இப்படம் கடந்த ஆண்டே வெளிவரும்எனஎதிர்பார்த்தநிலையில், சிலகாரணங்களால்தள்ளிப்போனது.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி படம் இன்று வெளிவரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது..பண்டிகைக்கு படம் வரவில்லை என்றால் என்ன, நம் படம் வரும் நாள்தான் பண்டிகை என அஜித் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் கூறியுள்ளார். அதே போல் பிப்ரவரி 6ம் தேதி கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு பண்டிகைதான் ..இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் நடந்து வரும் ப்ரீ புக்கிங்கில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இதில்தமிழ்நாட்டில்ரூ. 11 கோடி, வெளிநாடுகளில் ரூ. 4.7 கோடி, கர்நாடகாவில் ரூ. 1.7 கோடி, கேரளாவில் ரூ. 30 லட்சம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் நெட்பிலிக்ஸ் தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.அக்கா என அந்த சீரிஸுக்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் கீர்த்தி மாஸ் ஆன லுக்கில் நடித்து இருக்கிறார்.அதன் டீசர் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார் .
தமிழகம் வந்துள்ள ரஷ்ய நடன கலைஞர்கள் சென்னையில் ,இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர். பின்னர் அவர் இசையமைத்த மீரா படத்தில் வரும்” ஓ பட்டர்பிளை. சொல்ல துடிக்குது மனசு' படத்தில் வரும் “பூவே செம்பூவே.”. இளையராஜா. பாடல்களுக்கு தங்களது நேர்த்தியான ரஷ்யர்கள் நடனத்தால் கவர்ந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்து, "ரஷ்ய நடன கலைஞர்களுக்கு நன்றி. அவர்களின் நடனம் நளினமாக, உணர்வுப்பூர்வமாக, இதயத்தை தொடும் விதமாக வசீகரிக்க கூடியதாக இருந்தது" என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
'விருமாண்டி' படம் மூலம் கமல் இயக்கி, நடித்து பிரபலமானவர் அபிராமி, இவர்அளித்தபேட்டியில் 'விருமாண்டியில் நடித்தசமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கு இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந் தால் நன்றாக இருக்கும் என நினைத்து. கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் தந்தார். கமலிடமும் கடிதம் கேட்ட.தற்கு அவர் சினிமாவை விட்டு நீ போகக்கூடாது, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எனக் கூறி மறுத்தார். விருமாண்டி படம் முடிந்த பின் அந்த கல்லுாரியில் அட்மிஷன் கிடைத்து படிக்க சென்றுவிட்டேன்" என்றார்.
ரஜினி நடித்த “ஜெயிலர்” படம் நெல்சன் இயக்கத்தில் ரூ. 650 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்கும் ரஜினி, அடுத்ததாக 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறார். இப்ப டம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் நிலையில் ரஜினியின் முந்தைய படங்களை விட அதிக நாடுகளில் படத்தை வெளியிடும் நோக்கில் ஆங்கில மொழியிலும் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாக இருந்த படம் ' புறநானுாறு'. சில காரணங்களால் அவர் விலக சிவகார்த்திகேயன் தற்போது அதில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பி டிப்பு நடக்கிறது. புறநானுாறு பட தலைப்பை சூர்யா நிறுவனம் தராததால் வேறு தலைப்பை தேடி வந்தனர். இப்போது 'பராசக்தி'என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒரு அறி விப்பு வீடியோவை உருவாக்கி உள்ளனர். அதற்காக சென்சார் சான்று பெற்ற போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிரபாஸ், அமிதாப் பச்சன். கமல், தீபிகா படுகோனே நடிப் பில் கடந்தாண்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியாகி ரூ.1200 கோடி வசூலித்த படம் 'கல்கி 2898 ஏடி'. இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை நாக் அஷ்வின் துவங்கி உள்ளார். இந்நிலையில் ஜூனில் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்கும் என தயாரிப்பாளர் அஷ்வினி தத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'வீரதீர சூரன்' பகுதி 2. ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.. இப் போது மார்ச்27ல் இப்படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர். கேம் சேஞ்சர் படம் திரைக்கு வந்ததை அடுத்து, 'வேள்பாரி' என்ற நாவலை மையமாக வைத்து, பாகுபலி போன்று, பிரமாண்ட படம் இயக்க தயாராகி வருகிறார். சரித்திர பின்னணி கொண்ட இந்த படம், 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அதையடுத்து, ஹாலிவுட் தரத்தில், 'சயின்ஸ் பிக் ஷன்' படத்தையும் இயக்கப் போகிறார். 'மல்டி ஹீரோ கதையில் உருவாகும் அந்த படம், 'ஸ்பை திரில்லர்' கதையில் உருவாகிறது.
லோகேஷ் கனகராஜ், கமல், விஜய் மற்றும் கார்த்தி நடிப்பில் இயக்கிய படங்கள் தற்போது, ரஜினி நடிப்பில், கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், அடுத்தபடியாக, அஜித் நடிப்பிலும் படம் இயக்க,அஜித்துக்கு ஏற்ற கதையைஉருவாக்கிவருவதாககூறும், லோகேஷ்கனகராஜ்,கைதி 2' படத்தைஇயக்கிமுடித்ததும், அடுத்து, அஜித்தை சந்தித்து கதை சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.