பகவான் கிருஷ்ணன் அவதாரத்தை மையமாக வைத்து ஹர்திக் கஜார் இயக்கத்தில் 'கிருஷ்ணவதாரம்' என்ற படம் ஹிந்தியில் உருவாகிறது. சித்தார்த் குப்தா, சுஷ்மிதா பட், நிவாஷினி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் மே 7ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். அதோடு படத்தின் டிரைலரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
மறைந்த மலையாள நடிகரான திலகன் ,இவரது மகனான ஷம்மி திலகன் மலையாள படங்களில் நடிக்கிறார். இவரது மகன் அபிமன்யுவும் மலையாள படங்களில் நடிப்பவர் இப்போது தமிழில் அறிமுகமாகிறார். 2009ல் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ' ரேணிகுண்டா' படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார்."90 சதவீதம் எனக்கான காட்சிகளை முடித்துவிட்டேன் என்கிறார் அபிமன்யு.
'குற்றம் கடிதல்'2014ல் வெளியாகி தேசிய விருதை பெற்ற படம். இதன் 2ம் பாகம் உருவாகி உள்ளது., தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார், எஸ். ஜே.ஜீவா இயக்க, பாண்டியராஜன், பாலாஜி முருகதாஸ், அப்புக்குட்டி, கீர்த்தி சாவ்லா நடித்துள்ளனர். பள்ளிக்கூட பின்னணியில் திரில்லர் பாணியில் கதை நகர்வதோடு, சமூக அவலங்களையும் பேசுகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. ஜூனில் ரிலீஸ் ஆகலாம்.
இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி கூட்டணியில் 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. கடந்தாண்டு மார்ச்சில் ஆரம்பமாகி பல்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடந்து ,இப்போது நிறைவடைந்துள்ளது. இதை ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதிய படங்களுக்கு இணையாக அஜித்தின் 'அமர்க் களம்', விஜயின் 'சிவகாசி', மாதவனின் ''ரன்' பழைய படங்களும் ரீ ரிலீசாகின்றன. எம்ஜிஆரின் 'மாட்டுக்கார வேலன்' படம் ஏப்.23ல் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்தவாரம் ஏப்., 24 'பிரேக்பாஸ்ட், கமாண்டோவின் லவ் ஸ்டோரி, பேட்டில், பாவக் கூத்து, தீயோர் கூடம்' ஆகிய 5 தமிழ் படங்கள் ரிலீசாகின்றன.
அல்லு அர்ஜு ன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 22வது படத்தின் தலைப்பு 'ராக்கா' .அட்லி இயக்கத்தில், சயின்ஸ் பிக்ஷன் கலந்த சூப்பர் ஹீரோ கதையில் , உருவாகி வெளியாகி உள்ளது.. முதல் பார்வை போஸ்டரில் மனித முகம், மிருக கையுடன் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார்.
மலையாளத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில், உருவாகி தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியாக உள்ள படம் 'பள்ளிச்சட்டம்பி' . டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். சித்திரை விஷூவை முன்னிட்டு படத்தை வெளியிட்டுள்ளனர்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராகவும்தயாரிப்பாளராகவும்இருக்கிறார்.அவர்இதுவரைதயாரித்த 9 படங்களில் ' கனா, நெஞ்சமுண்டுநேர்மையுண்டு, டான், கொட்டுக்காளி,ஹவுஸ்மேட்,தாய்கிழவி'ஆகியபடங்களில்,புதுமுகஇயக்குனர்களைஅறிமுகப்படுத்தியிருந்தார். தனது 10வது தயாரிப்பாக அம்மா முத்து சூர்யா என்ற புது இயக்குனரின் படத்தை அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன். நடிப்பு தாண்டி சில பாடல்கள் பாடியிருப்பவர். கேயுரி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார்., 'நான் நடிக்க துவங்கியது முதல் இது எனது செயல்முறை நோக்கமாக இருந்தது என்கிறார் நித்யா மேனன்.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இப்படத்தில் முக்கிய விஷயமாக இருக்கும் என போஸ்டர் பிரதிபலிக்கிறது ."தாய் கிழவி' பட வெற்றிக்கு பின் ராதிகாவை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. தேவா இசையமைக்க 'காலனி'' படத்தின் முதல் பார்வை போஸ்டர், வீடியோ வெளியாகி உள்ளது.