உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள்.
கொளுத்தும் வெயிலில் வெளியே வரும் மக்கள் குளிர்பான கடைகளை நாடினாலும், உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு அதிகம் பருகுகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முக்கிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்கின்றனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்தால் பதநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.
இது குறித்து நுங்கு நுங்கு வியாபாரி கூறுகையில்: பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடும் வெயில் அதிகரித்து வரும் காலங்களில் பதநீர், நுங்கு விற்பனை அதிகமாக உள்ளது. தென்காசி, சுரண்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்..
அதேபோல 10 நுங்கு ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம்.தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வரு வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பதநீர், நுங்குவாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.
0
Leave a Reply