சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ்,.மலையாள திரையுலகில் இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் “ஆடு ஜீவிதம்”.உண்மையாக நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தை பிரபல இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து அமலா பால் ஜோடியாக நடித்திருந்தார்.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த" ஆடு ஜீவிதம்". திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. கண்டிப்பாக இப்படத்திற்காக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பிளஸ்ஸிக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறப்படுகிறது.இப்படம் வெளிவந்து சிலநாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் பலகோடிகளுக்கு வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது படத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரமுடியவில்லை - உணர்ச்சிவசப்பட்ட யோகி பாபுகேரளாவைச் சேர்ந்த நஜீப் வேலைக்காக அரபு நாடுக்குச் சென்று, அங்குள்ள முதலாளியால் ஏமாற்றப்பட்டு ஆடு மேய்க்கப் பணிக்கப்படுகிறார். பாலைவனத்தில் 700 ஆடுகளுடன் தன்னந்தனியாக வசிக்க நேர்கிறது. ஒருகட்டத்தில் தன்னையும் ஒரு ஆடாக கருதிக் கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிலைமை மோசமாகிறது.இந்த கடின காலத்தைத் தாண்டி எப்படி நஜீப் உயிர் பிழைத்தார் என்ற உண்மைச் சம்பவத்தை பென்யாமின் ஆடு ஜீவிதம் என்ற நாவலாக எழுத, அதனடிப்படையில் பிளெஸ்ஸி ஆடு ஜீவிதம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.14 வருட உழைப்பில் ஆடு ஜீவிதம் படம் உருவாகியிருக்கிறது. நஜீப்பாக பிருத்விராஜ் நடித்துள்ளார். நேற்று வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. படத்தை சிறப்புத் திரையிடலில் பார்த்த கமல், மணிரத்னம் படத்தையும், இயக்குநர் பிளெஸ்ஸியையும், பிருத்விராஜையும் மற்றுமுள்ள படக்குழுவினரையும் பாராட்டினர். யோகி பாபுவும் படத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.அவர் தனது எக்ஸ்தள பதிவில், “இன்னும் அதன் பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. வலிமிகுந்த இந்தப் பயணம், சினிமா விரும்பிகளுக்கு நல்ல ட்ரீட்டாக இருக்கும். சீட் நுனில் உட்கார வைத்த சர்வைவல் த்ரில்லர் மஞஞுமல் பாய்ஸ் போன்றதல்ல… அதற்கேயுரிய வேகத்தில் பயணிக்கும் ஒரு எமோஷனல் ட்ராமா, த கேட் லைஃப். இதன் உயிரே பிருத்விராஜ்தான். மம்முட்டி, மோகன்லாலுக்குப் பிறகு ஆடு ஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்பு இன்னும் பல வருடங்களுக்கு நினைவுகூரப்படும். உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சல்யூட்…” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறியுள்ளார். ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் ஆடு ஜீவிதம் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்து வருகிறது.
ரஜினிகாந்த் முதல் முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் “தலைவர்171.”இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின்First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், டைட்டில் டீசர் ஏப்ரல்22ஆம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கம் போல் லோகேஷ் ஸ்டைலில் மாஸான டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கின்றனர்.இப்படத்தில் இதுவரை பார்க்காத ரஜினியை நாம் அனைவரும் பார்ப்போம் என்றும், அதற்கான வேலைகள் நடந்து வருகிறார் என்றும் லோகேஷ் கூறியிருந்தார்.இந்த நிலையில்," தலைவர்171 "படத்தின் தலைப்பு இதுதான் என கூறி செய்தி ஒன்று உலா வருகிறது. அதன்படி, ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்திற்கு 'Eagle' என தலைப்பு வைத்துள்ளார்களாம்.Eagle என தலைப்பு இருப்பதால் இதுLCUவில் இணையுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. ஏப்ரல் 22 வரை பொறுத்திருந்து பார்ப்போம்,
மலையாள சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அப்படி தான் எனலாம்.தமிழில் இருவர், உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் போன்ற படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். அதிலும் அண்மையில் நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் இவர் தொடர்ந்து நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ப்ருத்விராஜ் இயக்கத்தில் “எம்புரான்” படத்தில் நடித்து வருகிறார், லூசிஃபர் படத்தில் இரண்டாம் பாகமாக உருவாக்கும் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.நடிகராக மட்டுமில்லாமல் சொந்த தொழிலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமா திரையரங்கம், கல்வி நிறுவனங்கள், உணவகம் உள்பட பலவற்றை கவனித்து வருகிறார்.நடிப்பை தாண்டி சின்னத்திரையில் தொகுப்பாளராக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இவர் ரூ.18 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.சினிமா, சொந்த தொழில் என சம்பாதிக்கும் மோகன்லால் முழு சொத்து மதிப்பு ரூ. 450 கோடி வரை இருக்கலாம்..
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து.கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ ஷங்கர்.இவரது மகள் இந்திரஜா ஷங்கர், விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமண கொண்டாட்டம் நடந்து வருகிறது. பல கோடி செலவில் தனது மகளின் திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார் ரோபோ ஷங்கர்.இந்திரஜா தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமண ரிசப்ஷன் மார்ச்23, நடந்தது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் நடிகர் சூரியும் மணமக்களை வாழ்த்தி பேசினார்.மணமக்களுக்கு அறிவுரைகள் கூறிய சூரி, மேடைக்கு வந்ததுமே கவரில் பணக்கட்டுடன் மொய் வைத்திருக்கிறார்.அதை வாங்கிய ரோபோ சங்கர் ரொம்ப வெயிட்டா இருக்கே என ரியாக்ட் செய்தது அங்கிருந்த பிரபலங்களையும் சொந்தக்காரர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது..
உலகநாயகன்கமல்ஹாசன் நடிப்பில் 2022-ம் ஆண்டுவெளியான விக்ரம்படத்தை அடுத்து, இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் தக்லைஃப் ஆகியபடங்கள் தயாராகிவருகின்றன. நடிகர்கமல்ஹாசன் அரசியலில்ஈடுபட்டுவரும் அதேநேரத்தில் சினிமாவிலும்கவனம் செலுத்திவருகிறார். கமல்ஹாசன்இந்தியன்2 படத்தின்போஸ்ட் புரொடக்ஷன்பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியன்3 படத்தின் படப்பிடிப்புநிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தியன்3 படத்தின் போஸ்ட்புரொடக்ஷன்வேலைகளைத் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.இயக்குனர்மணிரத்னம் இயக்கத்தில்,‘தக் லைஃப்’படத்தில் நடிக்ககமல்ஹாசன் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். இந்தபடம் பற்றிகமல்ஹாசன் பேசுகையில்,“மணிரத்னத்தின்‘தக்லைஃப்’ படப்பிடிப்புதேர்தல் பிரச்சாரம்முடிந்தவுடன் விரைவில்தொடங்கும். மேலும், கல்கி 2898 கி.பிஎன்ற படத்தில்கௌரவத் தோற்றத்தில்நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.இயக்குனர்ஷங்கர் இயக்கத்தில்கமல்ஹாசன் நடிப்பில்,1996ம் ஆண்டுவெளியான இந்தியன்திரைப்படம் மாபெரும்வெற்றி பெற்றது.தற்போது இந்தியன்2 படத்தில் கமல்ஹாசன்நடித்துள்ளார். இந்தபடத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியாபவானி சங்கர்,காஜல் அகர்வால்,சித்தார்த், ரகுல்ப்ரீத் சிங்,நெடுமுடி வேணு,விவேக், காளிதாஸ்ஜெயராம் உள்ளிட்டபலர் நடித்துள்ளனர்.
மஞ்சுமெல் பாய்ஸ்' கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது சென்னை, இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த22ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலக முழுவதும் ரூ.175 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் மலையாள திரைப்படத்துறையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ். படைத்திருக்கிறது .
குமாரி ருக்மணி முப்பதுகளின் இறுதி முதல் எழுபதுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவில் நடித்தவர்.குமாரி ருக்மணியின் தாய் ஜானகியும் நடிகைதான். பூர்வீகம் தஞ்சாவூர். ருக்மணியின் சின்ன வயதிலேயே அவர்கள் சென்னைக்கு குடியேறியிருந்தனர். ஹரிச்சந்திரா படத்தில்- பால்யகால லோகிதாசனாக அறிமுகப்படுத்தினர் பிறகு சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம், ரிஷ்யசிருங்கர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் ஏவிஎம்மின் ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். 1946 இல் ஒய்.வி ராவ் தயாரித்து, இயக்கி, நடித்த படத்தில் ருக்மணி அவரது ஜோடியாக நடித்தார். திருமணத்துக்குப் பிறகும் ருக்மணி தொடர்ந்து நடித்தார். எம்ஜிஆரின் தலைவன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மணிவண்ணனின் அம்மாவாக சின்ன வேடத்தில் தோன்றியிருப்பார். ருக்மணி, ஒய்.வி.ராவின் மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. அம்மாவை விட சினிமாவில் பேரும் புகழும் மகளுக்கு கிடைத்தன. சவாலான வேடங்களில் நடித்தார். அவரதுபாட்டி ஜானகியும் ஒரு நடிகை.அந்த வகையில் லட்சுமி அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகை. லட்சுமியின்'மகள் ஐஸ்வர்யாவும் நடிகை. அவர் நான்காவது தலைமுறை. அம்மா லட்சுமி, பாட்டி ருக்மணியின் அர்ப்பணிப்பு ஐஸ்வர்யாவிடம் இருந்திருந்தால் இன்னும் மேம்பட்ட நடிகையாக அறியப்பட்டிருப்பார். நான்கு தலைமுறை கலைக்குடும்பம்,
கந்தன் கருணை படத்தின் மேக்கப் டெஸ்டுக்கு நடிகர் சிவகுமார் சென்றிருந்த நேரம், வேறொருவரும் வந்திருந்தார். அவர் பெயரும் சிவகுமார்.தமிழ் சினிமாவில் பெயர் குழப்பம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது இந்த இரண்டாவது சிவகுமாரின் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானவர்.அவரை சந்திக்கச் சென்ற போது சிவகுமாரையும் அழைத்துச் சென்றுள்ளார். மேக்கப் டெஸ்ட் விஷயத்தை கலைஞரிடம் நண்பர் கூறியுள்ளார். உடனே கலைஞர் கருணாநிதி படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து, சிவகுமார் நம்ம பையன், அவனுக்கே வேடத்தை கொடுத்துவிடுங்கள் என்றிருக்கிறார்.ஆனால், வாய்ப்பு இந்த இரண்டாவது சிவகுமாருக்கு கிடைக்கவில்லை. முதல் சிவகுமாருக்குதான் கிடைத்தது. கலைஞர் சிவகுமார் என்றுதான் சொன்னார், எந்த சிவகுமார் என்று சொல்லவில்லை. இந்த பெயர் குழப்பத்திற்குப் பிறகு இரண்டாவது சிவகுமாரும் தனது பெயரை விஜயகுமார் என்று மாற்றிக் கொண்டார். நாட்டாமை விஜயகுமார் தான் அவர்.
ரம்யா கிருஷ்ணன்“வெள்ளை மனசு” என்ற திரைப்படத்தின் மூலம்13 வயதில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக குணச்சித்திர நடிகையாக கோலோச்சி வருகிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்திலும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். நடித்தால் ஹீரோயின் ஆகதான் நடிப்பேன் என்று இல்லாமல் வாய்ப்பு குறைந்த சமயத்தில் குணசித்திர கதாபாத்திரம்,வில்லி, ஐட்டம் டான்ஸ் என அனைத்திலும் கட்டம் கட்டினார் நம்ம நீலாம்பரி. தமிழ் சினிமாவில் இவருக்கு ரீ என்ட்ரி கொடுத்தது என்றால் கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த நீலாம்பரி தான், இதற்குப் பின் இவரது மார்க்கெட் எகிறியது. அம்மனாக நடித்த அதே நீலாம்பரி தான் ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களை பற்ற வைத்தார்.ட்ரெடிஷனல் வெர்சஸ் மார்டன் என எந்த வகையான ஆடையானாலும் நமது ராஜமாதாவிற்கு பக்காவாக பொருந்தி விடும். இவரது டைம் பீரியடில் வந்த நடிகைகள் மூட்டை முடிச்சை கட்டிவிட, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இன்று3 முதல்4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் ரம்யா கிருஷ்ணன். 53 வயசாகியும் இன்றுவரை சினிமாவில் ஏ கிரேட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பும் இவர்68 லட்சம் மதிப்புடைய ஆடி,டொயோட்டோ, இன்னோவா என பலவகையான சொகுசு கார்களை தனது வீட்டில் அடுக்கி வைத்துள்ளார். தமிழகத்தையே ஆட்டி படைத்த நீலாம்பரிக்கு ஆடம்பர சொகுசு வீடுகள் தமிழக மற்றும் ஆந்திராவில் பல உள்ளது. இதன் மதிப்போ ஒவ்வொன்றும் ஏழு கோடிக்கும் மேல். சீரியல், சினிமா, ரியாலிட்டி ஷோ என எதையும் விட்டு வைக்காத ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு மட்டுமே கிட்டதட்ட80 கோடியிலிருந்து100 கோடி வரை இருக்கும். பாகுபலி ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் கம்பீரமான தோற்றம் யாராலும் மறக்க முடியாது.
சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்கள் ரசிகர்களை வசியம் பண்ணும் அளவிற்கு ஹேண்ட்ஸம் லுக் உடன் சொக்க வைத்து இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் நடித்த காதல் ரொமான்டிக் படங்கள் என்றால் விரும்பி பார்க்கும் அளவிற்கு சில படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி அழகாக இருந்தாலும் அவர்கள் எந்த கிசுகிசுவிலும் மாட்டாமல் கண்ணியமாக இருந்திருக்கிறார்கள். தமிழில் ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் சக்கரை கதாபாத்திரத்தில் அறிமுகமானார்வினித். அதன் பிறகு ஜென்டில்மேன், ஜாதிமல்லி, மே மாதம், சக்தி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி போன்ற படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். அப்படிப்பட்ட இவரை பார்க்கும் பொழுது ஆர்ப்பாட்டமே இல்லாத நடிகராக கொள்ளை அழகுடன் இளசுகளை கவர்ந்திருக்கிறார்.ஆரம்பத்தில் நடித்த படங்களான அலைபாயுதே, என்னவளே, மின்னலே, டும் டும் டும், ரன் போன்ற அனைத்து படங்களும் காதல் மற்றும் ரொமாண்டிக் ஹீரோ, நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திஇளசுகளின் மனதை கொள்ளையடிக்க வைத்தவர் மாதவன். அதுவும் இவர் காதல் ப்ரபோஸ் பண்ணும் விதம்தான் இப்பொழுது வரை பல இளைஞர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆனாலும் இவர் மீது இதுவரை எந்தவித கிசுகிசுவும் வெளிவந்தது இல்லை. சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகும், பேசினால் கண்ணிமைக்காமல் பார்க்கும் அளவிற்கு ஹேண்ட்ஸம்ஹீரோவாக ஜொலித்திருக்கிறார்அருண் விஜய். அதுவும் இவர் முக்கால்வாசி நடித்த படங்கள் அனைத்துமே காதல் சம்பந்தப்பட்ட படங்கள் தான். அந்த வகையில் இவரை ஒரு காதல் ஹீரோ என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் மீது இப்பொழுது வரை எந்தவித கிசுகிசுமே வந்ததில்லை. அந்த அளவிற்கு ஒரு கண்ணியமான ஹீரோவாக இருக்கிறார்.மாப்பிள்ளை யார் மாதிரி வேண்டுமென்று கேட்டால் அரவிந்த்சாமி மாதிரி தான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு கொள்ள அழகுடன் வசீகரமான தோற்றத்துடன் இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த சமயத்தில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார். பெண் ரசிகர்கள் அவ்வளவு இருந்தாலும் அதை பெருசாக அலட்டிக்காமல் கமுகமாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.ஷாம்: வசியம் பண்ணும் அளவிற்கு கண்ணாலேயே பேசி கவரக்கூடிய ஹீரோவாக ஜொலித்தார். “12B ” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து காதல் படங்களை நடித்து வந்தார். ஆனாலும் இவருக்கு பெருசாக பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மறுபடியும் ரீ என்டரி கொடுக்கும் விதமாக வாரிசு படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.