ஜவான் படத்தை ஹிந்தியில், இயக்கி வெற்றி பெற்ற. அட்லி, அதன் பின் தமிழில், விஜய் நடிப்பில் இயக்கிய, தெறி படத்தை ஹிந்தியில், பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்த,. படம் தோல்வி அடைந்து விட்டது.அடுத்து, ஹிந்தி நடிகர், சாகித் கபூரை நாயகனாக வைத்து ஒர் ஹிந்தி படத்தை தயாரிக்கப் போகிறார். அட்லி.
மலையாளத்தில் மம்முட்டியை வைத்துஇயக்குனர் கவுதம் மேனன் தற்போது ' இயக்கிய 'டொமினிக்' படம் இந்த வாரம் வெளியாகிறது. கவுதம் மேனன் கூறுகையில், "தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றி மாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் நாயகனாக ரவி மோகன் நடிக்கபடத்தின் ஆரம்பகட்ட பணி கள் நடக்கின்றன.
திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக,. 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி இவர் முதன்முறையாக கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். நிஹாரிகா நவீன் நடிக்க, இளையராஜா இசைய மைத்துள்ளார். 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை இந்த குறும்படம் வென்றுள்ளது.
இன்றைய விவசாயி சந்திக்கும் பிரச்னைகளை சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக இப்படம் உரு வாகியுள்ளது" . விதார்த் நடிப்பில் வி.கஜேந்திரன் இயக்கியுள்ள படம் 'மருதம்'. ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். "இது விவசாயியின் வாழ்வியலை நிலத்தின் அவசியத்தை அழுத்தமாக பேசும் படைப்பு என்றார் கஜேந்திரன் .விவசாயம் ஆதி குடியின் முதல் தொழில். நிலத்திற்கும், மண்ணுக்கும், விவசாயிக்கும் இடை யிலான உறவு தான், மற்ற உறவுகளை விடவும் முதன்மையானது.
2025ல் முதல் வெள்ளிக்கிழமையான ஜன.3ல் ஏழு படங்கள் வெளிவந்தன. பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாட்களில் 7 படங்கள் வெளிவந்தன. ஜன.24ல் 'பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், மிஸ்டர் ஹவுஷ்கீப்பிங், பூர்வீகம், வல்லான்' ஆகிய 6 படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியரான பா.விஜய் இயக்கி உள்ள படம் 'அகத் தியா'. ஜீவா,அர்ஜுன், ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இப்போது இத்திரைப்படம் 2025, ஜனவரி 31ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
மும்பையின் முக்கிய இடங்களில் பாலிவுட்டின் சீனியர் ஹீரோ வான அமிதாப் பச்சனுக்கு சில வீடுகள் உள் ளன. அவற்றில் மும்பையின் ஓஷிவரா பகுதி யில் அமைந்துள்ள 'டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட்' ஒன்றை 83 கோடிக்கு விற்றுவிட்டார். 2021ல் ரூ.31 கோடிக்கு வாங்கிய அந்த இடம் இப்போது இவ்வளவு விலைக்கு விற்பனையாகி உள்ளது. இடம் 5795 சதுர அடி பில்ட் அப் ஏரியாவை கொண்ட, விசாலாமான மாடி மற்றும் ஆறு கார் பார்க்கிங் கொண்டது.
சுந்தர் சி இயக்கத்தில் ,தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் , ஏஆர் ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்க 2017ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறி விக்கப்பட்ட சரித்திரப் படம் 'சங்கமித்ரா'. நிதி பிரச்னை யால் 7 ஆண்டுகளாகியும் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது ஆண்டு அடுத்தாண்டு கொண்டாட. 'சங்கமித்ரா' படத்தை மீண்டும் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு,அதற்கான பணிகள் நடக்கின்றன.
அபிஷேக் நமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிக் கும் படம் 'நாகபந்தம்'. தெலுங்கில் உருவாகி பான் இந் தியா படமாக வெளியாகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, புரி ஜகநாதர் கோயில்களில் மறைந்துள்ள பொக்கிஷங்கள், 108 விஷ்ணு கோயில்களை சுற்றியுள்ள மர்மங்கள், இந்த புனித தலங்களை காக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாக வைத்து ரூ.100 கோடியில் இப்படம் உருவாகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர், தற்போது விஜய் சந்தர் அடுத்த படத்திற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலிடம் கதை கூறி யுள்ளார். மோகன்லாலுக்கும் கதை பிடித்து போன தால் அடுத்தடுத்த பணிகள் நடக்கின்றன.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழில் இந்தியன் 3, தெலுங்கில் கண்ணப்பா, ஹிந்தியில் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடிக்கும் இவர். இப்போது விவசாயம் மற்றும் பூச்சிக் கொல்லி மருத்து ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகும் 'தி இந்தியா ஸ்டோரி' என்ற புதிய ஹிந்தி படத்தில் நடிக்கிறார். ஷ்ரேயாஸ் தல்படே 3 ஹீரோவாக நடிக்க, சேத்தன் டிகே இயக்குகிறார்.