12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி ,14 அணிகள் இடையிலான பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று இரவு சென்னை நேரு ஸ்டே டியத்தில் 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., அறிமுக அணியான இன்டர் காஷியைமுதல்முறையாக எதிர் கொள்கிறது. சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. முந்தைய ஆட்டத்தில் எப்.சி.கோவாவுடன் டிரா கண்டது. இன்டர் காஷி 6 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 3 தோல்வியுடன் 5 புள்ளிகள் எடுத்துள்ளது.சென்னை அணி ஐ லீக்கில் இருந்து முன்னேறி இருக்கும் இன்டர் காஷியை வீழ்த்தி 2-வது வெற்றிக்குகுறி வைத்துள்ளது.
லீக் போட் டியில் ஐதராபாத், லக்னோ அணிகள்ஐதராபாத், ராஜிவ் சர்வதேச மைதானத்தில்நேற்று மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார்.ஐதராபாத் அணி 20 ஓவரில் 156/9 ரன் எடுத்தது. லக்னோ அணி 19.5 ஓவரில் 160/5 ரன் எடுத்து, லக்னோ அணி இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று, நடந்த போட்டியில், பெங்களூரு, சென்னை அணிகள் மோதின.'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்தது. சென்னை அணி 20 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி,கிரிக்கெட் லீக் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை (250/3) பதிவு செய்தது .
மங்கோலியா தலைநகர் உலான்பத்தூரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் கால் இறுதியில் உலக சாம்பியனான இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் யுகா சதாமட்சுவை வென்று அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் ஜியி சென்னை வென்று அரை இறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் லோகேஷ் (85 கிலோ) கொரியா வின் கிச்சாய் கிம்மையும், ஆகாஷ், துர்க்மெனிஸ்தானின் பாக்டி யாரோவையும், ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ). கிர்கிஸ்தானின் அலி பேயையும் ஆண்கள் பிரிவில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினர்.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 8 சுற்றுகளாகஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் 2-வது சுற்று உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் பந்தயம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை ஸ்பெயினின் கிரனடாவில் நடக்கிறது. 51 நாடுகளைச் சேர்ந்த 434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.24 பேர் கொண்ட இந்திய அணியில் ரிதம் சாங்வான் (25 மீட்டர் பிஸ்டல்)உலகபோட்டியில் 9 பதக்கம் வென்ற அனுபவசாலியான அஞ்சும் மோட்கில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு) மெகுலி கோஷ் (10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ்) செயின் சிங், அகில் ஷியோரன், தனுஷ் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
சென்னை, பஞ்சாப் அணிகள் நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது. பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 210/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சேப்பாக்கத்தில் இன்று சந்திக்கிறது. இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சென்னை சேப்பாக்கத் தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் ,மூத்த வீரர் டோனி பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என்றாலும் அணியினருடன் இருந்துஉற்சாகப்படுத்தி, நேற்று பயிற்சியின் போது வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கொல்கட்டா அணி, ஐதராபாத் அணியை நேற்று கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற கொல்கத்தா அணி பீல்டிங் தேர்வு செய்தது.ஐதராபாத் அணி 20 ஓவரில் 226/8 ரன் குவித்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஐதராபாத் 65 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ,தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள்கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்தநியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்ததுநியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்து 2 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்தது.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ,ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இதில் நேற்று நடந்தபோட்டியில், ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் பயந்தலாவின் பயார் குவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சச்சின் சிவாச் கால் இறுதியில் சீனதைபேயின் செங் வெய் லீயை சந்திக்கிறார் எதிர்கொள்கிறார்.இந்திய வீரர் விஸ்வநாத் சுரேஷ் ,50கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் , 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் பெக் ஸாட் எர்ஷோவை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் விஸ்வநாத் சுரேஷ், உலக சாம்பியனான சன்ஜார் தாஷ்கன் பேயை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார்.