25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஒருநாள் கிரிக்கெட் தொடர்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒருநாள் கிரிக்கெட் தொடர்,

இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 'ஏ' அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இலங்கை 'ஏ' அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு இலங்கை வீரர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை 'ஏ' அணி தொடரில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News