'பிடே' பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப், ஜெர்மனியில் 5-6வது இடத்துக்கானபோட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 0-2 என, அமெரிக்காவின் ஹன்ஸ்நிமனிடம் தோல்வியடைந்தார். , ஒற்றையர் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் ,டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 2-6, 2-6 என, தென் கொரியாவின்ஹியோன் சுங்கிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் மற்றொரு போட்டியில் 6-3, 7-5 என, தென் கொரியாவின் உய்சுங் பார்க்கை வென்றார். ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் பெங்களூருவில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா 6-2, என, ரஷ்யாவின் கிறிஸ்டினா 2-6, 1-6 சிடோரோவாவிடம் தோல்வியடைந்தார். நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிதுருக்கியில், 17 வயதுக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் அணி 4-2 என ரஷ்யாவின் ஸ்பார்டக் மாஸ்கோ எப்.சி., கிளப் அணியை வென்றது.
. 12வது சீசன் ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில்,மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.லீக் போட்டியில் நேற்று, கோல்கட்டாவில் ஈஸ்ட் பெங்கால், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு யூசுப் எஸ்செஜ் ஜாரி (65,70வது நிமிடம்) 2 கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணிக்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) மிகுவல் பிகு வேரா ஒரு கோல் அடித்தார். வடகிழக்கு யுனைடெட் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மும்பையில் நடக்க வுள்ள லீக் போட்டியில்,பிப். 19ல் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன.
குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில், ஆதிக்கம் செலுத்தி வரும் இத்தாலி நட்சத்திரங்கள், இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என, 22 பதக்கம் வென்று., குளிர்காலஒலிம்பிக் வரலாற்றில் இத்தாலிக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கம். இத்தாலி இதற்கு முன்,1994ல் நார்வேயின் லில்லிஹாமர் நகரில் நடந்த 17வது சீசனில், 7 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என, 20 பதக்கம் கைப்பற்றியது .
டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ், சென்னையில் கலப்பு இரட்டையர் பைனலில் ,இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 0-3 (9-11, 2-11, 8-11) என, ருமேனியாவின் எட்வர்டு ஐயோனெஸ்கு, பெர்னாடெட் சோக்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. , 'பிரீஸ்டைல்' செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில், 5-8வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 3-1 என உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவை வென்றார். அமெரிக் காவின் ஹான்ஸ் நீமனை, 5-6வது இடத்துக்கான போட்டியில் அர்ஜுன், சந்திக்கிறார். சர்வதேச உள்ளரங்கு தடகளத்தின் குண்டு எறிதலில், அமெரிக்காவில்இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன், அதிகபட்சமாக 16.83 மீ., துாரம் எறிந்து முதலிடம்பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார்.
குளிர்காலஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில், ஆண்களுக்கான 'ஆல், பைன்' பனிச்சறுக்கு, 'ஜெயண்ட் ஸ்லாலோம்' பிரிவில் பிரேசிலின் லுாகாஸ் பின்ஹீரோ பிராத்தன் 25, இலக்கை 2 நிமிடம், 25.00 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, தென் அமெரிக்காவுக்கு 102 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில், கிடைத்த முதல் பதக்கம். ஒன்பதாவது முறையாக (1992-2026) குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பிரேசிலுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.
.ஜெர்மனியில் பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் சர்வதேச செஸ் கூட்ட மைப்பு சார்பில்,இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் நார்வே யின் கார்ல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் ஒவ்வொருவரும், மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோதினர். முதல் சுற் றில் ஜெர்மனியின் வின் சென்ட், 4வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவை வென்றார். 6வது சுற்றில் அர்ஜுன், கார்ல்சனை எதிர்கொண்டார். அர்ஜுன், 8வது நகர்த்தலில்முந்தினார். இவர், 28 நகர்த்தலில் வெற்றி பெற்றார். 7 சுற்று முடிவில்அர்ஜுன், 3.0 புள்ளியுடன் 6வது இடம் பெற, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 5 முதல் 8 வரையிலான இடத்தை பெற, அர்ஜுன், மீண்டும் ஜாவோகிரை சந் திக்க உள்ளார்.
வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில், ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', மலேசியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இருபிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ' பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின.“'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணி 18.5 ஓவரில் 93 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'ஏ' அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் இதுவரை விளையாடிய 2 போட்டியில், இந்தியா 'ஏ' அணி 2வது இடத்தில் உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று, சிட்னியில் முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணி 18 ஓவரில், 133 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி 4, ரேணுகா சிங், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 5.1 ஓவ ரில் 50/1 ரன் எடுத்திருந்த போது,தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.'டக்வொர்த்-லீவிஸ்' முறைப்படி இந்தியாவின் வெற்றிக்கு 5.1 ஓவரில், 30 ரன் தேவைப்பட்டது. ஆனால், கூடுதலாக 21 ரன் எடுத்திருந்த எடுத்திருந்த இந்தியாவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுஇந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் அருந்ததி ரெட்டி வென்றார்
கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ‘நடப்புசாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 175/7 ரன் எடுத்தது. பாகிஸ்தான் அணி, 18 ஓவரில் 114 ரன்னுக்கு தோல்வி அடைந்தது. ஆட்டநாயகன் விருதை இஷான் கிஷான் வென்றார். 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது நேபாள அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது, வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்து வெற்றி பெற்றது.ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் வென்றார். ஏற்கனவே ஸ்காட்லாந்து, இங்கிலாந்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ்,வெற்றியுடன் 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது.3ல் வரிசையாக தோற்ற நேபாள அணி, அடுத்தசுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.'டி-20' உலக கோப்பை தொட ருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று அமெரிக்கா, நமீபியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த அமெரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது. நமீபிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை அமெரிக்காவின் சஞ்சய் வென்றார்.
பாரா பாட்மின்டன் உலக சாம்பியன் ஷிப் தொடர்பஹ்ரைனில் ,ஆண்கள் ஒற்றையர் எஸ். எல்.3 பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், இந்தோனேஷியாவி்ன் அல் இம்ரானை எதிர்கொண்டார். இதில் பிரமோத், 21–12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தொடர்ந்து பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் ,4வது, மொத்தமாக 6வது தங்கம் (2009, 2015, 2019, 2022, 2024, 2026) வசப்படுத்திஉள்ளார்.