25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

Jan 18, 2023

இனி ஒரு உயிர் போகக் கூடாது அஜித், விஜய் எடுத்த முடிவு.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான தல, தளபதி, துணிவு, வாரிசு படங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ பார்ப்பதற்கு அளவுக்கு அதிகமாகவே கொண்டாடி, அடிதடி, கை, கால் ஒடித்துக் கொண்டு, சிலர் உயிரையே விட்டள்ளனர். இவை மனித சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விஷயமே இல்லை. காசு வாங்கி நடிப்பவர்கள் ஹாயாக இருக்க ,காசு கொடுத்து உயிரை பணயம் வைக்கும் ரசிகர்களை, எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அஜித்தும், விஜய்யும் ரசிகர்களின் இந்த விபரீத விளையாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ,இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று முடிவு செய்து சிறப்புக் காட்சிகளை வெளியிடக் கூடாது, என்று முடிவு எடுத்துள்ளனர்.இந்த அறிவிப்பால் ரசிகர்களும், பட விநியோகிஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.எங்களுக்கு சோறு போடுங்க , எங்களை தலையில் தூக்கி வச்சு ஏன்  கொண்டாடுகிறீர்கள் ? என்று நடிகர் சத்யராஜ் கூறினார். சினிமாவுக்கு ஏன் இவ்வளவு செலவையும், நேரத்தையும் வீணாக்குகறீர்கள் என்று சீமான் கூறினார். சந்தோஷமாக கொண்டாடுங்கள். உயிரை விடாதீர்கள் என்று விஜய், அஜித் கூறினார்கள் எங்களுக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் அமைதியாகக் கொண்டாடுங்கள் என்று கூறுகின்றனர்.

Jan 12, 2023

‘ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப்' விருதை வென்றது

முதல் முறையாக இந்திய திரைப்படம் மதிப்புமிக்க இந்த விருதை வென்றது. திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான ஆர். ஆர்.ஆர்., திரைப்படம் சர்வதேச அளவில் வெற்றி பெற்றது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற் றுள்ளது.இந்நிலையில் அமெரிக்கா வின்'ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம்' ஆண்டுதோறும் அளிக்கும் கவுரமிக்க கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர்.,திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பாடலுக்கு  இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ், பாடல் வரிகளை எழுத, கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் பாடியுள்ளனர். நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., நடனமாடி உள்ளனர். ப்ரேம் ரக் ஷித் என்பவர் நடனம் அமைத்துள்ளார்.. நாட்டு நாட்டு... பாடல் விருதை வென்றது. படக்குழுவினர் ஆர்ப்பரிக்க இசையமைப்பாளர் கீரவாணி மேடை ஏறி விருதை பெற்றுக் கொண்டார். 'பாடலை இசையமைத்தவர் இயக்கியவர் நடனம் அமைத்தவர் நடித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது' என, குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.

Jan 11, 2023

அஜித்தின் துணிவு,விஜய்யின் வாரிசு

அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் 'ஜில்லா' படங்கள்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2014 . ல் வெளியானது  9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் துணிவு,விஜய்யின் வாரிசு  இருவரின் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜன.,11) அதிகாலையிலேயே அஜித்தின் துணிவு' படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியானதுஇயக்குனர் எச்.வினோத் - நடிகர் அஜித்குமார் கூட்டணியில்வந்துள்ள துணிவு படம் நடுஇரவு 1 மணிக்கும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் , உலகம் முழுவதிலும் உள்ள திரையறங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் முதல் காட்சியை கண்ட அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்

Jan 11, 2023

ஆஸ்கர் விருது 

ஆர்.ஆர்.ஆர். படம்95வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானது. இருப்பினும்,  ஆர்.ஆர்.ஆர். படக்குழுவின் தனிப்பட்ட முயற்சியில்15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்தனர். ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில்    'நாட்டு நாட்டு' பாடல் நாமினேஷனுக்கான  முந்தைய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளதுஇப்படம் பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு முக்கியமான சில விருதுகளையும் வாங்கியுள்ளது. நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ராஜமௌலி வாங்கியுள்ளார். மேலும் ஆஸ்கருக்கு இணையாக திரைத்துறையில் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு, ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படம் தேர்வானதுகோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரில் உலகின் மிகப்பெரிய      ஐமேக்ஸ் திரையரங்கில்‘ஆர்ஆர்ஆர்’ படம் திரையிடப்பட்டது.இந்தத் திரையிடலில்  ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தத் திரையிடலுக்கான டிக்கெட்டுகள் வெறும்98 வினாடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டது.. இதற்கு முன் எந்த ஒரு இந்தியத் திரைப்படத்திற்கும் இது போல் நடந்ததில்லை என அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  

Jan 04, 2023

கமல்ஹாசனின் 234 வது படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த 'விக்ரம்' படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து,. மணிரத்னம்- கமல்ஹாசன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1987ல் வெளியான'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. கமல்ஹாசனின்234வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான்  இசையமைக்கிறார். 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Dec 14, 2022

லத்தி திரைப்பட டிரெய்லர்

டிசம்பர் 22ம் தேதி வெளிவர இருக்கும் விஷாலின் லத்தி திரைப்படம் திருச்சி எல்.ஏ சினிமாஸ்   திரையரங்கில்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.இன்று படத்தின் நாயகன் நடிகர் விஷால் உள்ளிட்ட திரைப்பட குழுவினர்கலந்துகொண்டனர் . திரையரங்கில் ரசிகர்களிடம் பேசிய விஷால் “லத்தி படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து1 ரூபாய் விவசாயிகளுக்கு தரப்படும்” என அறிவித்துள்ளார் .திருச்சியில் விஷாலின் வருகையை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பெருமளவு போலீசாரும் குவிக்கப்பட்டனர். ரசிகர்கள்  முண்டியடித்து விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ,செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Dec 10, 2022

"அவதார் தி வேவ் ஆஃப் வாட்டர்" 

அவதார் - 2 திரைப்படம் வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது.பெரும்பாலான படங்களை விட மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு டிசம்பர் 16 முதல்ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில்"அவதார் தி வேவ் ஆஃப் வாட்டர்" வெளியாகிறது. இந்தியாவில் அதி வேக முன்பதிவு கண்டுள்ளது இப்படம். 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று இந்திய பாக்ஸ் ஆபிஸ் தெரிவித்துள்ளது. தற்போது அவதார்-2 சீனாவில் களமிறங்குகிறது.சீனாவின் திரையரங்குகளில் வெறும் 35 சதவீதம் மட்டுமே முழுமையாக திறந்திருந்தன.சமீபத்திய தளர்வுக்கு பிறகு, நிறைய திரையரங்குகளில் முழு திறனுடன் வெளியாகுமென அறிவித்துள்ளனர். அவதார் 2 வெளியாக சில வாரங்கள் இருக்கும் நிலையில் இதுவரை சீனாவில் ரசிகர்கள் மொத்தம் 1 கோடி டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். 

Dec 03, 2022

'காந்தாரா'

கேஜிஎப் படத்தின் முதல் பாகம் வரும் வரையில் தான்அதிகம் கவனிக்கப்படாத திரையுலகமாக கன்னடத் திரையுலகம்இந்தியத் திரையுலகத்தில் இருந்து வந்தது. அதன்பின் கன்னட சினிமாவை பலரும் கவனிக்க ஆரம்பித்தனர். இந்த ஆண்டில் வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலைக் கடந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.அதற்கடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கன்னடம் படமான காந்தாரா படமும் வசூல் சாதனையைப் புரிந்துள்ளது. மொத்தமாக400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் கேஜிஎப்2 வசூலை முந்தியதாக கன்னட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.'கேஜிஎப்2' வசூலித்த160 கோடி தான் இதுவரையில் கர்நாடகாவில் ஒரு கன்னடப் படத்திற்கான அதிக வசூலாக இருந்துள்ளது. அதை'காந்தாரா'170 கோடி வசூலித்து முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளதாம் மற்ற தென்னிந்திய ஹிந்தி மொழிப் படங்களை விடவும் 'கேஜிஎப் 2, காந்தாரா படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூலைக் குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nov 08, 2022

மயோசிடிஸ் அரியவகை நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னணி நடிகை சமந்தா

 நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் . காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களைமுடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார். தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்.அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் எடுத்த புகைப்படம் மூலம் தெரிவித்து ஷாக்கொடுத்தார். பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சமந்தாவின்முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி கூட சமந்தாவுக்கு ஆறுதல் கூறி கருத்தினைபகிர்ந்திருந்தார். 

Nov 05, 2022

வசூலில் நம்பர் ஒன் ஆக காந்தாரா கன்னட திரைப்படம்

கே ஜி எஃப்’ திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனமான, ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்து ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த படம் ஸ்லோ பிக்கப் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி இன்று நம்பர் ஒன் ஆக இருக்கிறது.  இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான  படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பரபரப்பை ஏற்படுத்தியது..பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் போதே, பான் இந்தியா மூவியாக  காந்தாராசெப்டம்பர்30ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. ஆனால் காந்தாரா கன்னடத்தில் கிடைத்த ரீச்சுக்கு பிறகே, மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ,ரிலீஸ் ஆனது. .காந்தாரா பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரிலீஸ் ஆகி இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் இதுவரை தெலுங்கில் 30 கோடியும், ஹிந்தியில்31 கோடியும் வசூலித்திருக்கிறது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.இப்போது பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்து இருக்கிறது.  

1 2 ... 17 18 19 20 21 22 23 24 25 26

AD's



More News