உலக 'பாரா' தடகள சாம்பியன் ஷிப் இந்தியாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது சீசன் ,நேற்று ஆண்களுக் கான ஈட்டி எறிதல் எப். 57 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் பிரவீன் குமார் கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 41.92 மீ., எறிந்து, 9வது இடம் பிடித்தார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஹேம் சந்திரா (41.17 மீ.,) கடைசி இடம் (10) பெற்றார்.இந்தியாவின் விகாஷ், 6.96 மீ., மட்டும் தாண்டி, 6வது இடம் பெற்று, ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (டி 47) பதக்க வாய்ப்பை இழந்தார். மற்றொரு இந்திய வீரர்அஜய் சிங் (6.31 மீ.,) 10 வது இடம் பிடித்தார்.ஆண்களுக்கான 100 மீ., டி 37 பிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர்கள். ராகேஷ்பாய் (11.88 வினாடி), ஷ்ரேயான்ஸ் (12.18) கடைசி இரு இடம் (7,8) பெற்றனர். இந்தியா, இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்ற பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ் டல்' / 'ஷாட்கன்') தொடர் டில்லியில், ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோனாதன் கவின் ஆண்டனி (586.19 புள்ளி), சிராக் சர்மா (578.15) முத லிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். இதில் ஜோனாதன்,244.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் (576.19 புள்ளி), மோஹினி சிங் (576.12), ராஷ்மிகா சாகல்(573.17) முறையே 1, 2, 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.பைனலில் ராஷ்மிகா, 236.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனைகளான (174.2), மோஹினி (153.7) முறையே 5, 6வது இடம் பிடித்தனர்.இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கைப்பற்றி முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா.
உலக பாரா தடகளசாம்பியன்ஷிப் டில்லியில் இன்று துவங்குகிறது சொந்த மண்ணில் பதக்க வேட்டை நடத்த இந்திய நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி சார்பில், நடத்தப்படுகிறது. இதன் 12வது சீசன் டில்லி, நேரு மைதானத்தில் இன்று துவங்குகிறது. வரும் அக். 5 வரை நடக்கும். 104 நாடு களில் இருந்து 1500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.101 ஆண்கள், 84 பெண்கள், ஒரு கலப்பு போட்டி என மொத்தம் 186 பிரிவு களில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. ஈட்டி எறிதலில் பாராலிம்பிக் சாம்பியன், நடப்பு உலக சாம்பியன் சுமித் அன்டில், பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்) இந் தியாவுக்கு தங்கம் வென்று தரலாம். இந்தியா சார்பில் 74 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட் சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இதன் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று முன் தினம், துபாயில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 135/8 ரன் எடுத்தது. வங்கதேச அணி 20 ஓவரில் 124/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை நடக்கும் பைனலில் மோதுகின்றன.
ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த, 80 பேர் பங்கேற்றனர்.இந்தியாவின் சான்வி சர்மா பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். இந்தியாவின் சான்வி சர்மா, சுஜிதா சுகுமாறன் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி கைப்பற்றியது.இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி என, 4 பதக்கம் கைப்பற்றியது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
(ரைபிள்/பிஸ்டல் /ஷாட்கன்) ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்திய வீராங்கனைகள் மூன்று பதக்கங்களையும் தங்கம் வெள்ளி, வெண்கலம் வென்றனர்.இந்தியாவின் அனுஷ்கா தோகூர் பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில்,621.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான அன்ஷிகா (619.2 புள்ளி), ஆத்யா அகர்வால் (615.9) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.இந்தியாவின் தீபேந்திர சிங் ஷெகாவத், ஆண்களுக்கான50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில், 617.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் கன்யான் (616.3) வெண்கலம் வென்றார் . சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு தடைஇருப்பதால், துப்பாக்கி சுடுதல் ”கூட்டமைப்பு கொடியின் கீழ் விளையாடும் கமில் நுாரியாக் மெடோவ் (618.9) தங்கம் வென்றார். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என முதலிடத்தில் உள்ளது.
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப், தென் கொரியாவின் குவான்ஜு நகரில், பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதற்கான தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற இந்தியாவின் ஷீத்தல் தேவி, அரையிறுதியில் பிரிட்டனின் ஜோடீ கிரின்ஹாமை எதிர்கொண்டார்.ஷீத்தல் தேவி 145-140 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலக பாராசாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார். இந்தியாவின் தோமன் குமார், மற்றொரு அரையிறுதியில் 144-143 என சகவீரர் ஷ்யாம் சுந்தரை வீழ்த்தினார். பைனலில் (நாளை) ராகேஷ் குமார், தோமன் குமார் மோத உள்ளனர். ஷ்யாம் சுந்தர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மெக்குயினை சந்திக்க உள்ளார்.
புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவின், ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்” என போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி.. அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 36-36 என சமநிலையில் இருந்தது. டை பிரேக்கரில் உ.பி., அணி 6-5 என வெற்றி பெற்றது. (அக். 22-31, பஹ்ரைன்) ஆசிய யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டிக்கான 23 பேர் கொண்ட இந்திய அணியில் துருவ் கார்ப், உத்தம் சிங் ராகவ், குஷி சந்த், அஹானா சர்மா, சந்திரிகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.(15, 17 வயது, அக். 21-26, சீனா) ஆசியபாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் தன்வி பத்ரி இடம் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு 15 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஒற்றையரில் தங்கம் வென்றிருந்தார். ஜூனியர் இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாசென்றுள்ள ,5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கான் பெராவில் முதல் போட்டி இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, உட்பட 8 அணிகள் பங்கேற்கின் றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட் டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். பைனல் நவ 2ல் கொழும்பு அல்லது பெங்களூருவில் நடக்கும். தனதுமுதல் போட்டியில் ,இந்திய அணி (செப். 30) இலங்கையை சந்திக்கிறது. இதற்குத் தயாராகும் வகையில் இன்று முதல், பயிற்சி போட்டிகள் துவங்குகின்றன. கொழும்புவில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோத காத்திருக்கின்றன ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெங்களூருவில் நடக்கும் போட்டியில் ,இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டிகள் இந்திய 'ஏ' அணி, நியூசிலாந்தைஎதிர்கொள்கிறது.
அஷ்வின் இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ,டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில், கும்ளேவுக்கு (619) அடுத்து, 2வது இடத் தில் உள்ளார் அஷ்வின் (537). கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் டில் இருந்து ஓய்வு பெற்றார். பிரிமியர் லீக் அரங்கில் சென்னை (2008-15, 2025), புனே (2016), பஞ்சாப் (2018-19), டில்லி (2020-21), ராஜஸ்தான் (2022-24) அணிகளுக்காக, களமிறங்கினார். சமீபத்தில் பிரிமியர் லீக் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஷ்வின். சிட்னி தண்டர் அணிக்காக ஆஸ்தி ரேலியாவில் நடக்கவுள்ள 'பிக் பாஷ் லீக்' 15வது சீசனில் (டிச. 15 - 2026, ஜன. 26) விளையாட ஒப்பந்தமானார் அஷ்வின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். வீரர்கள் ஏலத்தில் (அக். 1) இடம் பெற்றுள்ள அஷ்வின், சர்வதேச லீக் டி-20' 4வது சீசனுக்கான (டிச. 2 2026, ஜன. 4) தேர்வாகும் பட்சத்தில், 'பிக் பாஷ் லீக்' தொடரில் பின் பாதியில் களமிறங்குவார்.