25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட்டில் துவங்க உள்ளதாக விருதுநகர் மாவட்டகலெக்டர் அறிவிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட்டில் துவங்க உள்ளதாக விருதுநகர் மாவட்டகலெக்டர் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்டில் முதல்வர் கோப்பை போட்டிகள் துவங்க உள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் தடகளம், இறகுபந்து, கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம்,சது ரங்கம், கோ கோ போட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, கபடி, பொது பிரிவில் தடகளம், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்பம், அரசு ஊழியர்கள் பிரிவில் தடகளம், சதுரங்கம், கபடி, வாலிபால் போட்டிகளும், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் கடற்கரை வாலிபால், டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை, சைக்கிளிங் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. ஆக.22 முதல் செப்.12 வரை நடக்கும் இந்தமாவட்ட, மண்டல அளவில் தனி நபர், குழு போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம்,2ம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்கவிரும்பும் மாணவர்கள் https://cmtrophy.sdat.in, மூலம் முன்பதிவு செய்து பங்கேற்கலாம். ஆக.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News