இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில், பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ஹனா மோதாஸ் மோதினர். முதலிரண்டு செட்டை 11-5, 11-6 எனக் கைப்பற்றிய அனாஹத், 3வது செட்டை 9-11 என இழந்தார். 4வது செட்டை 11-6 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் 3-1 (11-5, 11-6, 9-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபே சிங் ஆண்களுக்கானபைனலில் மோதி, அபே சிங் 3-0 (11-9, 11-8, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
.மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர் இத்தாலியில் பெண்கள்ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் பவினா படேல் பங்கேற்றுகாலிறுதியில் 3-0 (11-8, 11-2, 11-6) என்ற நேர் செட்டில்தென் கொரியாவின் சங்யே மூனை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில்மற்றொரு தென் கொரிய வீராங்கனை யங் ஜங்கை சந்தித்து பவினா 3-1என (8-11, 11-8, 11-4, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் பவினா, துருக்கியின் ஐயர்ம் ஓலக்கை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை பவினா 11-2, 11-6 14-12 என வென்று, , 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர்மும்பையில். நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, மலேசியாவின் எய்னா அமா னியை சந்தித் தார். முடிவில் தான்வி, 3-1 என்ற செட்கணக்கில்வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஜோஷ்னா சின்னப்பா இந்தியாவின் சீனியர் வீராங்கனை, எகிப்தில் நாடியன் எல்ஹாம்மமியுடன் மோதி., ஜோஷ்னா 1-3 என்ற (8-11, 11-8, 6-11, 1-11)கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியாவின் வீர் சோட்ரானி ஆண்கள் பிரிவு காலிறுதியில் 3-0 என (11-9, 11-8, 11-2) மலேசியாவின் முகமது ஷராப்பை வென்றார்.
ஒடிசா அணி ஐ.எஸ்.எல்கால்பந்து லீக் போட்டியில் 4-1 என, வடகிழக்கு யுனைடெட் அணியை வென்றது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் லீக் போட்டியில் நேற்று, அசாமின் கவுகாத்தியில் வடகிழக்கு யுனைடெட், ஒடிசா அணிகள் மோதி, ஒடிசா அணி 4-1 கோல் கணக்கில் வென்றது. இதுவரை விளையா டிய 4 போட்டியில், ஒரு வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என, 5 புள்ளிக ளுடன் ஒடிசா அணி 9வது இடத்துக்கு முன்னேறியது.
வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபிய கிளப் அணிகள் பங்கேற்கும் 'கன்காகப்' சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில்,மொத்தம் 27 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி, 38, சர்வதேச கால்பந்து அரங்கில் அதிவேகமாக 900 கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார்.1142 போட்டியில் இம் மைல்கல்லை எட்டினார். இந்த இலக்கை அடைந்த இரண்டாவது வீரர் ஆனார். முதலிடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டி யானோ ரொனால்டோ 41, உள்ளார்.
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின்முன்னணி வீராங்கனை அனாஹத் சிங் 18, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்று,. எகிப்தின் பரிதா வாலித்தை எதிர்கொண்டார்.அனாஹத் முதல் செட் 11-6 ,2 வது செட் 11-9 3வது செட் 11–5 என கைப்பற்றி., 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 49, அயர்லாந்தின் பிராயான்னே பிளைனை இரண்டாவது சுற்றில் சந்தித்தார். இதில் ஜோஷ்னா 3-1 என்ற (12– 10, 11-4, 8-11, 11-9) செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
.ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், இரு பிரிவுகளாக 2வது சுற்றில் மோதும். இதில், 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (ஆக. 28)முன்னேறும். பைனல், ஆக. 30ல் நடக்கவுள்ளது.வேல்ஸ் (ஆக. 15), இங்கிலாந்து (ஆக. 17), பாகிஸ்தான் (ஆக. 19) அணிகளுடன் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.இந்திய அணி பங்கேற்ற 8 போட்டியில், இந்த ஆண்டுஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. ஏழு போட்டியில் தோல்வியடைந்தது. உலக கோப்பை வெல்ல ,கடுமையாக இந்திய அணி போராட வேண்டும்.
, ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் பிரான்சில், .பெண்கள் ஒற்றையர்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா, அன்மோல் கார்ப் மோதினர்.தன்வி சர்மா 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி, ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டான், ஆடம் பிரிங்கிள் ஜோடியை ஆண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16 போட்டியில் சந்தித்தது.ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 26-24, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர்ஒற்றையர்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் மும்பையில், இந்தியாவின்சசிகுமார்முகுந்த், நெதர்லாந்தின் ஸ்டிஜ்ன் பெல் மோதினர். சசிகுமார் 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் சித்தார்த் ரவாத், தேவ் ஜாவியா மற்றொரு போட்டியில் மோதி. சித்தார்த் ரவாத் 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
வரும் 2028ல் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி புவனேஸ்வரில் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன் ஷிப் தொடர்,சர்வதேசதடகள கூட்டமைப்பு சார்பில், 21வது சீசன் போலந்தில் இன்று துவங்குகிறது.இந்நிலையில் நேற்று போலந்தில், உலக தடகள கவுன்சில் கூட்டம் நடந்தது.இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம் உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் இடம் பெற்றுள்ளன. வரும் 2028ல் உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் 22வது சீசனை நடத்திட இந்தியாவுக்கு அனுமதி வழங்கப் பட்டது. இதனையடுத்து இப்போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.வரும் மார்ச் 24-25ல் கலிங்கா மைதானத்தில், தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்முதல்சீசன் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ் வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கவுள்ளது.