நான்கு, ஐந்து பேரிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி, நெய்யில் வதக்கி பாயாசத்தில் சேர்த்தால், பாயாசத்தின் சுவை அமிர்தம் போல இருக்கும்.
நான்கு, ஐந்து பேரிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி, நெய்யில் வதக்கி பாயாசத்தில் சேர்த்தால், பாயாசத்தின் சுவை அமிர்தம் போல இருக்கும்.
ரவையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரை பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.
கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும் , ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய் யலாம்.
ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருக்கும் காம்பு கிள்ளிய பச்சை மிளகாயில் கொஞ்சம் மஞ்சள் தூளை தூவி வைத்தால், நீண்ட நாட்களுக்கு பழுத்துபோகாமல் இருக்கும்.
வத்தல் குழம்பு செய்யும் போது அவரை, கத்தரிக்காய், கொத்தவரங்காய் வத்தல் ஆகியவற்றை 15 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும் மற்றும் சுவையும் அதிகரிக்கும்.
0
Leave a Reply