இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லேர்னர் டீன் சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். இதில் சின்னர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்
ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் (11வது சீசன்) இந்தியாவின்ஆமதாபாத்தில் முதன் முறையாக நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், ஆர்டிஸ்ட் நீச்சல் எனநான்கு பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. ஆண்களுக்கான 50 மீ., பட்டர்பிளைபிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர் ரோகித் பெனடிக்சன், 23.89 வினாடிநேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ரோகித், புதிய தேசிய சாதனை படைத்தார். தமிழகத்தை சேர்ந்த இவர், முன்னதாக உலக பல்கலை., விளையாட்டில் 23.96 வினாடி நேரத்தில் வந்து இருந்தார்.ஆண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் பைனல் பைனலில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்,, 49.96 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். இத்தொடரில் ஐந்தாவது பதக்கத்தை ஸ்ரீஹரி வென்றார்
வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் சர்வதேசசெஸ் கூட்டமைப்பு சார்பில் ஓபன், பெண்கள், 12, 10 வயது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 88 நாடுகளில் இருந்து 842 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் ஷர்வானிகா, கியானா, திவி உள்ளிட்டோர் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். தமிழகத்தின் அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா, தொடர்ந்து 9 போட்டியில் வெற்றி பெற்றார். கடைசி போட்டியில் தோற்ற போதும் 9.0 புள்ளி பெற்றார். மங்கோலியாவின் சின்ஜோரிக், சீனாவின் ஜிஜின் தலா 9.0 புள்ளி பெற்றனர்.டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஷர்வானிகா, முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனார். கடந்த 2024 ல் அல்பேனியாவில் நடந்த உலக 'கேடட்' தொடரில் ரேபிட் பிரிவில் தங்கம், 'பிளிட்ஸ்' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். இந்தியா வின் சர்பர்தோ மணி, 8.5 புள்ளி எடுத்து, 10 வயதுகுட்பட்ட ஓபன் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்துஎன, மொத்தம் 8 அணிகள்பங்கேற்கின்றன.ஒவ்வொருஅணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள், நவ. 2ல் நடக்கவுள்ள பைனலில் விளையாடும்.இந்திய அணி, தனது முதல் போட்டியில் (இடம்: கவுகாத்தி) இன்று இலங்கையை சந்திக்கின்றது. அதன்பின் பாகிஸ்தான் (அக். 5, கொழும்பு), தென் ஆப்ரிக்கா (அக். 9, விசாகப்பட்டனம்), ஆஸ்திரேலியா (அக். 12, விசாகப்பட்டனம்), இங்கிலாந்து (அக். 19, இந்துார்), நியூசிலாந்து (அக். 23, நவி மும்பை), வங்கதேசத்தை (அக். 26, நவி மும்பை) எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு சாதகமாக சொந்த மண்ணில் ஹர் மன்பிரீத் கவுர் தலைமையில் உலகின் 'நம்பர் -3' இந்திய அணி,களமிறங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளுக் கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்இந்தியாவில் நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 46 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரிங்கு சிங், நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 66.37 மீ., எறிந்து, சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.இப்பிரிவில் உலக சாதனை (2023ல்) படைத்த இந்தியாவின் சுந்தர் சிங் குர் ஜார், ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 64.76 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிவென்றார். இந்தியாவின் தயவந்தி.பெண்களுக்கான 64 வட்டு எறிதலில் 27.94 துாரம் எறிந்துநான்காவது இடம் பெற, வெண்கல வாய்ப்பு நழுவி, ஆசிய அளவில் இது சிறந்த தூரம் ஆனது. ஆண்கள் குண்டு எறிதல் (எப் 40) போட்டியில் ரஷ்யாவின் டெனிஸ் ஜினெஸ்டிலவ், 3, 4வது வாய்ப்பில் 11.85, 11.92 மீ., துாரம் எறிந்து அடுத்தடுத்து புதிய உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் பவித்ரா, நந்தினி, அக்சயா, ஏஞ்சல் சில்வியா அடங்கிய தமிழக பெண்கள் அணி (45.76 வினாடி) வெண்கலம் வென்றது. ஜூனியர் பெண்கள் ஹாக்கி 3வது போட்டிகான்பெராவில், இந்திய அணி 1-0 என ஆஸ்திரேலியாவை (21 வயது) வீழ்த்தி, முதல் வெற்றி பெற்றது. இந்திய அணிக்குசிவாச் (32வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் டகேரு யூஜுகி ஜோடி ஜப்பான் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் 4-6, 6-3, 18–16 என அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன், இவான் கிங் ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவின் அபய் சிங் ,கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் 'ரவுண்டு - 16' போட்டியில் 2-3 (13-11, 5-11, 11-5, 3-11, 3-11) என எகிப்தின் பேர்ஸ் டெசவுகியிடம் போராடி தோல்வியடைந்தார். டென்னிஸ் 'பிளே-ஆப்'.'பில்லி ஜீன் கிங்' கோப்பை போட்டியில் (நவ.14-16, பெங்களூரு) பங்கேற்கும் இந்திய அணிக்கு சஹாஜா, ஸ்ரீவள்ளி, அங்கிதா ரெய்னா, ரியா பாட்யா, பிரார்த்தனா தேர்வாகினர். வைதேகி சவுத்ரி மாற்று வீராங்கனையாக இடம் பிடித்தார்.
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ் டல' / 'ஷாட்கன்') தொடர் டில்லியில், 10 மீ., ''ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா சாகல் - கபில் (582.15 புள்ளி), வன்ஷிகா சவுத்ரி - ஜோனாதன் கவின் ஆண்டனி (578.20) ஜோடிகள்முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.பைனலில் ராஷ்மிகா -கபில் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம், வன்ஷிகா - ஜோனா தன் ஜோடி வெள்ளி வென்றனர். இந்தியாவின் பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் மான்சி ரகுவன்ஷி (117 புள்ளி), தில்லான் ரைசா (112.6), அக்ரிமா கன்வார் (111) முறையே 1, 3, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் தில் லான் ரைசா, 51 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.மான்சி (41) வெண்கலம் கைப்பற்றினார்.இந்தியா இதுவரை 3 தங்கம்,5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கம் கைப்பற்றிமுதலிடத்தில் நீடிக்கிறது.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில், ஹரியானாவின் சீமா, 55.26 மீ., எறிந்து தங்கத்தை வென்றார். ரயில்வேயின் நிதி (53.71 மீ.,), ஹரியானாவின் சன்யா யாதவ் (52.05 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். ரயில்வே அணியின் கவுதம், சர்வீசஸ் அணியின் ராம்பீர், மத்திய பிரதேசத்தின்தேவ் மீனா தலா 5.10 மீ., தாண்டி, ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.ரயில்வே அணியின் பைரபி ராய் (13.10 மீ.,) தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் பூர்வா சவந்த் (13.05 மீ.,), மத்திய பிரதேசத்தின் நிமிஷா (12.96 மீ.,) பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில்வெள்ளி, வெண்கலம் வென்றனர். ஹிமாச்சல பிரதேசத்தின் சீமா, இலக்கை 16 நிமி டம், 01.27 வினாடியில் கடந்து பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் தங்கத்தை கைப்பற்றினார்.அனைத்து இந்திய போலீஸ் அணியின் பிரின்ஸ் குமார் 14 நிமிடம், 06.57 வினாடியில் ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் கடந்துமுதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் தன்வார் (14:14.88), ரயில்வேயின்அபிஷேக்(14:19.16) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
சர்வதேச கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் கத்தாரில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 35 வது இடத்திலுள்ள இந்தியாவின் 'நம்பர்-1’ வீரர் அபே சிங், உலகின் 'நம்பர்-5' வீரர், முன்னாள் உலக சாம்பியன், எகிப்தின் கரிம் கவாத்தை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய அபே சிங், அடுத்த செட்டையும் 11-4 என எளிதாக வென்று வசப்படுத்தினார்.முடிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அபே சிங் 3-1 (11-6, 11-4, 1-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முன்னேறினார்.
துபாயில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் ,நேற்றிரவுஅரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும்மோதின. 41 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகள் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக மல்லுகட்டியதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. முதலில் பந்து வீச்சை 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்க வைத்தது. இத்தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியா 7 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று கோப்பையை முத்தமிட்டு இருக்கிறது. பாகிஸ்தானையும் 3 முறை போட்டுத் தாக்கி இருக்கிறது.இந்தியஅணி ஆசிய கோப்பையை வெல்வது இது 9-வது முறையாகும். இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.