25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், அரிசி விலையில் மாற்றம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், அரிசி விலையில் மாற்றம்

 தமிழகத்தில் அரிசியை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்திருந்தது.இதற்கு பிறகு பருவமழை தவறியது, குறைவான விளைச்சல், மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவாகிவிட்டது.. இதனால் நெல் விலையும் அதிகமாகி விட்டது. எனவே, அடுத்த 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகளும் கடந்த ஜனவரி மாதமே கணித்து கூறியிருந்தார்கள். காரணம் என்ன: மேட்டூர் அணையும் மூடப்பட்டு, சம்பா சாகுபடிக்கு மழையும் கைகொடுக்காமல் டெல்டா விவசாயிகளும் கையை பிசைந்தனர். இவையெல்லாம்தான் தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணமானது. 

சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்தது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்தது.. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையானது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்தது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை எகிறியது... கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், இப்போது விலை குறைந்து வருகிறதாம்.அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளது.தற்போது கோடை விளைச்சலும், சந்தைக்கு வர தொடங்கிவிட்டதால், அரிசியின் விலையில் மாற்றம் தென்பட்டு வருகிறதாம்.. விலையும் குறைந்து தொடங்கியுள்ளதாம்.. அரிசி விலை: அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை கண்காணித்தும் வருகிறது. அதன்படி, ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது... அரிசியின் விலை திடீரென குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த 6 மாதங்களை எடுத்துக் கொண்டால், எவ்வளவுதான் அரிசி விலை உயர்ந்தாலும், தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி தந்தவாறே இருந்தார். அதற்கேற்றவாறு, தற்போதுவரை ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், ரேஷன் அரிசி தாரர்களுக்கும், நிம்மதி ஏற்பட்டுள்ளது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News