முறுக்கு மொறு மொறுவென இருக்க......
தேன்குழல் முறுக்கு, சீடைக்கான மாவை வெண்ணீர் ஊற்றி பிசைந்தால் நன்கு மொறு மொறுவென இருக்கும்.
முட்டைகோஸை வேக வைக்கும்போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் கெட்ட வாடை இராது.
கருணைக்கிழங்கு ஒரு தேக்கரண்டி புளித்தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் காரல் தன்மை இராது.
அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
குருமாவில் தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
0
Leave a Reply