கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக வீரர்.
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம் மற்றும் தோளில் குண்டடி பட்ட நிலையிலும் பின்வாங்காமல் போராடி தீவிரவாதியை வீழ்த்திய தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், தனது அபார துணிச்சலுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ராவால் கௌரவிக்கப்பட்டார்.
உயிரை விட கடமையை உயர்வாகக் கருதிய அவரது வீரச் செயல் நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய், கீர்த்தி சக்ரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்திற்கு ₹48 லட்சம், வழங்கி கௌரவித்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஊக்குவித்து கௌரவிப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
0
Leave a Reply