இயற்கை உரங்கள் (Natural Compost) ஆன மண்புழு உரம், சாண எரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழைஉரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.பயிர்கள் நன்கு செழித்து வளரஅதிக இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான குணப்பசலம், தேங்காய்பால் மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யாஆகியவை பயன் படுத்த வேண்டும்.நம்முன்னோர்கள்ஒவ்வொருபயிருக்கும்இடைவெளியினைநெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்ப வகுத்தனர்.
ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க இயற்கை டானிக் செய்யவாழைப்பழம் தோல்-3 (பொடியாக நறுக்கியது) தயிர் - 1 / 2கப்1தண்ணீர்-12 லிட்டர்காபி தூள் 1ஸ்பூன் டீ தூள் - 3 ஸ்பூன்பொடித்த முட்டை தோல்-5ஒரு பாத்திரத்தில்5 லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதித்ததும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துதண்ணீர் நன்றாக கொதித்ததும், அவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் பொடித்த முட்டை தோல், 1 ஸ்பூன் காபி தூள், 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்துநன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, 1/2 கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கலவையை நன்றாக கலந்த பிறகு ஒரு தட்டை கொண்டு, 1 நாள் காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடிவிடவும். மறுநாள் டானிக்கை வடிகட்டி 1 cup இயற்கை டானிக்கில் 1 லிட்டர் தண்ணீர் கலந்து உங்கள் ரோஸ் செடிக்கு வாரத்திற்கு ஒரு முறை ஊற்றி வர, உங்கள் ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்கும்.மீதி டானிக்கை குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.