பால் பாயாசம் செய்யும் பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்து லேசாக வாட்டி எடுத்தால், தேங்காய் எளிதாக எடுக்க வரும்.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது
சாம்பார் பொடி அரைக்கும்போது அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது. சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை சரியாகிவிடும்..பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவை கூடும். வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்தால், சட்னி கசக்காமல் ருசிக்கும். உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது கடைசியாக2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
நமர்த்த பிஸ்கட்டை ஒன்றிரண்டாக பொடித்து, பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் ருசியர்க இருக்கும்.உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டித்தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.பருப்பு சாதத்திற்கு. பருப்பை வேக வைக்கும்போதே, முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும்போது, அதனுடன், உப்பு துாள் ஒரு தேக்கரண்டி, சூடான எண்ணெய்யும் கலந்து வைத்தால், நீண்ட நாட்களுக்கு, 'ப்ரெஷ்' ஆக இருக்கும்.துவரம்பருப்பை வேக வைக்கும் போது சிறிது தேங்காய் துண்டை நறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்.
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாலை2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால், சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி உப்பி வரும்.ஒரு கப் கெட்டி அவல்,2 கிண்ணம் பச்சரிசி, சிறிது உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து ஊற்றினால் சுவையான தோசை தயார்.மோரில் ஊறவைத்த வாழைப்பூவை சிறிது நெய்யில் வதக்கி, துவையல் செய்தால் ருசியாக இருக்கும்.வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டிவிட்டு, பிறகு தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.முருங்கைக்கீரையை சமைக்கும்போது சிறிதளவு,சர்க்கரையை கலந்து சமைத்தால் ,ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்
தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் அதில் உள்ள வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.பித்தளை செம்பு பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டு கரைத்த. கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பைக் கலந்து நன்றாக தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.வாணலியில் கறை போக சமையல் உப்பை போட்டு சூடு படுத்திவிட்டு பேப்பரால் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.பொரித்த அப்பளம் நமத்து விட்டால் கூட்டு செய்யும்போது நமத்த அப்பளத்தை சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு பாட்டு கலந்துவிடவும். கல இந்த அப்பளக்கூட்டு சுவையாக இருக்கும்.பருப்பு சாதத்திற்கு, பருப்பை வேக வைக்கும்போதே. முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி கற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் கரை ஒட்டாது.குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும். கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.
கடுகை வாங்கியதும் லேசாக வறுத்து ஆறியவுடன் டப்பாவில் போட்டுவிட்டு, பிறகு தாளித்தால் கடுகு வெடித்துச் சிதறாது.கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1மாதம் வரை கெட்டு போகாது.சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.'தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்துலேசாக வாட்டி எடுத்தால் தேங்காய் எளிதாக எடுக்க வரும்.பட்டாணி சூப் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து, அதில் சேர்த்து கொதிக்க வைத்தால் கெட்டியான சூப் தயார்.
பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு sugar சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் அப்படியே உப்பலாக இருக்கும்..கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்..பாகற்காயை நறுக்கி, உப்பு, தயிர் சேர்த்து நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக பிழிய வேண்டும். அதன்பிறகு பொரியல் செய்தால் பாகற்காயின் கசப்பே தெரியாது.மிகுந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.
சாம்பார் நல்ல கலரா வர ,நல்ல பழுத்த தக்காளி பழம்2எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து, சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும்,கலரும் அருமையாக இருக்கும்.குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.பப்பாளி காய் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்துவிட்டு, பிறகு அதை கேக், பன் போன்றவைகளில் சேர்த்து டூட்டி புருட்டி தயாரிக்கலாம்.சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து,சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.அடைக்கு அரைக்கும்போது மரவள்ளிக்கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கி போட்டு அரைக்கலாம். இவ்வாறு செய்தால் அடை மொறுமொறுவென்று இருக்கும்.
மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.சப்பாத்தி சாஃப்ட் ஆகா வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் எப்போதும் சூடாக இருக்கும்.பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, வெந்நீர் ஊற்றி ஒரே ஒரு சொட்டு சோடா உப்பை கலந்து பிசைந்தால் பூரி பெரிதாகவும், நன்கு உப்பியும் வரும்.