25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Aug 06, 2024

மகசூலை அதிகரிக்கும் உரங்கள்

டி.ஏ.பி.உர பயண்பாட்டினை குறைத்து அதே அளவுஊட்டச்சத்தை சூப்பர் பாஸ்பேட்மற்றும்   காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.சூப்பர் பாஸ்பேட் - 50 கிலோ டி.ஏ.பி. உரத்தில்.9 கிலோ தழைச்சத்து மற்றும் 23 கிலோ மணிச்சத்து உள்ளது.இதே அளவு சத்தை கீழ்க்கண்ட மூன்று வழி களில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தி பெறலாம் என மத்திய அரசு அறிவுரை வழங்கி யுள்ளது.3 மூடை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ யூரியா அல்லது 1 மூடை (50 கிலோ) 20-20-0-13 காம்ப்ளக்ஸ் மற்றும் 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் அல்லது 1 மூடை (50 கிலோ) 16: 20: 0: 13 காம்ப்ளக்ஸ் மற்றும் 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்பயன்படுத்தலாம்.காம்ப்ளக்ஸ் உரம்-காம்ப்ளக்ஸ் உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் 13 சதவீதம் கந்தக சத்தும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 12 சதவீதம் கந்தக சத் தும் கிடைக்க செய்வதால் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரித்து டி.ஏ.பி. உர மிட்ட வயலை போன்றே மகசூல் அதிகம் பெற்று பயன்  பெறலாம்.

Jul 30, 2024

இரட்டிப்பு லாபம் பெற ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழ காய்கறி விதைகளை விதைப்பது அதிக மக சூலை தரும். ஆடி மாதத்தில் விதைகளை விதைக் கும் போது விவசாயிகள் பின்வரும் தொழில் நுட்பங் களை கடைபிடித்தால் மகசூல் அதிகரித்து லாபம் இரட்டிப்பாகும்.காய்கறி விதை களை 100 மி.லி. கோமியம் மற்றும் 900 மி.லி. தண்ணீர் கலந்த கலவையில் ஊற வைத்து 1 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் முளைப்பு திறன் கூடுவதுடன் விதைகள் மூலம் பரவும் நோய்களும் கட்டுப் படும். மேலும் 1 கிலோ விதைக்கு டிரைக்கோ டெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் மூலம் பரவும் நோய் கள் கட்டுப்படும். பொதுவாக, கரை, பீர்க்கங் காய், புடலை, பாகல், பூசணி போன்ற கொடி வகை விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தபின் விதைத்தால் விரைவில் முளைக்கும்.நல்ல வீரியமுள்ள விதைகளை தேர்வு செய்வது வீரியமுள்ள நாற்றுக்களை அளிப்பதுடன் தரமான விதை உற்பத்திக்கும் வழிவகுக்கும். வீரியமான நாற்றுக்களை நடவு செய்தால் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதுடன் நடவு வயலில் இடும் உரங்களையும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளும்.விதைப்பதற்கு முன் விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் விதைகளை தங்கள் மாவட்டங்களில் இயங்கிவரும் அரசு விதை பரிசோதனை நிலையங்களில் கொடுத்து தரத்தினை பரிசோதனை செய்து தரமான விதைகளை மட்டும் விதைத்து நிறைவான மகசூல் பெறலாம்.கோடை மாதங்களான சித்திரை முதல் ஆனி வரை (ஏப்ரல்-ஜீலை) மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும். ஆடி மாதம் வந்தவுடன் மழை தொடங்கும் போது, நிலம் ஈரப்பதமாக இருப்பதால்விதைப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. கடும் கோடையில் இறுகிக் காணப்படும் மண் ,ஆனி மாத மிதமான மழையால் இளகத் தொடங்கி விடுகிறது. ஈரப்பதமான மண்ணில் நுண்ணுயிர்கள், மண் புழு, நத்தைகள் உள்ளிட்டவை உருவாகத் தொடங்ககின்றன. இதனால் மண் செழிப்புற்று புற்கள், சிறு செடிகள் முளைக்கத் தொடங்குகின்றன. புதிதாக முளைத்த தாவரங்களை மேயவரும் கால்நடைகளின் கழிவுகளும் மண்ணில் சேர்ந்து உரமாகிறது. இதனால் செழிப்பான மண் உழவுக்குத் தயாராகிறது. இதன் காரணமாகவே ஆடிப்பட்டத்தில் விதைத்தால், பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து, நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பயிர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் தானியங்களே விதைக்கப்படுகின்றன. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

Jul 30, 2024

ஒவ்வொரு வீட்டிலும் இந்த 10  மரங்கள் இருக்க வேண்டும்,

வீட்டுக்கு முன் வேப்ப மரம், பக்கத்தில் ஒரு முருங்கை மரம், வெளியே பப்பாளி மரம் இருக்க வேண்டும். குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் அவசியம், அதன் நிழலின் கீழ் பகுதியில் கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும்.ஒரு நெல்லிச் செடி  இருக்க வேண்டும்,வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்,ஒரு மா மரம் வைக்க வேண்டும் இந்த 10 மரங்கள் வீட்டில் இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்..

Jul 23, 2024

மட்டை அரிசி ( புழுதி புரட்டி ) 

இன்று கேரள மக்களால் அதிகளவு உண்ணப்படும் சற்று  பழுப்புநிற அரிசி. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக பழைய ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஆதியில் விளைந்த நெற்பயிராகும். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. இந்த நெற்பயிரிலே ஆன்டி ஆக்ஸிடென்ட் (anti -oxidant) இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை உரங்களும் அதிகமாக தேவைப்படுவது  இல்லை.நீரில்லாமல் வெறும் மண்ணிலே விளைவதால் இதை நாட்டுப்புறத்தில்' புழுதிபுரட்டி' என்பார்கள். சாதாரண மற்ற நெல்களை விட இந்த நெல் நான்கு மடங்கு விளைச்சலைத் தரும். இதை குறித்து இங்கிலாந்து ஹெல்த் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த போது இந்த நெல் உடலுக்கு நல்லது.தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் இந்த அரிசியினால் நீண்ட நாட்கள் பலமுடன் வாழ்ந்தார்கள் சர்க்கரை நோயும் நெருங்காது என தங்களுடைய ஆய்வில் 1982 இல்  தெரிவித்தனர்.நானும் இந்த அரிசியை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன் இந்த அரிசியில் மொச்சைக் குழம்பு, நாட்டுக் கோழிக் குழம்பு வத்தக் குழம்பு ரசம்,கட்டி எருமைத் தயிரும் - ஊறுகாய்க்கும் ஒரு பொருத்தமானமதிய உணவாக உள்ளது. இதன் சுவையே தனி எவ்வளவு தான் சன்ன அரிசி சாப்பிட்டாலும் இந்த சுவைக்கு ஈடாகாது.இதை செந்நெல்  என்றும் குறிப்பிடுவதுண்டு. கிராமப்புறத்தில் கடுமையாக உழைப்பவர்கள் இந்த அரிசியை விரும்பி சாப்பிடுவதுண்டு.புழுதிபுரட்டி,  பாற்கடுக்கன். பனைமூக்கன் சிறைமீட்டான். மலைமுண்டன்கருஞ்சூரையானைக்கொம்பன்போரிறங்கல், வாள்சுருணை வாலன்,  தென்னரங்கரன், செம்பாளை, கறுத்ததிக்கராதி, கண்டசாலி, திருக்குறுங்கை,  காடைக்கழுத்தன், குடவாழை முத்துவெள்ளை,  திருப்பதிசரம் நாம் தவறவிட்ட சில பாரம்பரிய நெல் ரகங்கள்.

Jul 16, 2024

பாஸ்மதி அரிசி உலகின் சிறந்த அரிசியாக தேர்வு

இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி  அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியைப் பிரபல உணவு வழிகாட்டி வழிகாட்டி நிறுவனமான அட்லஸ்  அறிவித்துள்ளது. சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், 11ஆவது இடம் அளித்திருந்தது.நீளமான தனித்துவமான சுவை வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுக்கலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jul 09, 2024

முதன்முதலாக இந்தியாவில் வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.

காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சி அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது வேளாண் துறையில் நாளுக்கு நாள் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் பல்வேறு புதுப்புது ஆராய்ச்சிகள் ,நவீனத் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படுகிறது.இதன் மூலம் விவசாயிகள் அதிக அளவு விளைச்சல் மற்றும் உற்பத்தி செய்து லாபகரமாக வேளாண் தொழில் செய்து வருகின்றனர்.இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் இந்தியாவில் முதன் முதலாக  வயல்களில் உள்ள  நெற்கதிர்களில் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் பூச்சி தாக்கங்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பணி நடைபெற்றது. இது குறித்து செண்பகராமன் புதூர் விவசாயச் சங்கத் தலைவர் ராக்கிசமுத்து அவர்கள் கூறியதாவதுவேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ள வயல்களில் உழவுப்  பணி ஆரம்பித்த நாள் முதல் சென்சார்கள் மூலமாக மண் பரிசோதனை நடைபெற்றது.‎தற்பொழுது 50 நாள் பயிர் என்று நிலையில் மீண்டும் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலமாக நோய்க் கட்டுப்பாடு   மற்றும் பூச்சி தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம் வேளாண் விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்இதேபோன்று இன்னும் இரண்டு பருவ சீசன்களில் ஆராய்ச்சி செய்து விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் நல்ல முடிவுகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர். தெரிவித்தார்.

Jul 02, 2024

உரத்தால் உயரும் உஷ்ணம்

பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயு தான் புவி வெப்ப மயமாதலை ஏற்படுத்துகிறது என்று எண்ணுகிறோம். ஆனால், இதை விட 300 மடங்கு மோசமானது நைட்ரஸ் ஆக்ஸைட் சமீபத்தில் ஆஸ் திரேலியாவைச் சேர்ந்த சிஸிரோ (csiro) விஞ்ஞான மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.இது ஓசோன் படலத்தை அரிக்கிறது. இந்த ஆபத் தான வாயு நம் வளிமண்டலத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. 1980 களில் இருந்ததை விட தற் போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.விவசாயத்தில் புரட்சி என்று கருதப்பட்டது நைட்ரஜன் உரங்களின் அறிமுகம். பயிர்கள் செழித்து வளர் வதற்கு நைட்ரஜன் அவசிய ம்.பயறு வகை தாவர ங்களில்இயற்கையாகநுண்ணுயிர்கள்  நைட்ரஜனைச் சேமிக்கும். இதைப் பார்த்தே நைட்ரஜன் உரங்கள் உருவாக்கப்ப ட்டன. இதனால் உணவு உற்பத்தி பெருகியது. ஆனால், இந்த உரங்களால் வளிமண்ட லத்தில் நைட்ரஸ் ஆக்ஸைட் பெருகுகிறது. இந்த மாசுபாட்டில் முன்னணியில் இருப்பவை சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், அமெரிக்கா உள் ளிட்ட நாடுகள் தான். அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் முன்னணியி ல் இருந்தன. தற்போது அவை உமிழ்வைக் குறைத்துக் கொண்டன.உலகின் மொத்த நைட்ரஸ் ஆக்ஸைட் உமிழ்வில் நைட்ர ஜன் உரங்கள், விலங்குக் கழிவு உரங்கள் ஆகியவை சேர்ந்து ஏற்படும் உமிழ்வு 74 சதவீதம். இது தவிர கழிவுநீர், தொழிற்சாலைகள், புதைபடிவ எ ரி பொருட்கள் ஆகியவை காரணிகள் ஆகின்றன. உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இந்த வாயு உமிழ்வை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Jun 25, 2024

விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்

1.வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய www.tnagrisnet.gov.in 2.தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்கள் அறிய www.tnau.ac.in 3. தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய www.tnhorticulture.tn.gov.in 4. விதைகள் தொடர்பான தகவல்கள் அறிய www.seedtamilnadu.com 5. வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய www.aed.tn.gov.in 6. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள www.13fpedia.com 7. அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய www.tnocd.net 

Jun 18, 2024

விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க விவசாயத்தை ஒரு தொழில் என்று அழைப்பதே மிகவும் முற்போக்கானது

 விவசாயம் செய்யும் மனித ஆற்றல்தான் நமது நாகரிகத்தின் அடிப்படையே. நாம் வேட்டையாடி உணவு சேர்ப்பவர்களாக இருந்திருந்தால், நாகரிகம் வளர்வதற்கு அனுமதித்து இருக்கமாட்டோம், மண்ணிலிருந்து உணவை எடுக்கும் திறனால்தான் நாம் நகரங்களையும், ஊர்களையும் கட்டமைத்து நிலை பெற்றோம், கலைகளிலும், அறிவியலிலும் வளர்ந்தோம்.கால்வைத்து நடக்கும்மண்ணைத்தான் நாம் அற்புதமானஉணவாகமாற்றுகிறோம்.மண்ணை உணவாக மாற்றுவதே விவசாயம். செடி கொடிகளின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து அதை நமக்கு பலனளிக்கும் விதமாக உபயோகப்படுத்தி இந்த அபாரமான செயல் முறையைமனிதர்கள்கண்டுபிடித்தனர்.தென் அமெரிக்காவின் சில பகுதிகளைத் தவிர, 12 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த பாரம்பரியம் கொண்டது நமது தேசம் மட்டும்தான். தென்னிந்தியாவில், அதிலும் தமிழகத்தில், இதே நிலத்தை நாம் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உழுதிருக்கிறோம். 170, 180 வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் நெசவுத்தொழில் கொடிகட்டிப் பறந்தது. உலகம் முழுவதிற்குமான ஜவுளித் தேவைகளில், 60 சதவீதம் இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐவுளிகளை வாங்குவதற்காக மட்டுமே பெருந்தொகை ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை வந்தடைந்தது என்பதை ஆங்கிலேயர்கள் அறிந்தனர். இதன்பின்பு அவர்கள் இந்தியா வந்தபோது நெசவுத்தொழிலில் எந்திரத்தை புகுத்தினார்கள்.அடுத்த 60 ஆண்டு காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஜவுளிகளின் 98 சதவீதம் குறைந்தது. ஏனென்றால் ஜவுளிகளை ஏற்றுமதி செய்ய அதிகப்படியான வரி விதித்தனர். மிகவும் நேர்த்தியான நெசவுகளைத் தயாரித்த சில இடங்களில், நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி தரிகளை அழித்தனர்.நெசவுத்தொழில் அழிக்கப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர், பெரும்பாலான மக்கள் விவசாயத்திற்கு மாறினார்கள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கொஞ்சம் உணவு உற்பத்தி செய்வதற்காக நிலத்தை உழுதார்கள். இதன்காரணமாக 1947-ல் இந்திய மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இன்று விவசாயம் 60 சதவீதமாக குறைந்துள்ளது. 60 சதவீத மக்கள் மட்டுமே விவசாயத்தில் இருப்பது சரியல்ல. இதை மாற்ற வேண்டும். மாற்ற வேண்டும் என்றால் மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களுக்குச் செல்ல வேண்டாம், ஆனால் அவர்கள் பிற வர்த்தகத்திற்கும் கைவினைக்கும் தொழில்களுக்கும் மாற வேண்டும், இதற்கு உறுதியான, ஒருங்கிணைந்த முயற்சி இன்னும் எடுக்கப்படவில்லை.. பிழைப்பிற்காக செய்த விவசாயத்திலிருந்து பணப்பயிர்களுக்கு மாறியதால் அவர்கள் உடற்கட்டே சுருங்கிவிட்டது. பிழைப்பிற்காக விவசாயம் செய்தபோது, அவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் பல வகையான உணவு உண்டனர்.இன்று தென்னிந்தியாவில் பிரதான உணவு அரிசி, புளி, வெங்காயம், மிளகாய் என்றாகி விட்டது. இதை வைத்தே ருசியாக சமைப்பது எப்படி என்று அவர்களுக்குத்தெரியும், அதனால் ரசம் சாதமே போதும் என்றாகிவிட்டது. வடக்கில் கோதுமையும், மிளகாயும், வெங்காயமும் இருந்தால் போதும் என்றாகி விட்டது. இதனால் ஊட்டச்சத்தில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது நாம் கவனிக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை, ஏனென்றால், வளர்ச்சி குன்றிய ஒரு மனித குலத்தை நாம் உருவாக்குகிறோம்.இந்த தேசத்தின் பெருவாரியான மக்கள் தங்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் சரியாக சாப்பிடாமல் வளர்ச்சி குன்றியவர்களாய் வளர்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர்களால் ஈடுகட்ட முடியாது. உடல் மற்றும் மூளையின் வளர்ச்சி அந்த கட்டத்தில் நிறைவடைந்திருக்கும்.விவசாயத்தை ஒருங்கிணைக்க நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, தொழில் நுட்பத்தை விவசாய முறைக்குள் எடுத்துவர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார லாபத்திற்கு இது பெரிதாகவேண்டும். தற்போது ஒரு தனிமனிதர் வைத்திருக்கும் சராசரி நிலத்தைப் பார்த்தால், அது 1 முதல் 2.5 ஏக்கராக இருக்கிறது. இதை வைத்து லாபகரமான எதையும் செய்ய முடியாது.இவ்வளவு சிறிய நிலத்தை வைத்து மகத்துவமான எதையும் செய்ய முடியாது. எனவே விவசாயிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கும் விவசாயி உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மற்றும் தேவையான இன்னும் பல விஷயங்களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். பயிர் செய்யவும், நீர்ப்பாசனத்திற்கும், விளைபொருளை சந்தைப்படுத்தவும் அளவு பெரிதாக இருப்பதுஅவசியம்.இல்லாவிட்டால்விளைபொருளின்அளவும்குறைவாகஇருப்பதால்இதற்குவேறுதீர்வேகிடையாது.சிலதொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், ஐந்து முதல் ஆறு வருட காலத்தில் வருமானத்தை நம்மால் சில மடங்காக பெருக்க முடியும்.நீர்ப்பாசனத்தை ஒருங்கிணைப்பது இதற்கு மிகவும் முக்கியம், அதோடு நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதும், விவசாய நிலங்கள் கால்நடைகளை மீண்டும் எடுத்து வருவதும் அவசியம், ஒரு டிராக்டர் நிலத்தை உழுதிட மட்டுமே செய்யும். அதனால் நிலத்திற்கு உரம் தர இயலாது. உரத்திற்கு கால்நடைகள் தேவை. வருங்காலத்தில் கால்நடைகள் இல்லாவிட்டால் விவசாயமே செய்யமுடியாதநிலைவந்துவிடும்.இதுமிகப்பெரியதேசம், வேற்றுமைகள்நிறைந்ததேசம்.எனவேமாற்றம்எதுவாயினும், நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும், அது எதிர்ப்பும் இடர்ப்பாடும் இல்லாமல் நடக்கமுடியாது. ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்திற்கும் போராட்டம் ஏற்படுகிறது. ஆனால் இதை நாம் இப்போது செய்யாவிட்டால், இந்தியாவில் விவசாயமே அழியும் ஆபத்தில் இருக்கிறது. உங்கள் குழந்தைகள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமென நீங்கள் விரும்புறீர்களா? என விவசாயிகளிடம் கேளுங்கள்.அதில்விரும்புகிறேன்என்று 2 முதல் 5 சதவீதபதில்தான்வரும்.இதுநாட்டிற்குநல்லதல்ல, விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்கவேண்டும்.

Jun 11, 2024

இந்தியாவில் அதிகமாக விளையும் பயிர் நெல்

இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் நெல். அரிசி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இந்த நாடு பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை உற்பத்தி செய்து, அரிசி ஏற்றுமதியாளராக உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் மாநிலம் மேற்கு வங்கம் ஆகும், ஏனெனில் இந்த மாநிலம் அதிக அளவு மழையைப் பெறுகிறது.நாட்டின் பெரிய அரிசி உற்பத்திப் பகுதி, முன்னுரிமை மண் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றின் காரணமாக, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிக அரிசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அரிசி வழங்குகிறது. இந்தியாவில் மாநில வாரியான அரிசி உற்பத்தியை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து அணுகலாம். அரிசி முக்கியமாக மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.2015-2016ல் டன்களில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியின் அடிப்படையில்,  10 இந்திய மாநிலங்கள்: மேற்கு வங்காளம் -இந்தியாவில் அதிக அரிசி உற்பத்தி செய்யும் மாநிலம் மேற்கு வங்கம். அதன் விளை நிலத்தில் கிட்டத்தட்ட பாதி நெல் பயிரிடப்படுகிறது. 2016 நிதியாண்டில், மாநிலம் 5.46 மில்லியன் ஹெக்டேர் சாகுபடி பரப்பில் சுமார் 15.75 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்தது. உத்தரப்பிரதேசம்-உத்தரப்பிரதேசம் அரிசி உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய மாநிலமாகும், இது கிட்டத்தட்ட 5.86 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடியின் கீழ் சுமார் 12.5 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்கிறது. பஞ்சாப்-நாட்டின் மூன்றாவது பெரிய அரிசி உற்பத்தி செய்யும் மாநிலம் பஞ்சாப் ஆகும், இது 2015-2016 இல் சுமார் 11.82 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்தது. மாநிலத்தில் நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு 2.97 மில்லியன் ஹெக்டேர்.தமிழ்நாடு       -7.98  மில்லியன் டன்,  2.04 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறதுஆந்திரப் பிரதேசம்  - 7.49 மில்லியன் டன், 2.16  மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில்  நெல் சாகுபடி செய்யப்படுகிறதுபீகார்    -  6.5  மில்லியன் டன்,  3.21 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில்  நெல் சாகுபடி செய்யப்படுகிறதுசத்தீஸ்கர்    -   6.09 மில்லியன் டன், 3.82 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில்  நெல் சாகுபடி செய்யப்படுகிறதுஒடிசா -   5.87  மில்லியன் டன்,  3.94  மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில்  நெல் சாகுபடி செய்யப்படுகிறதுஅசாம் -  5.14 மில்லியன் டன்,  2.46 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில்  நெல் சாகுபடி செய்யப்படுகிறதுஹரியனா -   4.14 மில்லியன் டன்

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News