உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ தொடர் துபாயில் நடக்கிறது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்42/44/64 பிரிவில் இந்தியா சார்பில் சுமித் அன்டில்துபாயில் பங்கேற்றார். இவர் அதிகபட்சம் 68.26 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார்.
இந்தியாவின் பாக்யஸ்ரீ ,பெண்களுக்கான எப் 33/34 பிரிவு ஈட்டி எறிதலில் (14.13 மீ.,) தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் ரிங்கு ஹூடா (59.46 மீ.னா), எப் 46 பிரிவில் தங்கம் பெற்றார். .
பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் (41.64 மீ.,) தன் பங்கிற்கு, தங்கம் கைப்பற்றினார்.
இந்தியாவின் குருபாஸ்கர சேதுபதி எப் 42 பிரிவில், 53.66 மீ., துாரம் ஈட்டி எறிய, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இந்தியாவின் திலிப் காவித், ஆண்களுக்கான 100 மீ., டி 46 பிரிவு ஓட்டத்தில் 10.94 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
0
Leave a Reply