25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தேன்கனிக்கோட்டை லட்சுமி நரசிம்மர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேன்கனிக்கோட்டை லட்சுமி நரசிம்மர்.

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஒசூரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை.இங்கு கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது. இது ஒரு நாக தோஷ பரிகார தலமாகும். "கவி" என்றால் கன்னட மொழியில் 'குகை' என்று பொருள். இது ஒரு குகைக் கோவில் என்பதால், மேல் கூரை மிகவும் தாழ்வாக இருக்கும். எனவே பக்தர்கள் இறைவன் முன் உட்கார்ந்தபடிதான் பிரார்த்தனை செய்ய முடியும். இந்தக் கோவில் ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இக்கோவில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.

சில படையெடுப்பின் காரணமாக, இந்த ஆலயமும், அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளும் சிதிலமடைந்தன. இதனால் கோவிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டன. பல ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒரு நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று இந்தக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. பக்தர்களின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளில் இக் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சாலை வசதி இல்லாததாலும், விலங்குகள் அச்சுறுத்தல் காரணமாகவும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்திருந்தது. ஆனால் தற்போது சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News