கடந்தவாரம் விஜய் தேவர கொண்டா, ராஷ் மிகா திருமணம் நடந்தது.நேற்றுஹைதராபாத்தில் வரவேற்புநடந்தது. திருமணத்திற்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சி போட்டோக்களை ராஷ்மிகா வெளியிட்டு, "விஜயும் நானும் ஒன்றாக நடனமாடிய அந்த இரவு, எங்கள் குடும்பங்கள், நண்பர்களின் அன்பால் சூழப்பட்டது" என தெரிவித்துள்ளார். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என கலை நிகழ்ச்சி போல் இது நடந்தது. இதனிடையே தெலுங்கானா, அச்சம்பேட்டையைச் சேர்ந்த 44 அரசுப் பள்ளி களில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் தருவதாக விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.
விக்னேஷ் வடிவேலு இயக்கும் ,சிறை படத்திற்கு பின் அக்ஷய் குமார் நடிக்கும் படத்திற்கு 'ராவடி'என பெயரிட்டு, அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பசில் ஜோசப்பும் நடிக்கிறார். பராசக்தி படத்தில் இவர் சிறப்பு ரோலில் நடித்திருந்தார். கல்லுாரி மாணவர்கள், விடுதி பின்னணியில் இப் படம் உருவாகிறது.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியாகி வர வேற்பை பெற்ற படம் ஹனுமன். இதே கூட்டணியுடன் இதன் இரண்டாம் பாகம் ஜெய் ஹனுமன் என்கிற பெயரில் உருவாகிறது. புதிதாக ரிஷப் ஷெட்டியும் இணைந்துள்ளார். இந்த படத்தின் துவக்க விழா கடவுள் ஆஞ்நேயர் பிறந்த ஊராக கருதப்படும் ஹம்பி யில் உள்ள அஞ்சனாத்திரியில் நடந்தது. ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
கமல் தயாரிப்பில் அமரன் படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 'தாய் கிழவி' என்ற படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இதற்கு 'சேயோன்' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கையில் அரிவாள், சுற்றிலும் மயில்கள் நிற்க கிராமத்து ஸ்டைலில் சிவகார்த்திகேயன் உள்ளார். . அக்டோபரில் படத்தை வெளியிட,இதில் நாயகியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பிலிம்பேர்விருதுகள். 70வதுவிருதுவழங்கும் விழாவில்தமிழ்மொழிபடங்களில்ராஜ்குமார்பெரியசாமிஇயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த 'அமரன்' படம், 'சிறந்த திரைப்படம், சிறந்தநடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசை அமைப் பாளர், சிறந்த பாடகர், பாடகி, ஒளிப் பதிவாளர்' என 7 விருதுகளை வென்றது.கொச்சியில் நடந்த 70வது பிலிம்பேர் விருதில் 'அமரன்' படத் திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார் சிவகார்த்திகேயன். விழாவில் பேசிய அவர், "13ஆண்டுகளுக்கு முன் பிலிம்பேர் விருதுக்கு தனுஷ் உடன் வந்தேன். சும்மா வா ஜாலியா போய்ட்டு வரலாம் என கூட்டிட்டு போனார். அப்போது 2வது வரிசையில் எனக்கு சீட் இருந்தது. இப்போது முன் வரிசையில் சீட்டு ஒதுக்கப் பட்டிருந்தது. இதைஅடையஎனக்கு 13 ஆண்டுகளானது" என்றார்.
மெய்யழகன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ,கேரள சுற்றுலாவுடன் இணைந்து 70வது பிலிம்பேர் விருதுகள், விழாவில் விருது (தமிழ்) கார்த்திக்கு வழங்கப்பட்டது.
ஜூட் ஆண்டனி இயக்கி, மோகன்லால் மகளான விஸ்மாயா 'தொடக்கம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஓணம் பண்டிகைக்கு படம் ஆக.,26 ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
.பிப்ரவரி 27ல்,ஏ படம், ஆழி, பேர்த் புளோர், தாய் கிழவி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் கணவன், மனைவியான சரத்குமார் (ஆழி), ராதிகா (தாய் கிழவி) ஆகியோரின் படங்கள் மோதுகின்றன.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல், அமிதாப் பச்சன், என பலர் நடித்து 2024ல் வெளியான படம் 'கல்கி 2898 ' . இந்திய அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் 2ம் பாகத்தில் சாய் பல்லவி இணைந்ததாக சொல்கின்றனர்.. அமிதாப், கமல் நடிக்கும் காட்சிகள் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் அபிஷேக் நமா இயக்கத்தில் உருவான 'நாகபந்தம்' படத்தின் டீசர் வெளியானது. ஆன்மிகம் அட்வென்சர் படமாக உருவாகி ,நடித்தவர்கள் வளர்ந்து வரும் நடிகர்கள். இருப்பினும் டீசருக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.