தாயை இழந்த இரண்டு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப்போலப் பராமரித்து வளர்த்த தென்னிந்தியாவின் முதல் தம்பதியைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான், இயக்குநர் கார்த்திகி கான்சால்வஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள "The Elephant Whisperers' ஆவணப்படம். இந்தப் படம் இன்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும் படத்துக்கான விருதினை வென்றிருக்கிறது. காட்டின்பேரழகைப்படம்பிடிக்கும்ட்ரோன்காட்சிகள்,நம்கண்களைஅங்குமிங்கும்சுழலவிடாமல்கட்டிப்போட்டுவிடுகின்றன.பொம்மன் செல்லமாக அழைத்ததும் ரகு தனது குடிசையிலிருந்து வந்து குளிப்பது, அவரோடு ஃபுட்பால் விளையாடுவது, மற்றொரு யானை புல் சாப்பிடுவதைப் பார்த்து அப்படியே தானும் சாப்பிடுவது, ஸ்ட்ரா போட்டு ஜூஸ் குடிப்பது என ரகுவின் குறும்புகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். பெற்ற பிள்ளையைப்போல் வளர்த்துவிட்டு ரகுவை முகாமில் விடவேண்டும் என்ற சூழல் வரும்போது, இதயத்தைக் கனக்கவைத்துவிடுகிறது அந்த காட்சி, அதுவும், ரகு பிரியும்போது அம்முக்குட்டியின் கதறல்... ரகு திரும்ப ஓடிவருவது எல்லாமே. சகோதரத்துவ சென்டிமெண்ட காட்டின் பேரழகையும் மலையில் தேன் எடுக்கும் காட்சியையும் அப்படியே டெம்பிடித்திருக்கிறார்கள்தென்னிந்தியாவிலேயே, தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளை வளர்க்கும் தம்பதி என்ற பெருமையை அடைந்த பொம்மன் - பெல்லியின் பாசம் நிறைந்த வாழ்வியல், விலங்குகள் மீதான நேசிப்பை அதிகப்படுத்துகிறது.
உலகில் உள்ள அனைத்து திரைப்பட கலைஞர்களுக்கு மிகப் பெரிய கெளரமாகவும், கனவாகவும். ஆஸ்கார் விருது உள்ளது. உலகில் உள்ள கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. ஆஸ்கார் விருது என்று அழைக்கப்பட பல காரணங்கள் உண்டு. இந்த விருது முதன் முதலில் லாஸ் ஏஞ்சலின் ஜார்ஜ் ஸ்டேன்லி என்பவரால் முதன் முதலில் வழங்கப்பட்டது. 1929 முதல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருதுகள் ,ஆரம்ப காலத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்டது. 2 ஆம் உலகப்போரின் போது உலோகத் தட்டுப்பாட்டின் காரணமாக வர்ணம் பூசப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்டது. பின்னர் விருதுகளின் உருவத்தை மாற்றியமைத்து, மூன்றரை கிலோ எடையுள்ளதாக, 2016 ஆம் ஆண்டு முதல் வெண்கலத்தால் செய்யப்பட்டு 24 காரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டு, நியூயார்க் நகரில் தயாரிக்கப்படுகிறது. வருடத்திற்கு 60 விருதுகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆஸ்கார் விருது தயாரிக்க சுமார் 6 மாத காலம் ஆவதாக கூறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழா10 நாள்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் தைப்பூச விழா என்பதால் பக்தர்களின் வருகை வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக இருந்தது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கோயில் விழாவுக்குத் தேவையான நன்கொடை வழங்கி கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச விழாவில்கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை அடுத்து சினிமா பிரபலங்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.நடிகர்கள் சந்தானம், கெளதம் கார்த்திக், விதார்த், பாக்யராஜ், பூர்ணிமா, கூல் சுரேஷ், சமந்தா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நடிகை சமந்தா,பழநிக்கு வருகை தந்து படிப்பாதை வழியாக 600 படிகளில் சூடம் ஏற்றி மலைக்கோயில் வழிபாடு செய்தார். அவருடன்96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் சமந்தாவின் உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சம்ந்தா, உடல்நலக் குறைவால் பாதிக்கபட்டு, தற்போது கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனைகளோடும் மீண்டு வந்ததாகவும் மேலும் முழுமையாக உடல் நலம் பெற வேண்டி வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகப் பழநிக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.தன் படங்கள் மூலம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடந்தது.நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார் நடிகர் விஜய்.அதனாலேயே அவருடைய படங்கள் வெளிநாட்டிலும் எக்கச்சக்கமாக பிசினஸ் ஆகி வருகிறது.இந்த நம்பிக்கை கொஞ்ச காலமாகவே ஆட்டம் கண்டுள்ளது.ரிட்டயர்மென்ட் ஆகிவிடுவார்கள் என்று நினைத்த உச்ச நட்சத்திரங்கள்கமல்,ரஜினிஎல்லாம் தற்போது போட்டிக்கு நாங்க ரெடி என்ற ரீதியில் களமிறங்கியுள்ளனர்.இதனால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வாரிசு படத்துடன் மோதி தன் பவரை நிரூபித்த அஜித்தும் ஏகே62 மூலம் அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். அதேபோன்று சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களும் தங்கள் கைவசம் வெயிட்டான திரைப்படங்களை வைத்திருக்கின்றனர்.எத்தனை போட்டி வந்தாலும் அவற்றையெல்லாம் அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் மூலம் உலக அளவில் ஹிட் கொடுக்க வேண்டும்.இப்படி அவர் ஒரு பிளான் போட்டு வைத்திருக்கும் நிலையில் போட்டிக்கு வந்துள்ள இந்த ஹீரோக்களால் அவர் கடும் யோசனையில் இருக்கிறாராம்..
இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வரும் ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீட்டு போட்டோக்கள்.தெலுங்கு நடிகரான பிரபாஸ் ஆரம்பத்தில் எத்தனையோ வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், பாகுபலி திரைப்படம் தான் உலக அளவில்பிரபலம் அடைந்து,அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது பிரபலம் அடைந்தார். அவருக்கு தமிழ் உட்பட அனைத்து மொழியிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் எதிர்பார்த்தஅளவு வெற்றி பெறவில்லை. அதைதொடர்ந்து தற்போது ஆதி புருஷ்திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்இப்படத்தில் பிரபாஸ்ராமனாகநடித்திருக்கிறார்.அவர் சலார் உள்ளிட்டதிரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில்இவரின் ஆடம்பரவாழ்க்கை பற்றியதகவல்கள் வெளிவந்துள்ளது..அரண்மனை போன்ற வீடு, நீச்சல் குளம், தோட்டம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார். அதில் அவருடைய வீட்டின் மதிப்பு மட்டுமே60 கோடியை தாண்டுமாம். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுக்காகவே இவர் இரண்டு கோடி வரை செலவழித்து இருக்கிறார்.84 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு ஒரு பண்ணை வீடும் இருக்கிறது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் ஏரியாவில் ,அவருக்கு மிகவும் பிடித்த மாதிரியாக தன்னுடைய பண்ணை வீட்டை உருவாக்கி இருக்கிறார்.இயற்கைஅழகுடன் இருக்கும்அந்த வீட்டில்தான் அவர் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தங்குவாராம்.
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆரம்ப காலகட்டத்தில் இவரின் நடிப்பை பலரும் விமர்சனம் செய்தாலும் அதன் பிறகு பல வித்தியாசமான கதைகளை நடித்து ரசிகர் கூட்டத்தை சம்பாரித்தார்.தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து ரூ. 186 கோடி. இவர் படத்திற்கு ரூ. 20 முதல் 25 கோடிவரை சம்பளம் வாங்குகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.நடிகர் சூர்யாவுக்கு சென்னை தியாகராய நகரில் பிரம்மாண்ட வீடு இருக்கிறது.
எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து தனது நடிப்பு திறமையை மட்டுமே முதலீடாக வைத்து, எல்லோருக்கும் திறமையை நிரூபித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்விஜய் சேதுபதி . தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி அவர் ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.ஷாருக் கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தில் அவர் வில்லனாக தற்போது நடித்து , ஹிந்தி படம் என்பதால் 21 கோடி சம்பளமாக பெறுகிறாராம். தமிழ் படங்களில் சுமார் 8 - 10 கோடி சம்பளமாக வாங்கி வந்தார் விஜய் சேதுபதி .சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் வைத்து இருக்கிறார். சென்னை சேத்துப்பட்டில் அவர் புது வீடு சில வருடங்களுக்கு முன்பு தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வளசரவாக்கம் பகுதியிலும் அவருக்கு வீடு இருக்கிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவருக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.
இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில்,அஜித் அந்த படத்தை நிராகரித்ததற்கான காரணம் விக்னேஷ் சிவனின் ஆட்டிட்யூட் சரி இல்லை, கதை பிடிக்கவில்லை என பல காரணங்கள் இணையத்தில் உலாவி வருகிறது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்று தற்போது வரை வெளியாகவில்லை .இந்த படம் பாதியிலேயே டிராப்பானது. அடுத்து விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பெரிய நடிகரின் பட வாய்ப்பு பறிபோய் உள்ளதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருமா? விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் கடினம். காமெடி படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன், இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம். அதாவது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டு. வருகிறாராம் .அஜித்தின்" ஏகே62" படத்திற்கு முன்னதாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் விக்னேஷ் சிவன் உள்ளாராம்.. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.கோலிவுட் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும், நயன்தாராவை வைத்து படம் இயக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில், விக்னேஷ் சிவன் உள்ளார். மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம்.
இரண்டு வாரங்கள் முன்பு வெளியான மோகன்லாலின் புதிய படம் அலோன் முதல் நாளில்10 லட்சங்கள் வசூலித்து, மோகன்லால் படங்களிலேயே அடிமட்ட வசூலைப் பெற்ற படமான போது, 1995 இல் வெளியான மோன்லாலின் ஸ்படிகம் திரைப்படத்தை 28 வருடங்களுக்குமுன் வெளியான ஸ்படிகம் மறுவெளியீடு செய்யப்பட்ட அன்று, அதிகாலை ரசிகர்கள் காட்சி, முன்பதிவில்27 லட்ச ரூபாய் வசூல் என்று அமர்களப்படுத்தியது.. ஸ்படிகத்தில் என்ன ஸ்பெஷல்?இயக்குனர் பத்ரன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மம்முட்டியை வைத்து ஐயர் தி கிரேட் படத்தையும், மோகன்லாலை வைத்து அங்கிள் பன் படத்தையும் எடுத்தார். இதில் மம்முட்டி படம் ஹிட் அடிக்க, காமெடிப் படமான அங்கிள் பன் பாக்ஸ் ஆபிஸில் நொண்டியடித்தது. அதையடுத்து 1995 இல் ஸ்படிகம் படத்தை இயக்கினார். கண்டிப்பான கணக்கு வாத்தியார் சாக்கோ மாஸ்டரின் மகன் தாமஸ் சாக்கோவுக்கு கணக்கைவிட அறிவியலில் ஆர்வம், மகனின் ஆர்வத்தை மதிக்காமல் பூமியே கணக்கில்தான் சுத்துது என்று மற்ற மாணவர்கள் முன்பு மகனை அவமானப்படுத்த, அந்த டார்ச்சரில் மகன் தலைதிரிந்து ரவுடியாகிறான். விஞ்ஞானியாகும் புத்தி உள்ளவன் கல்குவாரி லாரி டிரைவராகிறான். அப்பனும், மகனும் பரஸ்பர எதிரியாகிறார்கள். மோகன்லாலுக்கு அப்படி அமைந்த படம்தான் ஸ்படிகம். சுருட்டிவிட்ட சட்டைக் கை, ரேபான் குளிர் கண்ணாடி, வெள்ளை வேட்டி, அதை எதிராளி முன் தூக்கிக்கட்டி தொடையை தடவும் மேனரிசம் என்று ஆடு தோமா கதாபாத்திரத்தை மலையாள சினிமாவின் அழியாத கதாபாத்திரமாக்கினார்.மாஸுக்கு மாஸ் கிளாஸுக்கு கிளாஸ் என்று கலந்துகட்டி அடித்த ஸ்படிகத்திடம் மலையாளிகள் உலகம் இன்றும் மயங்கிப் போய்தான் கிடக்கிறது.அப்படி சாகாவரம் பெற்ற கதாபாத்திரமான ஆடு தோமாதான் ஸ்படிகத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன். அதனைத்தான் மலையாள ரசிகர்கள் இன்று திரையரங்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் தமிழில் யுத்தம் என்று'டப்' செய்யப்பட்டு வெளியான போது யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு சுந்தர் சி. ஸ்படிகத்தை வீராப்பு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து நடித்தார். ஸ்படிகத்தின் எந்தவொரு நேர்மறை அம்சமும் இல்லாத மோசமான ரீமேக்காக வீராப்பு எஞ்சியது. ஸ்படிகத்தை மலையாளத்தில் பார்ப்பதுதான் அட்ராக்ஷன்..
பழம்பெரும் பின்னணி பாடகியான வாணி ஜெயராம்தனது78 , ஆம்வயதில் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வாணி ஜெயராம் உயிரிழந்ததாக பிற்பகல்1.35 மணியளவில் அறிவிக்கப்பட்டது. வாணி ஜெயராமின் மறைவை அடுத்து திரையுலகத்தினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, பெங்காளி என பல இந்திய மொழிகளில் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக கொடிக்கட்டி பறந்தவர் வாணி ஜெயராம்.கர்நாடக இசையை கடலூர். ஸ்ரீனிவாச ஐயங்கார், டிஆர் பாலசுப்ர மணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கற்று தேர்ந்தார். 8 வயதில் அகில இந்திய வானொலியில் முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார் வாணி ஜெயராம்.சென்னை ராணி மேரி கல்லுாரியில் படித்து, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். 1967ல் ஐதராபாத் கிளைக்கு மாறினார்.1969ல் ஜெயராமை திருமணம் செய்த பின் ,மனைவியின் இசை புலமையை அறிந்த ஜெயராம், அவரை உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் ஹிந்துஸ்தானி இசை பயில வைத்தார். பின் வங்கி பணியில் இருந்து விலகிய வாணி ஜெயராம், தும்னி, காஜல், பஜன் இசை நுணுக்கங்களை முழுமையாக கற்றார். 1969ல் முதல் இசை நிகழ்ச்சியை மேடையில் நிகழ்த்தினார்.1971ல் ‘குட்டி படத்தில் 'போலே ரே பப்பி ஹரா' பாடலை பாடினார். பத்ம பூஷண் 2023, மூன்று தேசிய விருது (தமிழில் அபூர்வராகங்கள் படத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள்... 1975, தெலுங்கில் சங்கராபரணம் படத்தில் மானஸ ஸஞ்சரரே...1980, ஸ்வாதிகிரணம் படத்தில் ஆலோகயேஸ்ரீ பாலகிருஷ்ணம்.1991) நான்கு மாநில அரசு விருது(தமிழகம். ஆந்திரா, குஜராத், ஒடிசா),கலைமாமணி விருது,மூன்று பிலிம்பேர் விருது,தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகளைப் பெற்றவர்.