25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இரண்டாம் திருநாள் >>


சமையல் குறிப்பு

Feb 04, 2024

பித்தளை செம்பு பாத்திரங்கள் பளபளக்க......

தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் அதில் உள்ள வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.பித்தளை செம்பு பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டு கரைத்த. கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பைக் கலந்து நன்றாக தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.வாணலியில் கறை போக சமையல் உப்பை போட்டு சூடு படுத்திவிட்டு பேப்பரால் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.பொரித்த அப்பளம் நமத்து விட்டால் கூட்டு செய்யும்போது நமத்த அப்பளத்தை சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு பாட்டு கலந்துவிடவும். கல இந்த அப்பளக்கூட்டு சுவையாக இருக்கும்.பருப்பு சாதத்திற்கு, பருப்பை வேக வைக்கும்போதே. முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Feb 01, 2024

வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் கரை ஒட்டாது.

முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி கற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் கரை ஒட்டாது.குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும். கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

Jan 29, 2024

பட்டாணி சூப் கெட்டியாக வர

கடுகை வாங்கியதும் லேசாக வறுத்து ஆறியவுடன் டப்பாவில் போட்டுவிட்டு, பிறகு தாளித்தால் கடுகு வெடித்துச் சிதறாது.கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1மாதம் வரை கெட்டு போகாது.சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும்  வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.'தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்துலேசாக வாட்டி எடுத்தால் தேங்காய் எளிதாக எடுக்க வரும்.பட்டாணி சூப் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து, அதில் சேர்த்து கொதிக்க வைத்தால் கெட்டியான சூப் தயார். 

Jan 28, 2024

பூரி நீண்ட நேரம்  உப்பலாக இருக்க.....

பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு sugar சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் அப்படியே உப்பலாக இருக்கும்..கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்..பாகற்காயை நறுக்கி, உப்பு, தயிர் சேர்த்து நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக பிழிய வேண்டும். அதன்பிறகு பொரியல் செய்தால் பாகற்காயின் கசப்பே தெரியாது.மிகுந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.

Jan 25, 2024

குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.

சாம்பார் நல்ல கலரா வர ,நல்ல பழுத்த தக்காளி பழம்2எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து, சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும்,கலரும் அருமையாக இருக்கும்.குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால்  பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.பப்பாளி காய் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்துவிட்டு, பிறகு அதை கேக், பன் போன்றவைகளில் சேர்த்து டூட்டி புருட்டி தயாரிக்கலாம்.சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து,சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.அடைக்கு அரைக்கும்போது மரவள்ளிக்கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கி போட்டு அரைக்கலாம். இவ்வாறு செய்தால் அடை மொறுமொறுவென்று இருக்கும்.

Jan 24, 2024

சப்பாத்தி மாவு பிசையும்போது....

மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.சப்பாத்தி சாஃப்ட் ஆகா வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் எப்போதும் சூடாக இருக்கும்.பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, வெந்நீர் ஊற்றி ஒரே ஒரு சொட்டு சோடா உப்பை கலந்து பிசைந்தால் பூரி பெரிதாகவும், நன்கு உப்பியும் வரும்.

Jan 23, 2024

சேப்பங்கிழங்கு வறுவல் 

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி துாளை தூவினால், கரகரப்பாக, சுவையாக இருக்கும்.எலுமிச்சை சாதம் செய்யும்போது சிறிதளவு இஞ்சியை துருவி, பச்சை மிளகாயுடன் வாணலியில் வதக்கி போட்டால் மணம் சூப்பராக இருக்கும்.உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் பொடிமாஸ் செய்து இறக்கும்போது கடைசியாக இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.தேங்காய் சாதம் செய்வதற்கு சற்று முற்றிய தேங்காய் ஏற்றது. எண்ணெய் சிறிதளவு சேர்த்து தேங்காய்த் துருவலை வறுத்தால் போதும்.ரவா தோசை செய்யும்போது அரிசி மாவிற்கு பதில் தேவையான அளவு சாதத்தை மிக்ஸியில் குழைய அடித்து செய்யலாம். ரவா தோசை முறுகலாகவும் இருக்கும். அதன் சுவையும் நன்றாக இருக்கும்.

Jan 22, 2024

வெண்டைக்காய் பொரியல் ருசியாக இருக்க....

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது கடைசியாக கடலைமாவு அல்லது வேர்க்கடலை பொடி தூவி அடுப்பை குறைந்த தீயில் வைத்து. கிளறி இறக்கினால்| ருசியாக இருக்கும்.கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடையக்கூடிய தன்மை உடையது. எனவே கத்தரிக்காயை உப்பு மற்றும் மஞ்சள் தூவி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து  சேமித்து வைப்பது சிறந்தது.பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வர மிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.

Jan 18, 2024

ப்ரிட்ஜில் காய்கறி ஸ்டோர் செய்ய...

காலிபிளவர் வெட்டிய பிறகு காற்று புகாத டப்பாவிலும், ப்ரோக்கோலி என்றால் வலை போன்ற பையிலும், முட்டைக் கோசை நறுக்கிய பிறகு நெகிழிப் பையிலும் போட்டு சேமித்துவைப்பது நல்லது. இந்தக்காய்கறிகள் ஈரப்பதத்தை எளிதில் இழக்காது என்றாலும் அதிக உணர்திறன் கொண்டவை .எனவே இதனை இப்படியே வைத்தால் மறுநாள் வரை புதிது போல இருக்கும்.உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்ற வேர்ப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளை சேமித்து வைக்கும் பொழுது இதனை தண்ணீரில் போட்டு வைப்பது நல்லது. அப்பொழுதுதான் இதன் நிறம் மாறாமல் இருக்கும். நன்கு குளிர்ந்தபுதிய தண்ணீரில் இந்த காய்கறி களை போட்டு இறுக்கமாக மூடாமல் கொஞ்சம் காற்றோட்டமாக உள்ளபடி மூடி வைத்து விடுங்கள். மறுநாள் வரை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.கொத்தமல்லி, புதினா, கீரை போன்ற இலை வகைகளை குளிர் சாதன பெட்டியில் சேமித்து வைக்கும்பொழுது அதில் உள்ள அழுகிய இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் சேமித்து வைக்க வேண்டும்.இதனை காற்று புகாதவாறு சேமித்து வைப்பதை விட ஒரு காகித டிஷ்யூ கொண்டோ அல்லது மெல்லிய காட்டன் துணியை கொண்டு சுற்றி வைப்பது நல்லது. இதனை முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள்.

Jan 02, 2024

பால் பாயசம் செய்யும்போது பாதம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

.பால் பாயசம் செய்யும்போது பாதம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும். சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.சவ்சவ் ,பூசணி, கோஸ் போன்ற பொரித்த கூட்டு செய்யும் போது தண்ணீர் அதிகமாக இருந்தால், வறுத்து அரைத்த உளுந்து பொடி சேர்த்தாக் கெட்டிபடும் சுவையாகவும்இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News