25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளித்திரை

Jun 11, 2026

அரசியலுக்கு வருகிறாரா ராகவா லாரன்ஸ்? - ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு.

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளதாகவும், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதுபற்றி லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவு ஜூன் 11ஆம் தேதி, காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வதந்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காததால், லாரன்ஸ் அரசியலுக்கு வருவது உறுதி தான் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Jun 04, 2026

24 மணிநேரத்தில் 36.7 மில்லியன் வியூஸ் புதிய சாதனை படைத்த ஜூனியர் என்.டி.ஆரின் 'டிராகன்'.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'டிராகன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, வெளியான 24 மணி நேரத்தில் 36.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிட சாதனை படைத்துள்ளது. 36 மில்லியன் வியூஸ்களுடன் 'டாக்சிக்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 2-ம் இடத்தில் உள்ளது.

Jun 04, 2026

பூச்சிக்கொல்லி மருந்து அபாயத்தைப் பேசும் காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி'.

சேட்டன் டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கதைகளத்தைக் கொண்டுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் நடக்கும் இப்படம் ஜூலை 24ல் இந்தி, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.

Jun 04, 2026

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் கிச்சா சுதீப்.

கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'பில்லா ரங்கா பாஷா' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு ஜானர்களில் கதைகளை உருவாக்கியுள்ள அவர், அதில் ஒன்றை இயக்கவுள்ளார். கடைசியாக 2014ல் 'மாணிக்யா' படத்தை இயக்கியவர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Jun 04, 2026

ஏழை மக்களுக்காக ரூ. 10 கோடி நன்கொடை அளித்த சோனு சூட்.

"தமிழக முதல்வர் விஜய் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் தமிழகம் ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ளதால், வாக்குறுதிகளை நிறைவேற்ற அவருக்கு உதவி தேவைப்படுகிறது. நாம் ஏழை மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும்" என்று கூறி, ஏழை மக்களுக்காக ரூ. 10 கோடியை சோனு சூட் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Jun 04, 2026

ஐதராபாத்தில் ரூ. 180 கோடியில் பிரமாண்ட பங்களா கட்டும் நடிகர் பிரபாஸ்.

நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே சுமார் ரூ.180 கோடி எனக் கூறப்படுகிறது. தியேட்டர், நீச்சல் குளம், ஜிம் எனப் பல சொகுசு வசதிகளுடன் உருவாகும் இந்த வீட்டின் மாதிரிப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jun 04, 2026

ஜூலை 31ல் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் 'சிக்மா' ரிலீஸ்.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஜூலை 31ல் படம் ரிலீஸாகவுள்ளது. சந்தீப் கிஷன் ஆக்‌ஷன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Jun 04, 2026

ஆலியாவின் ஆக்‌ஷன் மிரட்டல், வியந்து பாராட்டிய பாபி தியோல்.

ஆலியா பட், ஷர்வாரி நடிப்பில் ஜூலை 10ல் வெளியாகவுள்ள 'ஆல்பா' படத்தில் பாபி தியோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் குறித்துப் பேசிய அவர், "ஆலியா மிகக் கடின உழைப்பாளி. இதுவரை சண்டைக் காட்சிகளில் நடிக்காத அவர், இதில் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகத் தயாரான விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது" எனக் கூறியுள்ளார்.

May 28, 2026

'தாழ் திறவா'கேன்ஸ் திரைவிழாவில், படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

 “தாழ் திறவா”. பரணி சேகரன் இயக்க, ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடித்துள்ள, திகில் மற்றும் மர்மம் கலந்த கதையில், உருவாகி வரும் படம். ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே படத்தின் கதை. உலகளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணி நடக்கிறது.

May 28, 2026

இசைஞானி இளையராஜாவின் ‘சிம்பொனி’ இசை குறித்த சமீபத்திய முக்கியத் தகவல்கள்

இசைஞானி இளையராஜா தனது 50 ஆண்டுகால திரையுலகப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், தான் உருவாக்கிய முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான "வேலியண்ட்" (Valiant Symphony No. 1) என்ற படைப்பை லண்டனில் அரங்கேற்றினார்.லண்டன் 'ராயல் ஃபில்ஹார்மோனிக்' இசைக்குழுவுடன் இணைந்து முழுமையான மேற்கத்திய சிம்பொனியை கம்போஸ் செய்து, அங்கு நேரலையாக நிகழ்த்திய முதல் ஆசிய மற்றும் இந்தியத் திரை இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இதன் மூலம் அவர் படைத்தார்.லண்டனைத் தொடர்ந்து, இந்த பிரம்மாண்டமான 'வேலியண்ட் சிம்பொனி' (Valiant Symphony) நிகழ்ச்சி, சென்னையில் மே 30, 2026 அன்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மற்றும் லண்டன் சிம்பொனி நிகழ்ச்சிகளின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இளையராஜா தனது இரண்டாவது சிம்பொனி (Second Symphony) படைப்பிற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அத்துடன், மேற்கத்திய மற்றும் இந்திய நடன அசைவுகளுக்குப் பொருந்தும் வகையில் ‘சிம்போனிக் டான்சஸ்’ (Symphonic Dances) என்ற புதிய இசை முயற்சியிலும் அவர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இளையராஜாவின் இந்த அரிய சிம்பொனி சாதனையைப் பாராட்டி, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (Rajya Sabha) அவருக்குச் சிறப்புப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைச் சேவையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு ‘இளையராஜா பெயரில் விருது’ வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.82 வயதிலும் ஓயாமல் சிம்பொனி மற்றும் புதிய இசை ஆல்பங்களை உருவாக்கி வரும் இசைஞானியின் இந்த லேட்டஸ்ட் சாதனைகள் உலக அளவில் உள்ள தமிழ் இசை ரசிகர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 85 86

AD's



More News