டில்லி, ராஜஸ்தான் அணிகள் நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பீல்டிங்' தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 193/8 ரன் எடுத்தது. டில்லி அணி, 19.2 ஓவரில் 197/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரோம் நகரில் களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகதரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் 31 வயது உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான கோகோ காப்புடன் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினார். ஸ்விடோலினா 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விடோலினாவுக்கு 1,000 தரவரிசை புள்ளியுடன், ரூ.11% கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடம் பெற்றகோகோ காப்புக்கு ரூ.6% கோடி கிட்டியது.வெற்றிக்கு பிறகு 'இங்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றேன். இது அடுத்து நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு உத்வேகம் அளிக்கும்' என்று ஸ்விடோலினா கூறினார்.
கை, கால் இழந்த உலகின் முதல் இளம் வீராங்கனையான பாயல் நாக் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்துள்ளார். பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்றார். 8 வயதில் மின்சாரம் தாக்கியதில் கை கால்களை இழந்த பாயல், வாயைக் கொண்டு வரைந்த ஒவியம் 2022-ல் வைரலானது. இதையடுத்து, பாராலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி பயிற்சியாளர் குல்தீப், பாயலுக்கு பயிற்சியளித்து சாதிக்க வைத்துள்ளார். சர்வதேச அளவில் தங்கம் வென்று, 'Para Archer of the Year 2025' விருதை வென்றுள்ளார்
இந்தியாவின் செஸ் பிரக்ஞானந்தா 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரின் முதல் சுற்றை 'டிரா' செய்தார். 11வது சீசன் 6 தொடர்களாக 'கிராண்ட் செஸ் டூர்' நடக்கிறது. ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தானின், சின்டாரோவ், ஜெர்மனியின் வின்சன்ட் , கீமர், அமெரிக்காவின் சோவெஸ்லே உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசாபிரூஸ்ஜா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 60வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார்.
லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதின. . 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 187/5 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 188/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லீக் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணிக்கு கேப்டனாக பும்ரா முதன் முறையாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற இவர், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 200/8 ரன் எடுத்தது. மும்பை அணி 205/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
57-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் ராய்ப்பூரில் நேற்றிரவு மோதியது. 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி 20 ஓவரில் 192/4 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி 19.1 ஓவரில் 194/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 30 நாடுகளைசேர்ந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி சுற்றாக விளங்கும் 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 3-வது நாளானநேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந் திய வீராங்கனைஞானேஸ்வரி யாதவ் 'ஸ்னாட்ச்' முறையில் 88 கிலோவும், 'கிளீன் அண்ட் 3 ஜெர்க் முறையில் 106 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடை தூக்கினார். அவர் ஸ்னாட்ச்முறையில் வெள்ளிப்பதக்கமும், ஒட் டுமொத்தத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். தொடக்க நாளில் இந்திய வீராங்கனை ககன் கோகம் கோஹர் (48கிலோ) ஒரு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். சீனாவின் ஜின்லான் ஜாவ் 'ஸ்னாட்ச்' முறையில் 95 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோவும் என மொத்தம் 216 கிலோ எடை 1 தூக்கி தங்கப்பதக்கத்தைவென்றார். வியட்நாம் வீராங் கனை ஹோய்ஹூயோங்'ஸ்னாட்ச் ‘ஸ்னாட்ச் முறையில் 87கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 108 கிலோவும் எனமொத்தம் 195 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது..
56-வது லீக் ஆட்டத்தில் குஜராத், ஐதராபாத் அணிகள் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின. 'டாஸ்'ஜெயித்தஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, 20 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது, 14.5 ஓவர்களில் ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் மளமள வென்று 86 ரன்னில் சரிந்தன. குஜராத் அணி 82ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தர்மசாலாவில் நேற்று இரவு நடந்த 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ,55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. டெல்லி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.