பட்டாணி சூப் கெட்டியாக வர
கடுகை வாங்கியதும் லேசாக வறுத்து ஆறியவுடன் டப்பாவில் போட்டுவிட்டு, பிறகு தாளித்தால் கடுகு வெடித்துச் சிதறாது.
கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1மாதம் வரை கெட்டு போகாது.
சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.'
தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்துலேசாக வாட்டி எடுத்தால் தேங்காய் எளிதாக எடுக்க வரும்.
பட்டாணி சூப் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து, அதில் சேர்த்து கொதிக்க வைத்தால் கெட்டியான சூப் தயார்.
0
Leave a Reply