளை மறுத்து அசத்தினார்.சிறந்த இளம் வீரர்: 19 வயதான பாவ் குபார்சி. தற்காப்பில் சிறப்பாக விளையாடிய அவர், பைனலிலும் தனது திறமையை நிரூபித்தார்.மெஸ்ஸியின் சோகமான தருணம்.தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இறுதிப்போட்டி முடிந்ததும் மைதானத்தில் மிகுந்த ஏமாற்றத்துடன் அமர்ந்து கண்ணீர் வடித்தார். அந்த காட்சி ரசிகர்களை உருக்கமடையச் செய்தது.பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்காமல், சக வீரர்களுடன் அமைதியாக மைதானத்தை விட்டு வெளியேறிய மெஸ்ஸி, தோல்வியின் வேதனையை வெளிப்படுத்தினார்.
அர்ஜுன் எரிகைசி அபாரம்சென்னையில் நடைபெற்று வரும் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 5வது சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். ஐந்து சுற்றுகள் முடிவில் அர்ஜுன் மற்றும் பிரான்சின் அலிரேசா தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.சீன ஓபனில் சிந்துவுக்கு எதிர்பார்ப்புசீன ஓபன் சூப்பர்-1000 பேட்மின்டன் தொடர் இன்று தொடங்குகிறது. ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து, தனது வெற்றிப் பயணத்தை தொடருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காயம் காரணமாக சாத்விக்சாய்ராஜ்–சிராக் ஷெட்டி ஜோடி இந்த தொடரில் பங்கேற்கவில்லை.உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்.சீனாவில் நாளை தொடங்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில், இந்திய அணிக்காக மனு பாகர், ஸ்வப்னில் குசாலே, அனிஷ் பன்வாலா, ஈஷா சிங், இளவேனில் வாலறிவன், சிப்ட் கவுர் சாம்ரா, ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
கிளாஸ்கோவில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வெல்வார்கள் என இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் 23வது காமன்வெல்த் விளையாட்டில், இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் 8 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்குகின்றனர். இதில் 'பாரா' பிரிவும் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், "இந்திய 'பாரா' வீரர்கள் இந்த முறை சிறப்பாக செயல்பட்டு குறைந்தது 5 முதல் 6 பதக்கங்கள் வரை வெல்வார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. அவர்கள் அதற்கான திறமையுடன் தயாராகியுள்ளனர்," என்றார்.
2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்காக பிரத்யேக 'சாம்பியன்ஷிப் ரிங்' (Championship Ring) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மரபு உருவாகியுள்ளது.2026 உலகக் கோப்பை நினைவாக மொத்தம் 2,026 மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், சாம்பியன் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் முக்கிய உறுப்பினர்களுக்கு 30 மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.மீதமுள்ள 1,996 மோதிரங்கள், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் வாங்கும் வகையில் சிறப்பு நினைவுப் பொருளாக விற்பனைக்கு விடப்படுகின்றன. இந்த முயற்சி, உலகக் கோப்பை வெற்றியின் பெருமையை ரசிகர்களுடனும் பகிரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 'சூப்பர்-750' ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிந்து, நடப்பு சாம்பியனும் உலகின் 3-வது இட வீராங்கனையுமான ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அதே கணக்கில் வெற்றி பெற்று, 50 நிமிடங்களில் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் பட்டத்தை வசப்படுத்தினார்.இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும், தனது முதல் சூப்பர்-750 பட்டத்தையும் சிந்து பெற்றார். மேலும், 19 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச அரங்கில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.வெற்றிக்குப் பிறகு பேசிய சிந்து, "ஜப்பான் ஓபனில் சாம்பியன் ஆனது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி எனக்கு புதிய தன்னம்பிக்கையை அளிக்கிறது. பயிற்சியாளர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி," என்று தெரிவித்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ள 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில், இந்திய அணியின் தேசியக் கொடியை ஏந்தும் பெருமை ஒலிம்பிக் பதக்க வீராங்கனைகளான மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.74 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் 10 விளையாட்டுகள், 215 பதக்கப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்க விழா கிளாஸ்கோவின் ஓ.வி.ஓ. ஹைட்ரோ அரங்கில் நடைபெற உள்ளது.இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் ஜோதி ஓட்ட நிகழ்ச்சியிலும் மீராபாய் மற்றும் லவ்லினா பங்கேற்க உள்ளனர்.இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, "இந்த பொறுப்பு இருவரின் சாதனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம். காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.