25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


விளையாட்டு (SPORTS)

Sep 24, 2025

உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்  இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் ஷீத்தல் தேவி.

உலக பாரா வில்வித்தை சாம் பியன்ஷிப்தென் கொரியாவின் குவான்ஜு நகரில்ஆண்கள் ‘ரீகர்வ்' போட்டியில் தகுதிச்சுற்று நடந்தன. இந்தியாவின் ஹர் விந்தர் சிங், 645 புள்ளி எடுத்து, 4வது இடம் பிடித்தார். மற்ற இந்தியவீரர்கள் சாஹில் 14 (633), தன்னா ராம் 30வது (617) இடம் பிடித்தனர்.இரட்டையரில் பூஜா, சரப்ஜித் ஜோடி, 4வது இடம் பெற்றது.இந்தியாவின் ஷீத்தல் தேவி பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில்,  687 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார்.பெண்கள் இரட்டையரில் ஷீத்தல், சரிதா ஜோடி 4வது இடம் பிடித்தது.சரிதாவுக்கு 12வது (666) இடம் கிடைத்தது. அடுத்து நடந்த பெண்கள் 7-1 என  ஒற்றையர் ('ரீகர்வ்) முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, போலந்தின் ஜோலண்டாவை வீழ்த்தினார்... 

Sep 24, 2025

கால்பந்து அரங்கில் சிறந்த வீராங்கனை  விருதுபெற்ற  ஸ்பெயினின் அய்டனா பொன்மதி.

 பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் கால்பந்தில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு, 1956 முதல் 'பாலன் டி ஆர்' விருது வழங்கப்படுகிறது. உலக கால்பந்து 'பிபா' தரவரிசையில் 'டாப்-100' பட்டியலில் உள்ள நாடுகளின் பத்திரிகையாளர்கள் ஓட்டுப்பதிவு தேர்வு செய்வர். அர்ஜென்டினாவின் மெஸ்சி அதிகபட்சம் 8 முறை, போர்ச்சுகலின் ரொனால்டோ 5 முறை இவ்விருது வென்றனர். 2025ம் ஆண்டின் சிறந்த வீரராக பிரான்சின், அவுஸ்மேன் டெம் பெலே தேர்வு செய்யப்பட்டார். கிளப் அரங்கில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் இவர், ரேமண்ட் கோபா, மிட்செல் பிளாட்டினி, ஜீன்-பியரே பாபின், ஜினடின்ஜிடேன், கரிம் பென்சிமாவுக்குப் பின், 'பாலன் டி ஆர்' விருது வென்ற 6வது பிரான்ஸ் வீரர் ஆனார். ஸ்பெயினின் அய்டனா பொன்மதி, சிறந்தவீராங்கனையாக ,தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ('ஹாட்ரிக்') தேர்வானார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா அணிபைனலுக்கு முன்னேற உதவினார்.சிறந்த வீராங்கனையாக ஐரோப்பிய கால்பந்து தொடரில்,ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

Sep 23, 2025

பிரைம் வாலிபால் லீக் (பி.வி. எல்.,) 4வது சீசன்

அக். 2 to 26   வரை  பிரைம் வாலிபால் லீக் (பி.வி. எல்.,) 4வது சீசன் ஐதராபாத்தில், கோவா கார்டியன்ஸ் அணி முதன்முறையாக விளையாடுகிறது.இந்த அணிக்கு, உரிமையாளராக ராஜு சேகுரி உள்ளார். இந்திய கிரிக்கெட்வீரர் கே.எல்.ராகுல், கோவா அணியின் இணை உரிமையாளரானார்."பிரைம் லீக் தொடர், இந்தியாவில் வாலிபால் போட்டிக்கு திருப்பு முனையானது. இத்தொடரின் மூலம் இப்போட்டி மீதான ஆர்வம் இளம் விளையாட்டு நட்சத்திரங்களிடம்  அதிகரிக்கும் என்றார். வாலிபால் விளை யாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என  ராகுல்கூறினார்.

Sep 23, 2025

“உலக கோப்பையை வெல்வோம்," என இந்திய வீராங்கனை ஸ்னே ராணா தெரிவித்துள்ளார்.

இந்தியா,இலங்கையில்ஐ.சி.சி. உலககோப்பை(50 ஓவர்),13வதுசீசன்(செப்.30நவ.2) நடக்கஉள்ளது..இந்தியா, ஆஸ்திரேலியா, உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. கவுகாத்தியில் நடக்கும், முதல் போட்டியில் இந்தியா ,இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய பெண்கள் அணி, இது வரை உலக கோப்பை வென்றதில்லை"இத்தொடர் சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம் ஸ்னேராணா என கூறினார்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இம்முறை கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு  என தெரிவித்துள்ளார்.

Sep 23, 2025

செப். 27-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்.

 செப். 27-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில், உயரம் தாண்டுதல் போட்டியில் ('டி64') இந்தியா சார்பில் பிரவீன் குமார் 22, பங்கேற்கிறார்.  ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் , வெள்ளிவென்ற இவர், உலக தடகளத்தில் 4வது முறையாக களமிறங்குகிறார். 2019ல் துபாயில் நடந்த உலக சாம் பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக விளையாடிய பிரவீன், 4வது இடம் பிடித்தார்.   கடந்த ஆண்டு காயத்தால் பதக்கத்தை தவறவிட்டேன். இம்முறை முழு உடற்தகுதியுடன் இருப்பதால் தங்கம் வென்று சாதிப்பேன் என நம்புகிறேன்," என்றார். கடினமாக பயிற்சி மேற்கொண்டால் 2.10 மீ.,உயரத்தை எட்டலாம் என்றார். 

Sep 22, 2025

உலக தடகள சாம்பியன்ஷிப்தொடரில் அமெரிக்க அணி தங்கம் வென்றது.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தபெண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் ஷா'காரி ரிச்சர்ட்சன்மெலிஸ்சா  உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 41.75 வினாடியில்கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை,  முறையே ஜமைக்கா (41.79 வினாடி), ஜெர்மனி (41.87) கைப்பற்றின.ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் நோவா லைஸ், கிறிஸ்டியன் கோல்மன், கென்னெத் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 37.29 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.இது நோவா லைஸ் வென்ற 2வது தங்கம். ஏற்கனவே 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். பெண்களுக்கான 4x400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் இசபெல்லா, லின்னா, ஆலியா பட்லர், சிட்னி மெக்லாக்லின் அடங்கிய அமெரிக்க அணி (3 நிமிடம், 16.61 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை முறையே ஜமைக்கா, நெதர்லாந்து வென்றன.ஆண்களுக்கான 4x400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் ,அமெரிக்க அணி (2 நிமிடம், 57.83 வினாடி) வெள்ளி வென்றது. போட்ஸ்வானா அணி (2 நிமிடம், 57.76 வினாடி) தங்கத்தை கைப்பற்றியது.இம்முறை 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என, 26 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது. 

Sep 22, 2025

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக் 'சாம்பியன்'

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவின் சியோல் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் இகாஸ்வியாடெக், ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா மோதினர்.முதல் செட்டை 1-6 என இழந்த ஸ்வியாடெக், 'டை பிரேக்கர்' வரை நீடித்த 2வது செட்டை 7-6 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஸ்வியாடெக் 7-5 என போராடி வென்றார். இரண்டு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்வியா டெக் 1-6, 7-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். 

Sep 22, 2025

ஆசிய ஜூனியர் (14 வயது) சாம்பியன்ஷிப் தொடர் பெண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜென்சி தீபக்பாய் 'சாம்பியன்'

ஆசிய ஜூனியர் (14 வயது) சாம்பியன்ஷிப் தொடர் பிலிப்பைன்ஸ்தலைநகர் மணிலாவில் ,பெண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜென்சி தீபக்பாய், தென் கொரியாவின்எரின்லிம்மை எதிர்கொண்டார். ஜென்சி, முதல் செட்டை 6-1 என எளிதாககைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தி, ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில்ஜென்சி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 

Sep 22, 2025

சீன மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடரில்  பைனலுக்கு முன்னேறிய இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி .

சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடரில் ஆண்கள்இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-14 என மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஜோடி, நடப்பு சீசனில் தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது.

Sep 22, 2025

17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய ஜூனியர் கால்பந்தில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா .

17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் இலங்கையின்கொழும்புவில் மொத்தம் 7 அணிகள் இரு பிரிவுகளாக  பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.இந்திய அணி 'பி' பிரிவில் மாலத்தீவு, பூடான் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 6-0 எனமாலத்தீவை வென்றது இந்தியா. இரண்டாவது போட்டியில், 17 வயதுக்குட்பட்ட அணிகள் தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள (தெற்காசிய அளவில்) இந்தியா,3வது இடத்திலுள்ள பூடானை சந்தித்தது. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதை யடுத்து 6 புள்ளியுடன், பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. 

1 2 ... 25 26 27 28 29 30 31 ... 94 95

AD's



More News